<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5808889</id><updated>2011-10-26T08:08:57.684-07:00</updated><category term='test'/><category term='திரைவிமர்சனம்'/><category term='பொது'/><title type='text'>சுவடுகள்</title><subtitle type='html'>தேடியவை. பார்த்தவை. பதித்தவை.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>126</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-7935993614011291337</id><published>2009-01-08T01:09:00.000-08:00</published><updated>2009-01-08T01:12:51.553-08:00</updated><title type='text'>New web site for my blog</title><content type='html'>I have moved to a new web site &lt;a href="http://uncerta.in"&gt;Uncerta.in&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Retaining this site for archival purposes. Thanks for visiting this page and welcome to my new web site!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-7935993614011291337?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/7935993614011291337/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=7935993614011291337' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/7935993614011291337'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/7935993614011291337'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2009/01/new-web-site-for-my-blog.html' title='New web site for my blog'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-113134189996613530</id><published>2005-11-06T21:22:00.000-08:00</published><updated>2007-03-31T07:05:02.070-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>ங்கொக்காமக்கா!</title><content type='html'>வீக்கெண்டுன்னு ஒண்ணு இருக்கிறதே நெனப்பில்லாம மூணு வாரமா டப்பா டான்ஸு ஆடிட்டு, ஜடன்லி இந்த வாரக்கடேசி கொஞ்சம் ஜிலோன்னு இருக்கலாம்போல தெரிஞ்சுது. அப்பாலிக்கா பாத்தா எல்லாம் பிரம. வெள்ளிக்கெழம ராத்திரி டிமாண்டே இல்லாத ஆன் டிமாண்டு ஹெச்பிஓல மேட்ரிக்ஸ் மூணாவது பாடாவதி (ஜாரி, பகுதி) பாத்துட்டு நாலு மணிக்கு கட்டய சாச்சா, மூதேவி எட்டு மணிக்கெல்லாம் போனப் போட்டு, குடிமுழுகிப்போச்சுன்னான். ஆகாககாகா! என்னாடா ராசா சேதின்னு கேட்டா ஒரு கஸ்டமருக்கு ஆர்டரு எடுக்க முடியல்லியாம், அடங்கொக்காமக்கா!&lt;br /&gt;&lt;br /&gt;பரமார்த்த குரு கத மாதிரி ஒரு ஆர்டரு சரி பண்ண ஒம்பதாயிரம் பேரு. பல்லு வெளக்கியும் வெளக்காமயும், கொட்டாவி விட்டுகிட்டும், கொளம்பி குடிச்சிக்கிட்டும் ஒவ்வொர்த்தனா கான்பரன்சுல தூக்கத்தோட வந்து துக்கம் வெசாரிக்கிரானுவ. அவனவனுக்கும் சோகக்கத சொல்லி முடிக்கறதுக்கே மதியமாயிப்போச்சு. இதுக்குப் பேரு வேற வார் ரூமாமா! அடங்கொக்காமக்கா!&lt;br /&gt;&lt;br /&gt;தெண்டத்துக்கு லாங் டிஸ்டன்ஸ் கால்ல நாலு மணிநேரம் உக்காந்துட்டு, சாப்பாட்டுக்கு நம்மூரு ஓட்டல் போனா, தட்டுக்கும் சப்பாத்திக்கும் வித்தியாசமே தெரியல, ரெண்டும் ஒக்கே திக்னெஸ்ல கிண்ணுன்னு நிக்கிது. அடேய்! சப்பாத்திடா அது! செய்ய வராட்டி வராட்டி செய்யாதீங்கடா! ஒரே நல்ல சமாசாரம், அந்த ஓட்டல்ல ஒரு ஜூப்பரு டிக்கிட்டு வேல பண்ணிக்கினு க்குது. ஆனா அது இந்திக்கார டிக்கிட்டு, நமக்கு ஒர்க் அவுட்டு ஆவாதே! அடங்கொக்காமக்கா!&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாடு முடிஞ்சு வீட்டுக்கு வந்தா இன்னா பண்றதுன்னே தெரியல. ஒரே எம்ப்டியா க்குது. எம்டிவில திருப்பி திருப்பி அதே பாட்டு. ஹெச்பிஓல அதே ஆன் டிமாண்டு லிஸ்ட்டு. பெஜ்ஜாரா இருந்துச்சு. என்னா எளவுடா இதுன்னு...இருந்தாப்ல இருந்து எதுவுமே பண்ண வேணாம்னு தோணும்ல, புஸ்தகம் படிக்க வேணாம், படம் பாக்கவேணாம், போன் பேசவேணாம், பிகரு வெட்டவேண்டாம்...அந்த மேரி. இப்பிடி இருக்க சொல்ல இன்னாத்த பண்ணுறது? அடங்கொக்காமக்கா! &lt;br /&gt;&lt;br /&gt;அப்பிடியே ரெண்டு நாளு. இன்னிக்கி ஷாப்ரைட்டு ஜூப்பர்மார்க்கிட்டுக்குப் போயி சாப்பாட்டுக்கு உசார் பண்ணிகிட்டு கை நெறைய கவர் வெச்சிக்கினு அபார்ட்மெண்டு கேட்டு உள்ளார நொழஞ்சா எதுத்தாப்புல அந்தப் பொண்ணு. நா போன மாசம் என் தோஸ்து வீட்ல (ரெண்டு மாடி கீழ க்குது) இருக்க சொல்ல எதுத்த வீட்ல இருந்துச்சு. கவுரின்னு பேரு. இந்திக்கார டிக்கிட்டுதான். ஒரு நா அவுங்க வீட்ல பார்ட்டின்னு சொல்லி கேக்கு எடுத்தாந்து &lt;br /&gt;குடுத்துது. நல்ல கேக்கு. அதுக்கப்புறமா இன்னிக்கி தான் பாக்குறேன். அப்பிடியே பாத்தும் பாக்காம நேரா போயி லிஃப்டு பட்டன் அழுத்த சொல்லதான் ஒறைக்குது. அடேய்! இன்னாடா இப்பிடி ஆயிட்ட! அடங்கொக்காமக்கா! &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மார்க்கமாத்தான் போய்ட்டு இருக்கு. இப்பிடீ இருக்க சொல்ல தான் இன்னிக்கு மெயில் பொட்டில ஒரு மெயிலு. தோஸ்து பாஸ்டன் பாலாஜிகிட்ட இருந்து. அடேடேடே! புளோக்கு க்குதுல்ல! நாலு வார்த்த எய்துனா இன்னா? அப்பிடின்னு தோணிச்சா, செரி, செய்ஞ்சிட்டேன். மத்தபடி, என் வலப்பூவுல என்னிக்கி உருப்படியா எழுதி இருக்கேன்? ஆகா! இவ்ளோ நேரம் இத்த வேற படிச்சிகினு இருந்தீங்களா? அடங்கொக்காமக்கா!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-113134189996613530?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/113134189996613530/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=113134189996613530' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/113134189996613530'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/113134189996613530'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2005/11/blog-post.html' title='ங்கொக்காமக்கா!'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-112770921021674159</id><published>2005-09-25T21:26:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.071-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>பிலடெல்பியா தெருக்கள்</title><content type='html'>ஒரு கையில் டிராபிகானாவும் இன்னொரு கையில் சைனா சிகரெட் லைட்டரும் வைத்துக்கொண்டு பால்கனிக்கு வந்து சிம்மாசனத்தில் உட்காரும்போது சட்டென்று தோன்றியதே, அப்போதே எழுதியிருந்தால் சுவாரசியமான விஷயங்கள் சிலவற்றைச் சொல்லியிருக்கக்கூடும். ஆனாலும் பரவாயில்லை. இப்போதாவது எழுதித் தொலையலாம். தமிழ் மறந்த பாவம் செய்யுமளவுக்கு இன்னும் கெட்டுப்போய்விடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எதற்கு கையில் சிகரெட் லைட்டர் என்று கேட்கும், என் புனிதத்தன்மை தெரிந்த மக்களுக்கு, "ஸ்டைலுமா!". எதற்கு டிராபிகானா என்றெல்லாம் கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். அப்பாடா! கற்றதும் பெற்றதும் சுஜாதா மாதிரியே ஒரு மேட்டரும் இல்லாமல் நான்கைந்து வரி பினாத்தியாகிவிட்டது. இனி அவரைப்போலவே ஒரு எபிசோடு முழுவதும் ஜல்லியடிக்க முயற்சி செய்தால் தர்ம அடி விழும் என்பது தெரிந்தே செய்வது கொழுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;பிலி எனப்படும் பிலடெல்பியாவில் கால் வைத்து ஒரு மாதமாகிவிட்டது. பெயரில்லாத புரட்சிக்காரருக்குத் தொலைபேசியது தவிர தமிழ் வலைப்பதிவுலகத்துடன் எந்தவொரு ஒட்டோ உறவோ இல்லாமல் முழுக்க முழுக்க வெரைசான்வாசியாகக் காலங்கழித்து, இன்றொரு உத்வேகத்தில் தமிழடித்துக்கொண்டிருக்கிறேன். 'அமெரிக்கா போகணுமா?' என்று யாரோ ஒரு புண்ணியவான் எழுதிய புத்தகத்தை மட்டுமே படித்து அமெரிக்காவுக்கு வெற்றிகரமாக வந்தாகிவிட்ட நிலையில் (வலைப்பதிவு விளம்பர உலகம் மிகவும் நூதனமான உத்திகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறது), ஒரு பத்துப்பதினைந்து நாட்கள் சோற்றுக்குச் சிங்கியடித்ததில் ரைசின் ப்ரான், சப்வே வெஜ்ஜி பாட்டி, உறையவைத்த உணவுப்பண்டங்கள் என்று சகலமும் தோழமையாகியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இட்லிசாம்பார், இடியாப்பத்திலிருந்து பருப்பு வடை, பரோட்டா வரை எல்லாம் உறைந்த நிலையில் குளிர்பதனப்பெட்டியில் குடியேறியிருக்கிறது. கூடவே பஞ்சபுட்டு கடலகறி, சுகியன், சம்மந்திப்பொடி என்று மலையாளத்துச் சாமான்களும் ஷ்ரிம்பு தோரன், ப்ரான் ஊறுகாய், சிக்கன் மசாலா, பீ·ப் பாட்டி என்று நடப்பன, ஊர்வன, பறப்பன எல்லாம் சமபந்தி போஜனத்துக்காக ஐக்கியமாகியிருக்கின்றன. அம்மா, அப்பா தவிர மற்ற அனைத்தும் உறையவைத்து கிடைக்கின்றன என்பதை அமெரிக்கா புத்தகத்தின் அடுத்த பதிப்பில் சேர்க்கச்சொல்லவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அடாடா! சொல்ல மறந்துவிட்டேனே! மேற்சொன்ன வீச்ச வாடைகளுக்கெல்லாம் என் அறைத்தோழர்கள் பொறுப்பு. பிரவுன் ஒயின், பட்வைஸர், சிங்கிள் மால்ட் என்று மணக்கும் வஸ்துக்களுக்கும், மார்ல்பரோ இன்னபிற புகையும் வஸ்துக்களுக்கும்கூட. ஒன்பதாவது மாடியின் ஒய்யாரமான பால்கனியில் ஒரு சிம்மாசனமும் சிலபல அடியாசனங்களும் பின்மாலைப்பொழுதுகளில் நிரம்பும் தருணங்களில் கையில் லெமனேடு வைத்துக்கொண்டு சியர்ஸ் சொன்ன காமெடியெல்லாம் ஆயிற்று. மரியுவானா, சூஷி, ஆம்ஸ்டெர்டாம், லெபனீஸ் பெண்கள், ஜென்டில்மேன்ஸ் கிளப் என்று சுவாரசியமான விஷயங்கள் பேசும்போது சுருதி இல்லாமல் எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;அர்த்தராத்திரி நான்கு மணிக்கு (எங்கள் ஊர்ப்பக்கம் விடியற்காலை என்றும் சொல்வதுண்டு) இர்ரிவர்சிபிள் படத்தில் மோனிகா பெல்லூக்சி பற்றிப் பேசுவது கொஞ்சம் எக்குத்தப்பு என்று நீங்கள் கருதினால் நான் என்ன செய்யமுடியும்? வில்லங்கமான சமாசாரங்கள் போக மீதி நேரத்தில் முழுக்க முழுக்க பெல் அட்லாண்டிக் டவர்ஸ் எனப்படும் எங்கள் அலுவலகக் கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில் (இன்னொரு ஒன்பது!) பழியாகக் கிடப்பது. கடன்காரன் ஒரே நேரத்தில் ஒன்பது (இன்னொரு ஒன்பது!) தொலைபேசியில் பேசச் சொல்லும்போது ஒரு சூஷி மீன் எடுத்து அவனது வாயில் திணிக்கலாம் போல இருந்தாலும், வேலை என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பிலடெல்பியா மிக மிக அழகான நகரம். இரு பக்கக் கட்டுரை வரைக பாணியில் நான் சொல்லியிருந்தாலும், நிஜமாகவே மிக அழகான நகரம். இந்த நகரத்தைப் பற்றிக் கண்டிப்பாக நிறைய எழுதவேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-112770921021674159?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/112770921021674159/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=112770921021674159' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/112770921021674159'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/112770921021674159'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2005/09/blog-post.html' title='பிலடெல்பியா தெருக்கள்'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-112494689742466786</id><published>2005-08-24T22:12:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.072-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='test'/><title type='text'>பிலடெல்பியா போன பில்லக்கா பையன்</title><content type='html'>வெட்டியா ஊர் பொறுக்கிக்கிட்டு இருந்தானாம் ஒரு பய. திடீர்னு ஒரு நா அவன் கிட்ட போயி "அடேஏஏய் வெட்டி ராசு! மெட்ராஸில பொறுக்குனது போதும், நீ போயி அம்பேரிக்காவுல பொறுக்குன்னு சொல்லி தெர்த்தி விட்டாய்ங்க. அதுனால, பய இப்ப ரெண்டு நாளா பிலடெல்பியாவுல திரிஞ்சிகிட்டு இருக்காம்னு ஊர்ல நாட்ல சொல்லிக்கிறாய்ங்க. முடிஞ்சா அவனுக்கு &lt;a href="mailto:suvadushankar@yahoo.com"&gt;சொவடு சங்கரு அட்டு யாகூ டாட்டு காமு&lt;/a&gt;ல ஒரு கொர்லு வுட்டுப் பாருங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-112494689742466786?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/112494689742466786/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=112494689742466786' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/112494689742466786'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/112494689742466786'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2005/08/blog-post.html' title='பிலடெல்பியா போன பில்லக்கா பையன்'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-112405511415317231</id><published>2005-08-14T14:31:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.073-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைவிமர்சனம்'/><title type='text'>Mangal Pandey - Falling</title><content type='html'>மொழி அவ்வளவாகப் புரியாது. தெரிந்த நான்கைந்து சொற்பிரயோகங்கள் மூலம் குத்துமதிப்பாக வசனங்களைப் புரிந்துகொண்டுதான் இந்திப் படங்கள் பார்ப்பது வழக்கம். இப்பொழுது வருகிற முக்காலே மூன்று வீசம் இந்திப்படங்களுக்கு வசங்கள் புரிந்துகொள்ளலெல்லாம் தேவையேயில்லை என்பதால் இது ஒரு பெரிய பிரச்னையாகத் தெரிவதில்லை (அர்த்தங்கள் 'அவிழ்ந்து'கொண்டு வெளிவருவதால் மொழி ஒரு அவசியமன்று என்பதறிக). ஆனால், மொழி முழுவதுமாகப் புரியாத படங்கள் பற்றிக் கருத்து சொல்வதில்லை என்று வைத்திருந்தேன். இப்படித்தான் 'மொஹப்பத்தேன்' என்று ஒரு படத்தைப் பாஆஆஆர்த்து முடித்தபின் மகாபாரதம் என்று சொல்லப்போய் சில இந்திக்காரப் பையன்கள் என்னை அடிக்கவராத குறை. வசனம் அற்புதமாக இருந்ததாம். நான் கண்டேனா?&lt;br /&gt;&lt;br /&gt;சரி மேட்டருக்கு வருவோம். இன்று மேற்படி படத்தை மெலடி தியேட்டரில் நூறு ரூபாய் டிக்கெட் மட்டுமல்லாது இருபத்தைந்து ரூபாய்க்கு கார்பன்டையாக்சைடு பானமும் வெண்ணையில்லாத பட்டர் பாப்கானும் கட்டாயமாகத் திணிக்கப்பட்ட ஏதோ விசேஷ ஆ·பரில் பார்த்தேனா, எதுவும் எழுதாமற்போக முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;முதலிலேயே சொல்லிவிடுகிறேன். நானெல்லாம் ஆமிர் கானின் கடினமாகச் செத்துப்போன விசிறி. அதனால் அவரைக் குறை சொல்வேனென்று எதிர்பார்க்காதீர்கள். முறுக்கு மீசையும் மிடுக்குத் தோற்றமுமாகத் தலைவர் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். மீசையை முறுக்கும் ஒரு சீனில் தியேட்டரில் விசில் அடிபறக்கிறது. பெயர் போடும்போதே நம்மூர் மக்கள் இரண்டே விஷயங்களுக்குத் தான் மகா ஜவுண்டு விடுகிறார்கள். ஒன்று ஆமீர், இன்னொன்று ரஹ்மான். முன்னவர் ஓக்கே. பின்னவரைக் கட்டி வைத்து உதைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மங்கல் பாண்டே யார்? அவன் செய்தது சிப்பாய்க் கலகமா அல்லது முதல் இந்திய சுதந்தரப்போரா? விகடனில் இதைப்பற்றி ஏற்கனவே ஞானி ஓ போட்டாயிற்று. ஞானியின் கூற்றுப்படி சும்மா 'பாங்க்' குடித்துவிட்டு ஒரு கிக்கில் மங்கல் சவுண்டு விட்டதுதான் சிப்பாய்க்கலகம் என்று ஒரு கருத்து தயாராகிவிட்டது (ஞானி உதைக்கப்போகிறார். அவர் பன்றி(?)க் கொழுப்பு கார்ட்ரிட்ஜ் பற்றியெல்லாம் சொல்லித்தான் இருக்கிறார். இருந்தாலும் இப்போதெல்லாம் கருத்துக்களை இப்படிச் சுருக்கிச் சொன்னால்தான் summarizing). அதற்கு அவர் கூறும் ராணுவ ஆவணங்கள் எவை என்பது தெரியாததாலும் அவை பிரிட்டிஷாரால் எழுதப்பட்டிருக்கும் என்பதாலும் அதை அப்படியே வேதவாக்காக எடுத்துக்கொள்ள முடியுமா தெரியவில்லை. படத்தைப் பார்த்தே இந்தக் கேள்விக்குப் பதில் பெறலாம் என்று நினைத்தால் படத்திலும் இதையே விஸ்தாரமாகக் காட்டிவிட்டு 'பாரடா தேசபத்தி'யென்று சொல்லும்போது குழப்பமே எஞ்சுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின்படி மங்கல் பாண்டே ஒரு சிப்பாய். வெள்ளைக்காரர்களுக்கு மிகவும் விசுவாசமானவன். வெள்ளைக்கார கேப்டனுக்கு தோஸ்தோ தோஸ்து. அவ்வப்போது அவனது கண்முன்னால் இந்தியச் சகோதரன் யாராவது உதைக்கப்பட்டால் மாத்திரம் கொஞ்சம் ·பீலாகிறான். மற்றபடி, அவனுக்கு வெள்ளையர் ஆட்சியில் எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை. வெள்ளைக்காரர்களை எதிர்க்க ஒரே முகாந்திரம் துப்பாக்கிகளுக்கான புதிய கார்ட்ரிட்ஜ் மூலம் வருகிறது. இந்தக் கார்ட்ரிட்ஜ்ஜில் மாட்டுக்கொழுப்பாலான கிரீஸ் தடவப்பட்டிருக்கிறது. இந்தக் கார்ட்ரிட்ஜை வாயில் வைத்துக் கடித்து அதிலிருந்து ரவையை எடுக்கவேண்டும். இது பசுவைத் தெய்வமாக மதிக்கும் அவனது மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது. எனவே அதை எதிர்க்கிறான். இதிலே எங்கே ஐயா தேசபத்தி வந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;கார்ட்ரிட்ஜ்ஜுக்காகச் சண்டையெல்லாம் போட்டுவிட்டுத் திடீரென்று கார்ட்ரிட்ஜ், மாடெல்லாம் சும்மா புருடா, நான் 'ஆஸாதி'க்காகத்தான் போராடுகிறேன், 'ஆஸாதி' வந்துவிட்டால் ஆயிரம் கார்ட்ரிட்ஜ்களைக் கூட நான் கடிக்கத் தயார் என்று வீரவசனம் பேசும்போதுதான் உதைக்கிறது. கார்ட்ரிட்ஜ் பிரச்னை வருவதற்கு முன்னால் எங்கே போனது இந்த சுதந்தர தாகம்? &lt;br /&gt;&lt;br /&gt;சரி, கிடக்கிறது கெரகம், தேசபத்தியை விட்டுவிடுவோம். 'சதி' பெயரில் ஒரு விதவைப்பெண்ணை உடன்கட்டை ஏற்றும் ஒரு கட்டத்தில் மங்கலின் நண்பனான கேப்டன் இதைக் காணச்சகியாமல் வெகுண்டெழுகிறான். அப்போதும்கூட மங்கலுக்கு அது பிரச்னையாகத் தோன்றவில்லை. தயங்குகிறான். கேப்டன் சொல்லித் தான் மங்கலுக்கு உறைக்கிறது. விதவைப் பெண்ணைக் காப்பாற்றப் போன கேப்டன் உயிருக்கு ஆபத்து என்னும்போதுதான் மங்கல் குருதை மேலேறி கத்தியைச் சுழற்றிப் புகுந்து புறப்படுகிறான். ஆக, தேசபத்தியும் கிடையாது, முற்போக்குச் சிந்தனையோ சமுதாய அக்கறையோ கூடக் கிடையாது. அப்படியென்றால் என்ன dash-க்கு மங்கல் பாண்டேவைப் பார்த்து வாய் பிளக்கவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;நான் இதுவரை சொன்னது படம் பார்த்து நான் புரிந்துகொண்டதுதான். சத்தியமாக மங்கல் பாண்டேக்கும் எனக்கும் எந்தவிதப் பூர்வஜென்மப் பகையும் கிடையாது. தேசபத்தியாளர்கள் வெகுண்டெழவேண்டாம். நிஜமாகவே மங்கல் பாண்டே சுதந்தரப் போர் வீரனாக இருப்பின் அவனுக்கு எனது ராயல் சலூட். ஆனால் படத்தின்மூலம் அதெல்லாம் வெளிப்படவே இல்லை என்பதுதான் சோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் மனதில் ஒட்டவே இல்லை. கையை காலை நீட்டிக்கொண்டு, நெட்டி முறித்துக்கொண்டு படத்தைப் பார்த்து முடிக்கும்போது 'லகான்' நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. லகானில் ஆயிரத்தெட்டு பிரச்னை சொல்லலாம். ஆனால், படம் ஓடிய மூன்று மணிநேரத்தில் எங்காவது தொய்வு என்று கண்டதுண்டா? அந்த அம்சத்திலும் இந்தப் படம் கோட்டை விடுகிறது. புதிய உத்திகளோ புதுமாதிரி சீன்களோகூட இல்லை. எல்லாம் cliched காட்சிகள். &lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் ரெண்டு ஹீரோயினிகள். ராணி முகர்ஜி, அமீஷா படேல். ராணி கிழடுதட்டிய முகம். பார்க்கப் பரிதாபமாக இருக்கிறார். வெறும் குரலில் மட்டும்தான் மயில். அமீஷா இன்னும் பாவம். அவர் திரையில் வரும் நேரத்தை நொடிக்கணக்கில் எண்ணிவிடலாம். ராணிக்கும் அ·தே. ராணிக்காவது ஒரு முழுப்பாட்டு. அமீஷாவுக்கு ஒரு பாட்டில் துளியூண்டு மேட்டர் சீனோடு சரி. உச்சபட்ச காமெடியாக மங்கல் சிறையில் மறுநாள் தூக்கிற்காகக் காத்திருக்கும்போது ராணி முகர்ஜி அவரை வந்து பார்க்கிறார். கையில் என்னடாவென்று பார்த்தால் குங்குமச் சிமிழ்! பேக் கிரவுண்டில் மீஜிக் பறக்க நெற்றியில் பொட்டு வைத்து ஆரத்தியெல்லாம் எடுத்தாகிறது. லாஸ்டு நிமிட் கல்யாணமாம்! மனுசனுக்கு ரெண்டு தோசையோ மூணு இட்லியோ எடுத்து வந்திருந்தாலாவது நிம்மதியாகச் சாப்பிட்டுவிட்டு சாவுற காலத்துல என் பெயரை உச்சரித்துக் கொண்டே செத்துப்போயிருப்பான். அதற்கும் மங்கல் கொடுத்துவைத்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல விஷயங்கள் என்று பார்த்தால் செட்டெல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனாலும் இதேபோன்ற கிராமங்களை லகானில் ஏற்கனவே பார்த்துவிட்டதால் புதிதாக ஒன்றுமில்லை. வெள்ளைக்கார கேப்டனாக டோபி ஸ்டீவன்ஸ் நன்றாக நடித்திருக்கிறார். தாந்தியா தோபே, பஹதூர் ஷா, நானா சாஹெப், ஜான்ஸி ராணி லஷ்மி பாய் என்று எட்டாப்பு சரித்திரப் புத்தகத்தில் படித்த பெயர்களெல்லாம் நினைவூட்டுகிறார்கள். ஜான்ஸி ராணி சேப்பு லிப்ஸ்டிக்கோடு 'கும்' மேக்கப்பில் வரும் ஒரு ·ப்ரேம் சூப்பரோ சூப்பர். சிப்பாய்க் கலகம் ஒழுங்காக நடந்திருந்தால் கிழக்கிந்தியக் கம்பெனி என்ன அளவுக்கு உண்டை வாங்கியிருக்கும் என்பதை அழகாக உணரவைக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆமீர் கானுக்கு தீனி குறைவு. கிடைத்த கேப்பில் ஒழுங்காகச் செய்திருக்கிறார். ஆனாலும் லகான், தில் சாஹ்தா ஹே போன்ற படங்களுக்குப் பிறகு இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிற படம் இப்படிச் சாதாரணமாக இருந்திருக்க வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டெல்லாம் சுமார் ரகம், ஒரே மாதிரி. ஆஊவென்றால் அலறிக்கொண்டு வந்துவிடுகிறார்கள். அடிக்கடி ஐந்து ஜந்துக்கள் ஒரு யானை மேலேறி மங்கலு மங்கலு செங்கலு செங்கலு என்று பாடிப் படுத்துகிறார்கள். ரஹ்மானுக்கு என்ன ஆயிற்று? காசு பெயரவில்லையா அல்லது பகலில் வேலை செய்யச் சொன்னார்களா தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அண்டா அண்டாவாகச் சோமபானம் குடிப்பார்கள். விவகாரமான கெட்ட ஆட்டங்கள் பார்த்து ரசிப்பார்கள். விதவைப்பெண்ணை உயிரோடு கொளுத்துவார்கள். ஆனால் மாட்டுக் கொழுப்பு தடவிய கார்ட்ரிட்ஜ் மட்டும் பல்லில் பட்டால் மகாபாவம். இதுதான் அந்தக் காலகட்டத்தின் நிதர்சனம் என்றால் அதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டுவது என்ன என்பது புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நமது வலைப்பதிவாளர்களுக்கு எழுதத் தீனி போடும் விஷயங்கள் சில படத்தில் உள்ளன. அவற்றையும் போகிறபோக்கில் சொல்லி நாளை கமெண்டுப் பொட்டியில் உண்டக்கட்டி வாங்க வழிசெய்துவிடுகிறேன். ஆமீர் கானின் திருமேனியில் சீனுக்கு சீன் பூணூல் பொலிகிறது. தோளில் துண்டு போட்டிருந்தால்கூட துண்டின்மேல்தான் பூணூல் இருக்கிறது. ஆமீர் கான் அவ்வப்போது தெரு கூட்டிப்பெருக்கும் கீழ்சாதிக்காரனை திட்டுகிறார், அடிக்கிறார்.(அடி பின்னுங்க மக்களே!)&lt;br /&gt;&lt;br /&gt;ஆமீர் கானுக்கு இப்படி ஒரு படமா என்று வருத்தப்பட்டு சாயங்காலமே 'தில் சாஹ்தா ஹே' ஒரு ரவுண்டு பார்த்தேன். இப்பொழுது நிம்மதியாகத் தூக்கம் வரும். &lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;சம்மந்தமில்லாத ஒரு குறிப்பு. தனிப்பதிவு எழுதுமளவுக்கு நீளமும் சரக்கும் இல்லாததால் பாப்புலாரிட்டி வால்யூ கருதி (பதினைந்து நிமிடப் புகழ் கருதி என்றும் படிக்கலாம்) இதோ:&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாத்தாவுக்கு வயது ஏறிக்கொண்டே போவதால் இப்போதெல்லாம் கருத்துக்களை விட வயதுதான் அவருக்கு முக்கியமாகத் தெரிகிறது. பாருங்களேன்: "...ழான் பால் ஸார்ட் பற்றி நான் எழுதியதில் பல தவறுகள் இருப்பதாக ஒரு பேராசிரியர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். வழக்கம் போல இது பற்றி வலைப்பதிவுகளிலும் சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருப்பதாக தேசிகன் சொன்னார். பேராசிரியரின் வயதுக்கு (77) மதிப்பளித்து, அவருக்கு மட்டும் பதிலளித்தேன்." இது விகடனிலிருந்து. &lt;br /&gt;&lt;br /&gt;கற்றதும் பெற்றதும் படிக்கும் தாத்தாக்கள் எல்லோரும் இனி சுஜாதாவுக்குக் கடிதம் எழுதலாம். "அடேய்! பக்கெட் சாம்பாரி"ல் ஆரம்பித்து "ராயப்பேட்டை பாலு" கவிதைகள் வரை எது வேண்டுமானாலும் எழுத அனுமதியுண்டு. அவரவர் வயது சீனியாரிட்டிப் படி தனிமடலில் பதிலளிக்கப்படும். அவ்வப்போது சுஜாதா மனம் கவர்ந்த கடிதங்களை எழுதிய புண்ணியவான்கள் பெயரும் ஊரும் பட்டியலிடப்படும் (ஆகா! அது குமுதமாச்சே! அப்பப்ப கன்பியூஸ் ஆயிடுறேன்!).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-112405511415317231?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/112405511415317231/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=112405511415317231' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/112405511415317231'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/112405511415317231'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2005/08/mangal-pandey-falling.html' title='Mangal Pandey - Falling'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-111926463714993791</id><published>2005-06-20T03:48:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.084-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>அமெரிக்கா புத்தகம் வாங்குவது குறித்த மேலதிக விவரங்கள்</title><content type='html'>புத்தகம் தமிழகத்தில் அனைத்து பிரபல புத்தகக்கடைகளிலும் கிடைக்கும் என்று பதிப்பகம் தெரிவிக்கிறது. இணையம் மூலம் பெற விரும்புவோர் காமதேனு.காம் செல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தின் விலை ரூ. 60/-&lt;br /&gt;&lt;br /&gt;பதிப்பக முகவரி:&lt;br /&gt;கிழக்கு பதிப்பகம்,&lt;br /&gt;16, கற்பகாம்பாள் நகர்,&lt;br /&gt;மயிலாப்பூர், சென்னை - 600004.&lt;br /&gt;தொலைபேசி: 52009601/03/04&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தளம்: http://www.kamadenu.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-111926463714993791?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/111926463714993791/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=111926463714993791' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/111926463714993791'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/111926463714993791'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2005/06/blog-post_20.html' title='அமெரிக்கா புத்தகம் வாங்குவது குறித்த மேலதிக விவரங்கள்'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-111909256938682151</id><published>2005-06-18T03:51:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.084-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>என் முதல் நூல் - அமெரிக்கா போகணுமா</title><content type='html'>&lt;img src="http://www.kamadenu.com/img/amerikkapoganuma_b.jpg" width="195" height="297" vspace=8 hspace=15 border=0 align=left&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி:&lt;br /&gt;நேற்று மாலை ஏழு மணிக்கும் இன்னபிற பொதுவான மாலை ஏழு மணிகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதை விளக்கி, மேற்கோள் காட்டிக் குறிப்பு வரைக. &lt;br /&gt;&lt;br /&gt;பதில்:&lt;br /&gt;&lt;br /&gt;பத்ரியிடமிருந்து நேற்று மாலை வந்த தொலைபேசி அழைப்புக்காகக் கொஞ்ச நாளாகவே காத்திருந்தாலும் அது வந்த தருணத்தில் கைகால்கள் பரபரக்க, மூன்று சக்கரத் தேரேறிக் கிழக்குப் பதிப்பகத்திற்கு வாயுவேக மனோவேகமாகப் பறந்து போய் அந்தக் கட்டு புத்தகங்களை வாஞ்சையுடன் நோக்கிய நேற்று மாலை ஏழு மணி என்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு மறக்க முடியாத தருணம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆம் நண்பர்களே! குரங்கு பிடிக்கப் போய் பிள்ளையாராகப் போன கதையாக இத்தனை காலம் வலைப்பதிவுகளில் அடித்துக்கிளப்பிக்கொண்டிருந்துவிட்டு இப்போது நான் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட ஒரு புத்தகம் வந்திருக்கிறது. விளையாட்டு நிஜமாகவே வினையாக, செயலாக உருவெடுத்திருப்பதில் கிறுகிறுத்து அலைந்துகொண்டிருக்கிறேன். 'அமெரிக்கா போகணுமா' என்ற இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் புதிதாக ஏதும் சொல்வதை விட, இந்தப் புத்தகத்திலிருக்கும் முன்னுரையையே இங்கே தருவது உசிதம் என்று கருதுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தின் முன்னுரை:&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே புகுமுன் ஒரு நிமிடம்&lt;br /&gt;&lt;br /&gt;நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை பேர், எத்தனை எத்தனை காரணங்களுக்காக அமெரிக்கா போகின்றனர் என்று பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. படிப்பிற்காக, வேலைக்காக, உயர்கல்விக்காக, பொழுதுபோக்கிற்காக, மருத்துவத் தேவைகளுக்காக, வியாபார நிமித்தமாக, அரசியல் காரணங்களுக்காக, கலை வளர்ப்பதற்காக, கல்யாணம் செய்துகொண்டதற்காக, பிள்ளைகள் அங்கே இருப்பதற்காக, பேரப்பிள்ளைகளைப் பார்ப்பதற்காக என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள்தான் எத்தனை எத்தனை விதமானவர்கள்! முருகப்பெருமான் கணக்காக உலகம் சுற்றும் வாலிபர்களிலிருந்து முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெரு தவிர வேறு உலகம் அறியாத பிராணிகள் வரை எத்தனை பேருக்கு அமெரிக்கா செல்லும் தேவை வந்துவிடுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா போவதென்று முடிவு செய்வதற்கும் அமெரிக்கா போவதற்கும் இடையேதான் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன! சும்மா பயணச்சீட்டு வாங்கி பஸ் ஏறுவது போலல்லவே இது. அனுமதிகள், விதிமுறைகள், விளக்கங்கள், விண்ணப்பங்கள் என்று ஒரு பெரிய பட்டியல். பாஸ்போர்ட் என்றால் என்ன என்பதிலிருந்து நமக்கு எழும் சந்தேகங்களும் குழப்பங்களும் இன்னொரு பெரிய பட்டியல். இப்படி, அடிப்படை ஆயத்தங்கள் முதல் கட்டம். &lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு, எவ்வளவு மூட்டை எடுத்துச்செல்லலாம் என்பதிலிருந்து ஏர்போர்ட்டில் என்னென்ன செய்யவேண்டும் என்பது வரை அமெரிக்கா கிளம்பும் முஸ்தீபுகள் இரண்டாம் கட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் ஆஜரான பிறகு, நாடு நகரம், ஊர் ஜனங்கள், தட்பவெப்பம், சட்டதிட்டம் என்று அமெரிக்கா நமக்கு அறிமுகமாகும் கதை மூன்றாம் கட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிமுகமில்லாத பிரதேசத்தில் முற்றிலும் புதிய சூழ்நிலையில் தங்குவதற்கு வீடு, போக்குவரத்து, சாப்பாடு, தொலைபேசி, வங்கிக்கணக்கு, லைசென்ஸ், வரி, ஷாப்பிங், ஊருக்குப் பணம் அனுப்ப என்று வரிசை கட்டி நிற்கும் சமாசாரங்கள் நான்காம் கட்டம். &lt;br /&gt;&lt;br /&gt;இதுதவிர, படிப்பிற்காக அமெரிக்கா செல்ல விரும்புபவர்களுக்கு என்ன படிப்பு, என்ன கல்லூரி, என்னென்ன தகுதித்தேர்வுகள், எப்படி விண்ணப்பிப்பது என்று நிறைய இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கட்டத்திலும் கேள்விகள், கேள்விகள். கனவுகளுடன் கூடவே கலர் கலராக சந்தேகங்கள். இந்த சந்தேகங்கள் ஒவ்வொன்றையும் கையிலெடுத்து ஜாலியாக விடை சொல்லிக்கொண்டே போகும் முயற்சிதான் உங்கள் கைகளில் அமர்ந்திருப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லில் செதுக்கியது போய், துணியில் தீட்டியது போய், காகிதத்தில் கிறுக்கியது போய், அச்சில் அழுத்தியது போய் இன்று இணையத்தில் இறங்கியிருக்கிறது தமிழ். இணையத்தில் தமிழ் எழுதிப் பழகிக்கொண்டிருக்கும் சில நூற்றுக்கணக்கான ஆர்வலர்களில் ஒருவன் நான். &lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் போன்றதொரு ஜந்து கூட புத்தகமெல்லாம் எழுதமுடியும் என்று நம்பிய/நம்பிக்கொண்டிருக்கிற மதிப்பிற்குரிய பா. ராகவன் மற்றும் பத்ரி சேஷாத்ரி அவர்களின் அன்பில் நனைந்திருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஷங்கர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-111909256938682151?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/111909256938682151/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=111909256938682151' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/111909256938682151'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/111909256938682151'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2005/06/blog-post_18.html' title='என் முதல் நூல் - அமெரிக்கா போகணுமா'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>42</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-111825548571111243</id><published>2005-06-08T11:30:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.085-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>...</title><content type='html'>புத்தக விளையாட்டு கனஜோராகப் போய்க்கொண்டிருக்கிறது. சுவாரசியமான ஒரு மனப்போக்கு தென்படுகிறது. கொஞ்ச நாள் முன்னர் புத்தக வாசம் என்று ஒன்று எக்கச்சக்கமான பேர் வரவேற்பளிக்க அமர்க்களமாகத் தொடங்கியது. ஆனால் அது நிற்கமுடியவில்லை. புத்தகங்கள்தான் என்றாலும் அவற்றைப் பட்டியலிட்டு சிறுகுறிப்பு வரைவதோடு போதும் என்று மக்கள் நினைப்பதாகத் தோன்றுகிறது. முழுமையான ஒரு விவாதத்தில் பங்குபெற யாருக்கும் விருப்பமோ பொறுமையோ இல்லையோ?&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்க்ளைமர்: புத்தகவாசத்தின் தற்போதைய நிலைமை என்னவென்று எனக்குச் சத்தியமாகத் தெரியாது. கண்ணில் படவில்லை, மதியின் வலைப்பதிவில் சுட்டியில்லை என்பதை வைத்துக் கொண்டு அது மூடப்பட்டுவிட்டதாக அனுமானிக்கிறேன். மற்றபடி, அது சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பட்சத்தில் அனைவரும் என்னை மன்னிக்கவேண்டுகிறேன். (சுட்டியும் கொடுங்களேன் :)) இதில் ஏதாவது அரசியல் புகுந்திருந்தால் "ஆளை வுட்ரா சாமீ".&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;நுழைவுத்தேர்வு குறித்து பல சுவாரசியமான பதிவுகள் வந்திருக்கின்றன. சுதர்சனின் பதிவு, மற்றும் அதன்பிறகு வந்த பதிவுகள் பல்வேறு முக்கியமான கருத்துக்களை முன்வைக்கின்றன. எனது நிறுவன நண்பர்களுடனும் இரண்டு நாட்களாக இதுகுறித்து விவாதித்து வந்திருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பிருந்த மனநிலையில் சற்று மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட euphoric ஆக எழுதியிருந்த பதிவிற்குப் பின் என் சிறுபுத்திக்கு எட்டாத பல அவசியமான கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. ஒரு மீள்பார்வை அவசியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் பொதுவாக இப்படிப்பட்ட விஷயங்கள் குறித்துத் தீவிரமாக விவாதிக்கும் பலரும் இம்முறை மவுனம் சாதித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறோம். தெளிவான கருத்துக்களும் முடிபுகளும் வைத்திருக்கிறோம். 'நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய ஒரு கல்விக்கொள்கை' என்று ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு நாம் ஏன் ஒரு பரிந்துரை தயார் செய்யக்கூடாது?&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கும் கொடுப்பதற்காக இல்லையென்றாலும், கேள்விகள் எழுப்பும் நேரத்தில் அவற்றிற்குப் பதிலளிக்க முனைந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு முயற்சியாக இதைச் செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது. நானெல்லாம் இதுபோன்ற விஷயங்களில் மேலோட்டமான கருத்துக்களைச் சொல்வது தவிர இதுவரை உருப்படியாக எதுவும் யோசித்துப் பார்த்தது கிடையாது. இப்போதாவது சிந்திக்கக் கற்றுக்கொள்ளலாமே என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-111825548571111243?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/111825548571111243/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=111825548571111243' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/111825548571111243'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/111825548571111243'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2005/06/blog-post_08.html' title='...'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-111816978032026399</id><published>2005-06-07T11:34:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.086-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>புத்தக மீமீ :)</title><content type='html'>வலைப்பதிவுகளில் தலைகாட்டிவரும் இந்தப் புதிய விளையாட்டுக்கு என்னையெல்லாம் யார் கூப்பிடப்போகிறார்கள் என்று நினைத்து, என்னை நானே அழைத்துக்கொண்டு கீழ்க்கண்ட பட்டியலையும் போட்டு முடித்துவிட்டேன். அப்புறம் பார்த்தால் நம் தானைத்தலைவர், அன்பு அண்ணன், பண்புச் செம்மல் மீனாக்ஸ் அவர்கள் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து &lt;a href="http://thavam.blogspot.com/2005/06/book-meme.html"&gt;அழைத்திருந்ததைப&lt;/a&gt;் பார்த்து, உளம் பூரித்து இந்த முன்குறிப்பையும் சேர்த்துப் பதிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது புத்தகங்கள்:&lt;br /&gt;கிட்டத்தட்ட 200 இருக்கும். இயற்பியல், கணித்துறை சம்பந்தப்பட்ட அருமையான புத்தகங்கள் நீங்கலாக. இவற்றில் எவ்வளவு படித்திருக்கிறேன் என்றெல்லாம் கேட்காதீர்கள் :)&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாகப் படித்த புத்தகம்:&lt;br /&gt;Five point someone - Chetan Bhagat&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் வாங்கிய புத்தகங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்:&lt;br /&gt;எஸ். ராமகிருஷ்ணன் சிறுகதைத் தொகுதி&lt;br /&gt;ராம்கியின் ரஜினி பற்றிய புத்தகம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலம்:&lt;br /&gt;Atlas Shrugged - Ayn Rand&lt;br /&gt;Five point someone&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் பிடித்த ஐந்து புத்தகங்கள்:&lt;br /&gt;ஜே.ஜே. சில குறிப்புகள் - சு.ரா.&lt;br /&gt;பொன்னியின் செல்வன் - கல்கி (இதுதான் திமிர் என்பது. எதையும் எதையும் சேர்த்தேன் பாருங்கள்! சு.ரா. என்னதான் ·பீல் பண்ணினாலும் கவலையில்லை. என்வரையில் இதுதான் சரி)&lt;br /&gt;திசைகளின் நடுவே - ஜெயமோகன் சிறுகதைத் தொகுதி&lt;br /&gt; இப்படியெல்லாம் சிறுகதை எழுதமுடியும் என்று சுஜாதாவுக்கு அடுத்து வியக்கவைத்தவர்&lt;br /&gt;கணையாழியின் கடைசிப் பக்கங்கள் - சுஜாதா கட்டுரைத் தொகுதி&lt;br /&gt; இந்த ஆள் (:)) சுப்ரீம் டச்சில் இருந்த போது எழுதப்பட்ட ரகளை கட்டுரைகள்&lt;br /&gt;புதுமைப்பித்தன் சிறுகதைகள் தொகுதி&lt;br /&gt; காலம் கடந்து நிற்கும் சாதனை.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் படித்ததில் பிடித்தது:&lt;br /&gt;உபபாண்டவம்: எஸ். ராமகிருஷ்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;பிடித்த மொழிபெயர்ப்புகள்:&lt;br /&gt;அந்நியன் - ஆல்பெர் காம்யு&lt;br /&gt;சம்ஸ்காரா - யூ. ஆர். அனந்தமூர்த்தி&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் பிடித்த ஐந்து புத்தகங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;Fist of God - Frederick Forsyth&lt;br /&gt; ஆக்ஷன் த்ரில்லர் அமர்க்கள புத்தகம். இது ஏன் இந்த லிஸ்டில் இருக்கிறது என்றெல்லாம் கேட்காதீர்கள்.&lt;br /&gt;Tale of two cities - Charles Dickens&lt;br /&gt; ஏதேனும் சொல்ல வேண்டுமா?&lt;br /&gt;In search of Schroedinger's cat - John Gribbin&lt;br /&gt; எனக்கு வாழ்க்கையில் முக்கியமான புத்தகம். குவாண்டம் இயற்பியலுக்கும் எனக்கும் தொடர்பேற்படுத்திக்கொடுத்த புத்தகம்.&lt;br /&gt;Illusions - Richard Bach&lt;br /&gt; இந்தப் புத்தகத்தைச் சேர்க்கவேண்டும் என்று என் மனம் ஏனோ கிடந்து அடித்துக்கொள்கிறது. அப்படி இந்தப் புத்தகத்தில் என்ன இருக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் அடிக்கடி படித்துக்கொண்டே இருக்கிறேன்.&lt;br /&gt;The hitchhiker's guide to the galaxy  - Douglas Adams&lt;br /&gt; அட்டகாசமான அறிவியல் புனைவு. அபரிமிதமான கிரியேட்டிவிட்டி கொட்டிய புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் படித்ததில் பிடித்தது:&lt;br /&gt;Foucault's Pendulum - Umberto Eco&lt;br /&gt;Angels and Demons - Dan Brown&lt;br /&gt;Five point someone&lt;br /&gt;&lt;br /&gt;புதிதாக நான் சேர்க்கும் ஒரு பட்டியல். படிக்கவேண்டும் படிக்கவேண்டும் என்று பலகாலமாக வைத்திருக்கும் புத்தகங்கள்:&lt;br /&gt;பின்தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன்&lt;br /&gt;அக்னிச்சிறகுகள் - அப்துல் கலாம்&lt;br /&gt;Fountainhead - Ayn Rand&lt;br /&gt;The Bridge across forever - Richard Bach&lt;br /&gt;Zen and the art of motorcycle maintenance - Robert Pirsig&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் வாசிப்புக்கும் அவ்வளவு சம்மந்தமில்லை என்பது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;நான் அடுத்து அழைக்கப்போகும் ஐந்து வலைப்பதிவாளர்கள்:&lt;br /&gt;&lt;a href="http://wandererwaves.blogspot.com/"&gt;பெயரிலி&lt;/a&gt; (ஒரு ஐந்து பத்து இன்விடேஷன்கள் போட்டாவது இந்த நபரை எழுதச்சொல்லவேண்டும்)&lt;br /&gt;&lt;a href="http://rajniramki.blogspot.com/"&gt;ராம்கி &lt;/a&gt;(நைனா, போடுங்க உங்க லிஸ்டு, புலிநகக்கொன்றை உண்டுல்ல?)&lt;br /&gt;&lt;a href="http://www.chithran.blogspot.com/"&gt;சித்ரன் &lt;/a&gt;(எழுதுறாரான்னே தெரியலியே?)&lt;br /&gt;&lt;a href="http://santhoshguru.blogspot.com/"&gt;சந்தோஷ் குரு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://urpudathathu.blogspot.com/"&gt;உருப்படாதது நாராயணன்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-111816978032026399?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/111816978032026399/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=111816978032026399' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/111816978032026399'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/111816978032026399'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2005/06/blog-post_07.html' title='புத்தக மீமீ :)'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-111811392057312880</id><published>2005-06-06T20:08:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.086-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>NCERT போர்டு தேர்வுகள் குறித்த பரிந்துரைகள</title><content type='html'>&lt;a href="http://neyvelivichu.blogspot.com/2005/06/blog-post_06.html"&gt;நெய்வேலி வலைப்பூ&lt;/a&gt;வில் போர்டு தேர்வுகள் குறித்த பதிவைப் பார்த்தபிறகு இதை எழுதுகிறேன். நேற்று எனது நுழைவுத்தேர்வு குறித்த பதிவில் சொல்லியிருந்த ஒரு ஆதார விஷயம்:&lt;br /&gt;&lt;br /&gt;"4. பிளஸ்டூ தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள் நுழைவுத்தேர்வுகளில் கோட்டை விடும் காரணம் என்ன? பிளஸ்டூ தேர்வு மற்றும் கல்வித்தரம். எனவே, சிறந்த தீர்வு என்பது இந்தத் தரத்தை உயர்த்துவதே ஆகும். அதுவே நீண்டகாலத் தீர்வாக இருக்கமுடியும். ஆனால், இது ஒரு மிகப்பெரிய மாற்றம். அடிப்படையிலிருந்து செய்யவேண்டிய பணி. இதைச் செய்து முடிப்பார்களா என்று தெரியாது. ஆனால், அதுவரை, நுழைவுத்தேர்வு வைத்துத் தவறிழைக்காத மாணவர்களைத் தண்டிப்பது தேவையா?"&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திசையில் செல்லும் ஒரு முயற்சியாகத் தற்போதைய பொதுத்தேர்வு முறைகளை மறுபரிசீலனை செய்யும் பரிந்துரை NCERTஇடமிருந்து வந்திருக்கிறது. &lt;a href="http://in.rediff.com/getahead/2005/jun/02exam.htm"&gt;ரீடி·ப்&lt;/a&gt; தளத்திலிருந்து நான் புரிந்துகொண்ட முக்கியமான பரிந்துரைகள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. பொதுத்தேர்வுகளையும் நுழைவுத்தேர்வுகளையும் சம்பந்தப்படுத்தாதிருப்பது&lt;br /&gt;2. ஒரே கட்டமைப்பின் மேற்பார்வையில் அனைத்து நுழைவுத்தேர்வுகள்&lt;br /&gt;4. பதினொன்றாம் வகுப்புக்குப் போக விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு. விருப்பமில்லாதவர்களுக்கு பத்தாம் வகுப்பு தேறியதற்கான சான்றிதழ் ஒன்று அளித்தல்.&lt;br /&gt;5. பொத்தாம்பொதுவாக பாஸ், ·பெயில் என்று எல்லோரையும் இரண்டே டப்பாக்களில் போடாமல் பல்வேறு நிலைகளை ஏற்படுத்தல்.&lt;br /&gt;6. பாடங்களை உருப்போடாமல் கல்வி&lt;br /&gt;7. பாடத்திட்டங்களைப் பாடப்புத்தகங்களை விட்டு வெளியே கொண்டுவருதல்&lt;br /&gt;8. பத்து, பனிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வுகளில் மாணவர் மீதான சுமைகளைக் குறைக்க, வெறும் உருப்போடுதலை மையமாகக் கொண்ட கேள்விகளைத் தவிர்த்து, மாணவர்களின் சிந்திக்கும் திறன், கிரியேட்டிவிட்டி ஆகியவற்றைச் சோதிக்கும் கேள்விகளை வைத்தல்&lt;br /&gt;9. தாய்மொழியில் கல்வியே தலைசிறந்தது என்பதை வலியுறுத்தல்&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட அமெரிக்கக் கல்விமுறை போல, நாட்டுக்கே பொதுவான ஒரு நுழைவுத்தேர்வு முறையை வைத்தே (அங்கே SAT, GRE, GMAT போல) அனைத்துக் கல்லூரி அட்மிஷன்களும் நடக்கவேண்டும் என்பது போன்றதான ஒரு கருத்து இங்கே முன்வைக்கப்படுகிறது. பலகாலமாக நாம் பேசிவரும் பாடத்திட்டம் குறித்த கருத்துக்கள் கவனத்திற்கு வருகின்றன. உருப்போடுதலை ஒழிப்பதில் தீவிரம் தெரிகிறது. ஆனால் ரீடி·பின் ஒரு பக்கக் கட்டுரை எதையும் தெளிவாகச் சொல்லவில்லை. &lt;a href="http://www.ncert.nic.in/sites/publication/schoolcurriculum/NCFR%202005/contents1.htm"&gt;NCERT-இன் இணையத்தளத்தில&lt;/a&gt;் முழு அறிக்கையும் pdf கோப்புகளாக உள்ளது. படித்துப் பார்த்துவிட்டு எனக்குத் தோன்றுவதை எழுதுகிறேன். இந்த விஷயத்தில் விவாதங்கள் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருக்குமென்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சுதர்சன் சென்ற பதிவிற்கான பின்னூட்டத்தில் அண்ணா பல்கலைக்கும் பொதுத்தேர்வு மூலமே மாணவர்களைத் தேர்ந்தெடுத்தால் உருடப்பாக்கள் அண்ணா பல்கலையிலும் மலிந்துவிடுவார்களே என்று ஒரு கருத்தை முன்வைக்கிறார். முக்கியமான கருத்து. ஆனால், இன்றைய சூழ்நிலையில் இதைவிடப் பெரிய பிரச்னை கிராமப்புற மாணவர்கள் படும் அவதியே என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். நுழைவுத்தேர்வு என்பது அவர்களுக்குப் புரியாதிருக்கிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் வசதி உள்ள மாணவர்கள் கோச்சிங் சென்று படித்து நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். நுழைவுத்தேர்வு மிகுந்த பாரபட்சமுடையதாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இரண்டு விஷயங்கள் செய்யலாம். அனைத்து கிராமப்புறங்களிலும் நுழைவுத்தேர்வு குறித்த விழிப்புணர்ச்சி, பயிற்சி வகுப்புகள் ஏற்படுத்தலாம். மாநில முழுமைக்கும் ஒரே மாதிரியான பயிற்சி முறை ஏற்படுவதன்மூலம் நுழைவுத்தேர்வு அர்த்தமுள்ளதாக அமையும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இவ்வளவு சிரமப்பட்டு ஊரூராக விழிப்புணர்வு ஏற்படுத்தி நுழைவுத்தேர்வு நடத்துவது அண்ணா பல்கலை மற்றும் இன்னும் தேர்ந்தெடுத்த 5-10 கல்லூரிகளுக்குத்தான் என்பது உதைக்கிறது. ஏனெனில் இதர கல்லூரிகளில் சேர்ந்து படிக்க நுழைவுத்தேர்வெல்லாம் தேவையே இல்லை என்பதில் யாதொரு குழப்பமும் இருக்க முடியாது. 5-10 கல்லூரிகளில் உள்ள சிற்சில சீட்களுக்கு இவ்வளவு விரயம் செய்யமுடியுமா? அப்படி இல்லாத பட்சத்தில் இந்த நுழைவுத்தேர்வும் ஐஐடி போல கிராமப்புறத்து ஏழை மாணவன் கனவிலும் கூட நினைத்துப்பார்க்கமுடியாத தேர்வாக ஆகிவிடும். அண்ணா பல்கலை சீட்கள் நகரத்தில் ஜம்மென்று கோச்சிங் சென்டர்களில் படித்த பிள்ளைகளுக்கு மட்டுமே என்று ஆகிவிடும். நான் கூறுவதற்கு விதிவிலக்குகள் இருக்கலாம். கோச்சிங் சென்டர்கள் be all, end all என்று நான் சொல்லவில்லை. ஆனால், அவற்றில் படிப்பது கண்டிப்பாக ஒரு சாதகமான விஷயம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதே போல கிராமப்புற மாணவர்கள் ஐஐடியில் சேர வாய்ப்பே இல்லை என்றும் சொல்லவில்லை. பொதுவாக நடப்பதை, the general trend தான் சொல்ல வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல, ஏதோ அண்ணா பல்கலை என்பது தொழிற்கல்வி முறைக்கு ஒரு முன்னுதாரணம் போன்றதொரு பிம்பமும் முன்வைக்கப்படுகிறது. இதர கல்லூரிகளைக் காட்டிலும் ஓரளவு சிறப்பான கல்லூரி என்ற அளவில்தான் இதை என்னால் ஒப்புக்கொள்ள முடிகிறது. அங்கே உருப்போடுதலே கிடையாது என்பது போன்ற மாயத்தோற்றங்களையெல்லாம் நம்பத்தேவையில்லை. அண்ணா பல்கலையில் சமீபத்தில் (2003 pass-out) படித்த மாணவன் என்ற முறையிலும் அங்கே அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கான மிகச் சுலபமான வழி எது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு மிக வெற்றிகரமாகச் செயல்படுத்திய மாணவன் என்ற முறையிலும் இதைச் சொல்கிறேன். எங்கேயும் உருப்போடுதல் அழியவில்லை. உருப்போட்டால் இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லாக் கல்வி நிறுவனங்களிலும் வெற்றி பெற முடியும். இதுதான் நிதர்சனம். மற்ற இடங்களில் வெறும் உருப்போடுதல் போதும். ஆனால் அண்ணா பல்கலையில் புத்திசாலித்தனமான உருப்போடுதல் தேவைப்படும். அந்த புத்திசாலித்தனத்தைத் தான் நமது நுழைவுத்தேர்வுகள் தேடிக்கொண்டிருக்கின்றன என்பது என்னைப் பொறுத்தவரையில் கேலிக்கூத்தாகவே இருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-111811392057312880?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/111811392057312880/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=111811392057312880' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/111811392057312880'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/111811392057312880'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2005/06/ncert.html' title='NCERT போர்டு தேர்வுகள் குறித்த பரிந்துரைகள'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-111808392043759960</id><published>2005-06-06T11:51:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.087-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>நுழைவுத் தேர்வு ரத்து - அதிரடி முடிவு</title><content type='html'>ஐயா தமிழ்க்குடிதாங்கி மட்டும் ஒரு பக்கமிருந்து சவுண்டு விட்டுக்கொண்டிருக்க, இதையெல்லாம் யார் கண்டுகொள்ளப்போகிறார்கள் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் இந்த அரசு இந்த மாதிரியான inertial எண்ணங்களையெல்லாம் தவிடுபொடியாக்கிவருகிறது என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு இதோ. பொறியியல், மருத்துவம் மற்றும் சில துறைகளில் கல்லூரிகளில் இடம் கிடைக்க பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்களே போதுமானது; தனியாக நுழைவுத்தேர்வு எதுவும் தேவையில்லை என்ற முடிவு மிகவும் சுவாரசியமானது. எந்த அளவு யோசித்து எடுக்கப்பட்ட முடிவு என்று தெரியவில்லை. கல்வியாளர்கள் கலந்தாலோசிக்கப்பட்டனரா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், எப்படி எடுத்திருந்தாலும் இது ஒரு மிக நல்ல திருப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் ஆற அமர யோசித்துப் பார்த்தால் இந்த முடிவின் rationale பிரமிக்க வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1. நுழைவுத்தேர்வு எதற்காக? மிகக் குறைந்த அளவே சீட்கள் இருந்து, மிக அதிக அளவு மாணவர்கள் போட்டியிடும் பட்சத்தில் அவர்களிலிருந்து மதிப்பெண்கள் மட்டும் வைத்து அதிகமாகப் பாகுபடுத்த முடியாத நிலையில் இன்னொரு வடிகட்டுதல் தேவைப்படும்போது நுழைவுத்தேர்வு அவசியமாகிறது. ஆனால் இன்று மாணவர் எண்ணிக்கையை விட சீட்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது இன்னும் நுழைவுத்தேர்வு தேவைதானா?&lt;br /&gt;&lt;br /&gt;2. நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நான்கு வகைப்படுவர்:&lt;br /&gt;அ. ஸ்டேட் போர்டு மட்டுமே படித்த கிராமத்து மாணவர்கள்&lt;br /&gt;ஆ. ஸ்டேட் போர்டு மட்டுமே படித்த நகரத்து மாணவர்கள்&lt;br /&gt;இ. பத்தாவது வரை மெட்ரிக் அல்லது சென்ட்ரல் போர்டு படித்து, பிறகு ஸ்டேட் போர்டு சேர்ந்த மாணவர்கள்&lt;br /&gt;ஈ. பனிரெண்டாவது வரை சென்ட்ரல் போர்டு படித்த மாணவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி இரண்டு பிரிவுகள் பெரும்பான்மையும் நகரம் சார்ந்தவை. பொதுவாக நகரத்து மாணவர்களுக்கு இருக்கும் சில வசதிகள்: கோச்சிங் நிறுவனங்கள், சிறப்புப் பயிற்சிகள், பொதுவாக அதிகமான exposure. பிரிவு (ஆ) இருப்பதன் காரணம், நகரத்து மாணவர்களாக இருந்தாலும் அவர்கள் ஸ்டேட் போர்டு மனநிலையிலேயே வாழ்ந்தவர்கள். பெரும்பாலும் உருப்போட்டும், அரைகுறையாகப் புரிந்துகொண்டும், தேர்வுக்கு மட்டுமே படித்தும் இருப்பவர்கள் (இ மற்றும் ஈ பிரிவினருடன் ஒப்பிடும்போது). இது ஒரு பொதுவான கருத்து. விதிவிலக்குகள் இருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;என் கணிப்புப்படி இந்தப் பிரிவுகளில் இ பிரிவு மாணவர்கள் மிக எளிதில் நுழைவுத்தேர்வு முறையில் பொருந்திவிடுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு மெட்ரிக், ஸ்டேட் என இரண்டு முறைகளும் பழகிவிட்டது. மேற்சொன்ன பிரிவுகளில் அ பிரிவு அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், நுழைவுத்தேர்வு முறையில் பெரிதும் பாதிக்கப்படுவது அவர்கள்தான். ஏற்கனவே ஏழ்மையிலும் பல்வேறு பாகுபாடுகள் சார்ந்த கொடுமைகளிலும் உழன்றுகொண்டிருக்கும் அவர்களுக்கு நுழைவுத்தேர்வு என்பது மிகப்பெரிய சுமை.&lt;br /&gt;&lt;br /&gt;3. ஒரு காலத்தில் பி.ஈ போன்ற தொழிற்கல்விகள் ஒரு differentiator. பி.ஈ மாணவன் சமூகத்தில் மதிப்புக்குரியவன். அவனுக்குக் கிட்டக்கூடிய வாய்ப்புகள் பி.எஸ்.சியோ, பி.ஏவோ, பி.காமோ படித்த மாணவர்களுக்குக் கிடைக்கா. ஆனால் இப்பொழுது அப்படியில்லை. தெருவுக்குத் தெரு கழிப்பிடம் கட்டுவது போல் கல்லூரிகள் கட்டியாகிவிட்டது. ஒரு இழவும் தெரியாதவர்களெல்லாம் ஆசிரியர்கள். ஒன்றும் புரிந்துகொள்ளாமலேயே படித்துப் பெறும் பட்டம்தான் பி.ஈ என்று ஆகிவிட்டது. BE is no more a differentiator. இப்படி இருக்கும் பட்சத்தில் அதற்கு மட்டும் எதற்கு அனாவசியமாக ஒரு நுழைவுத்தேர்வு? உருடப்பா மாணவர்களிலிருந்து புத்திசாலி மாணவனைத் தேர்ந்தெடுக்கவே நுழைவுத்தேர்வு. புத்திசாலி மாணவனே தேவையில்லாத பட்சத்தில், தேர்வு மட்டும் எதற்காக?&lt;br /&gt;&lt;br /&gt;4. பிளஸ்டூ தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள் நுழைவுத்தேர்வுகளில் கோட்டை விடும் காரணம் என்ன? பிளஸ்டூ தேர்வு மற்றும் கல்வித்தரம். எனவே, சிறந்த தீர்வு என்பது இந்தத் தரத்தை உயர்த்துவதே ஆகும். அதுவே நீண்டகாலத் தீர்வாக இருக்கமுடியும். ஆனால், இது ஒரு மிகப்பெரிய மாற்றம். அடிப்படையிலிருந்து செய்யவேண்டிய பணி. இதைச் செய்து முடிப்பார்களா என்று தெரியாது. ஆனால், அதுவரை, நுழைவுத்தேர்வு வைத்துத் தவறிழைக்காத மாணவர்களைத் தண்டிப்பது தேவையா?&lt;br /&gt;&lt;br /&gt;5. இன்றைய பெற்றோர்களைக் குறிப்பாகச் சொல்லவேண்டும். பி.ஈ ஒரு differentiator ஆக இல்லாமற்போனதற்கு இவர்கள் ஒரு முக்கியக் காரணம். எல்லாரும் பி.ஈ படிக்கவேண்டும் என்று யோசிக்கும்போதே அந்தப் படிப்பின் மீது மதிப்பு காணாமற்போய்விடுகிறது. லட்சங்கள் சேர்த்துவைக்கப்படுவதே ஏதாவது ஒரு துப்புகெட்ட கல்லூரிக்குத் தண்டம் அழத்தான் என்ற நிலை மிகவும் கேவலமானது. இந்த நிலையில், பொறுக்கித்தனம் செய்யும் கல்லூரி நிர்வாகங்கள் கட்டுக்கடங்காமல் ஆடுகின்றன. பக்கம் பக்கமாக நிகர்நிலைப் பல்கலைக்கழகம் எனும் மோசடியின் பெயரால் தேர்வுகள் நடத்துவதாகப் பாவ்லா பண்ணிக்கொண்டு லட்சங்களைக் கபளீகரம் செய்துவரும் ஈனப்பிறவிகளை அடக்குவதற்கு இந்த அறிவிப்பு ஒரு நல்ல வழி. நுழைவுத்தேர்வு, கட் ஆப் என்று எந்தக் குழப்பமும் இல்லாமல் மிகத் தெளிவான சுலபமான ஒற்றைச் சாளர முறைப்படி கவுன்சிலிங் நடத்தி ஒழுங்காக சீட்களை ஒதுக்க முடியும். முன்பணம் செலுத்துவது, சீட் வாங்குவது என்ற முறைகேடுகளுக்கெல்லாம் தேவையின்றிப் போய்விடும். மேனேஜ்மெண்ட் கோட்டா என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுவிடும். (இந்த இடத்தில் பிளஸ்டூ மதிப்பெண்கள் என்றால் என்ன என்பதை விளக்கியாக வேண்டும். வழக்கம்போல் கணிதம், இயற்பியல், வேதியியல் மட்டும்தானா? கணிப்பொறியியல் கணக்கில் கொள்ளப்படுமா? தமிழ், ஆங்கிலம் போன்றவை கணக்கில் வராதுதானே?!)&lt;br /&gt;&lt;br /&gt;6. இனிமேல் differentiator என்பது இரண்டு வகைப்படும். ஒன்று, தமிழ்நாட்டிலேயே சிறந்த கல்லூரிகளில் இடம்பிடிப்பது (அண்ணா, திருச்சி, கோவை, மற்றும் வெங்கடேஸ்வரா போன்ற சில தனியார் கல்லூரிகள்). இன்னொன்று, ஐ.ஐ.டி, பிட்ஸ் என்று தேசிய அளவில் புகழ்பெற்ற பெரிய கல்லூரிகளில் இடம்பிடிப்பது. எனவே, குழப்பம் ஏதும் இருக்காது. ஐ.ஐ.டி கனவுகளெல்லாம் இல்லாதவர்கள் வெறும் பிளஸ்டூ தேர்வுகளுக்கு மட்டும் தயார் செய்து சிறப்பான மதிப்பெண்களைப் பெறமுடியும். தண்ட செலவாக என்ட்ரன்ஸ் கோச்சிங் எல்லாம் போக வேண்டியதில்லை. இரண்டு குதிரைகளில் சவாரி செய்யவேண்டியதில்லை. பிளஸ்டூ தேர்வுகளில் இன்னும் சிறப்பான ரிசல்ட் கிடைக்கும். ஐ.ஐ.டி பற்றியெல்லாம் யோசிக்கும் மக்கள் தெளிவாகத் திட்டமிட்டு பிளஸ்டூ பாஸ் செய்து சுமாரான மதிப்பெண் வாங்குவது, ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுகளுக்குத் தீவிரமாகப் பயிற்சி எடுப்பது என்று செய்யலாம். ஐஐடி கோட்டை விட்டாலும் இருக்கும் மதிப்பெண்ணை வைத்து சுமாரான கல்லூரியில் சேர்ந்துகொண்டு, அடுத்த வருடம் ஐஐடி தயார் செய்யலாம். &lt;br /&gt;&lt;br /&gt;7. இம்ப்ரூவ்மெண்டை நீக்கியது மற்றுமொரு நல்ல முடிவு. எம்.பி.பி.எஸ் படிப்புக்கும் இந்த விதிகள் பொருந்தும் என்கிறார்கள். அது எவ்வளவு தூரம் சரியென்று தெரியவில்லை. அந்தத் துறையில் இருப்பவர்கள் சொல்லுங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;8. கடைசியாக, தமிழ்க்குடிதாங்கி முன்வைத்து, கலைஞர் சைலண்ட்டாக ஆதரித்து வந்த கொள்கையை அம்மா செயல்படுத்தி இருக்கிறார். இதன் அரசியல் எதிரொலிகள் எப்படி இருக்கும்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-111808392043759960?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/111808392043759960/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=111808392043759960' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/111808392043759960'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/111808392043759960'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2005/06/blog-post_06.html' title='நுழைவுத் தேர்வு ரத்து - அதிரடி முடிவு'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-111782723802959587</id><published>2005-06-03T12:33:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.088-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>அரிந்தும் அரியாமலும்</title><content type='html'>எக்கச்சக்கமாக வேலை வெட்டி முறித்து களைத்துப் போய்விட்டதால் வண்டி கட்டிக்கொண்டு படம் பார்க்கக் கிளம்பினோம். ஆராதனா போனால் ஏய் என்று மிரட்டுகிறார் சுப்ரீம் ஸ்டார். பக்கத்திலேயே பிரார்த்தனாவில் பால் மணம் மாறாத சிறுவர்கள் நடித்திருக்கிற 'அறிந்தும் அறியாமலும்'. இத்தனை நாள் சென்னை வாசத்தில் இதுவரை பிரார்த்தனாவில் படம் பார்த்ததேயில்லை. கார் இருந்தால் தான் பார்க்கமுடியும் என்று சின்ன வயதிலேயே எவனோ எனக்கு உபதேசித்திருந்ததால், என் கொள்கைகளுக்கு விரோதமான தியேட்டர் என்று ஒதுக்கியே வைத்திருந்தேன். உள்ளே போய்ப் பார்த்தால் வெட்டவெளியில் பெரிய திரை போட்டு வரிசை வரிசையாகக் கார்கள் படம் பார்த்துக்கொண்டிருந்தன. நாங்கள் ஒரு கார் மற்றும் பத்து பேர் இருந்ததால் அப்படியே அக்கடாவென்று தரை டிக்கெட்டில் அமர்ந்தோம். நண்பர்கள் பர்ஸில் இருந்த காகிதங்கள் பாப்கார்ன்களாக உருமாறி என் வாய்க்குள் திணிக்கப்பட, இனி படம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நெஞ்சங்களின் ரசனைக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத ஒல்லிக்குச்சி ஹீரோயின் சமிக்ஷா. தமிழ்ப்படத்தில் ஹீரோயின் பற்றியெல்லாம் ஒருவன் பேசுகிறானென்றால் அவன் எவ்வளவு காய்ந்துபோய்க் கிடக்கிறான் என்று ஊகித்தறிந்துகொள்ளவும். வசனம் பேசாமல், முக-பாவங்களும் பரிதாபங்களும் காட்ட முயலாதவரையில் மிக அழகாக இருக்கிறார். கதாநாயகன் நவ்தீப்புக்கு மூன்று வயது இருக்கும் என்று நினைக்கிறேன். அப்படி ஒரு குழந்தை. ஆனால் பாவம் சும்மா சொல்லக்கூடாது, துறுதுறுவென்று நடிக்கவெல்லாம் முயற்சித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு கதாநாயகன் ஆர்யா. அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏவில் படித்த, ஜாவலின் எறிந்த, பேப்பர் பாஸ் செய்து மாட்டிய ஜாம்ஷெட் தான் இன்று ஆர்யா. இவரைப் பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். ஒழுங்காக அடுத்த படங்களைத் தேர்ந்தெடுத்தால் கண்டபடி முன்னுக்கு வரப்போகிறார். தோற்றம், மேனரிஸம், முகபாவம் எல்லாம் பின்னியெடுத்திருக்கிறார். கும்மென்று ஜிம் பாடி வேறு. வசனம்தான் உதைக்கிறது. சொந்தக் குரலாக இருந்தால் ஒரு விண்ணப்பம். அடிக்கடி யு.கே.ஜி பையன் பல்பத்துக்கு அழுவது போன்ற தொனியில் பேசுவதைக் குறைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல பிரகாஷ்ராஜ். வழக்கம்போல படத்தில் ஹைலைட். சிவாஜி ரேஞ்சுக்கு இவரை உணர்ச்சிவசப்பட்டு நடிக்கச் சொல்கிறார்கள் போலும். ஆனால் பல இடங்களில் இயல்பு. லாவகமான நடிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;கதை என்று பார்த்தால்...அதை எங்கே பார்த்தோம்? ஒரு ஊர்ல ஒரு தாதா பிரகாஷ்ராஜ். அவனுக்கு ஒரு வளர்ப்புப் பையன் ஆர்யா. நாகர்கோவிலில் இருந்து படிக்க வருகிறார் நவ்தீப். சமிக்ஷாவுடன் ஒரு கேவலமான லவ்ஸ். சந்தர்ப்ப சூழ்நிலையால் தாதாக்களுக்கும் அமுல் பேபிக்கும் மோதல். பிளாஷ்பேக் சந்தர்ப்ப சூழ்நிலையால் நவ்தீப் தாதாவின் மகனாகிறான். தாதா தனது வெட்டுகுத்துக்கெல்லாம் பிரேக் விட்டுவிட்டு நவ்தீப்புக்கு கிலுகிலுப்பை காட்டுவது, அரணாக்கயிறு கட்டுவது, செல்லம் கொஞ்சுவது என்று முக்கியமான வேலைகளில் இறங்க, நவ்தீப்புக்குக் கடுப்பு. ஒரு தம்பிப் பாசத்தில் ஆர்யாவும் கோதாவில் இறங்க, அப்படியே இஸ்த்துக்கினு போயி கிளைமாக்ஸ். &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே ஒரு தத்தி கமிஷனர் தாதாவைத் துரத்திக்கொண்டிருக்க, ஒரு என்கெளண்டர் பில்டப் கொடுத்து தாதாவையும் ஆர்யாவையும் வெடிக்கவைத்து நவ்தீப் 'அப்பாஆஆ!' என்று கடைசியாக வழிக்கு வர, படத்தை அப்படியே முடித்திருந்தால் ஒரு மாதிரி சிறுகதை படித்த உணர்வு இருந்திருக்கலாம். ஆனால், சுபம் போட்டே தீருவது என்ற அடிப்படை விதிப்படி, அனைத்து பாகங்களும் உருப்படியாக தாதாவும் ஆர்யாவும் ரீ-என்ட்ரி கொடுத்து அப்பனும் மகனும் கட்டிப்பிடித்தபின்புதான் சுபம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டு, டெக்னிக்கல் சமாசாரமெல்லாம் டக்கர். யுவன் தூள் பரத்தியிருக்கிறார். குறிப்பாக, 'தீ பிடிக்க தீ பிடிக்க' பாடல். மேட்டர் வரிகளுக்குக் கெட்ட ஆட்டம் போடுகிறார்கள் ஆர்யாவும் யாரோ ஒருவளும். அட்டகாசமான ஸ்டெப்ஸ். சூர எடிட்டிங். தடக்கு தடக்கு என்று எகிறும் பாட்டு. இதில் கொசுறாக துளியே துளி எம்கேடி பாகவதரின் பழங்காலப் பாட்டு ஒன்றின் ரீமிக்ஸ் ஊடே வந்துபோகிறது. கும் பாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;கும்பலாகப் போய் ஜாலியாக சவுண்டு விட்டு ரவுசு பண்ணிப் 'பார்க்கவேண்டிய படம்'.&lt;br /&gt;&lt;br /&gt;அறிந்தும் அறியாமலும் - அரைவேக்காடு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-111782723802959587?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/111782723802959587/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=111782723802959587' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/111782723802959587'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/111782723802959587'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2005/06/blog-post.html' title='அரிந்தும் அரியாமலும்'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-111203436818332309</id><published>2005-03-28T10:24:00.000-08:00</published><updated>2007-03-31T07:05:02.088-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>சுமத்ரா நிலநடுக்கம்</title><content type='html'>இதுவரை கிடைத்த தகவலின்படி சுனாமி வந்ததற்கான எந்த அறிகுறியும் எந்த நாட்டிலும் தெரியவில்லை. இந்தோனேசிய அரசு சுனாமி ஏதும் வரவில்லையென்று அறிவித்திருக்கிறது. சென்னை கடற்கரையிலிருந்து நண்பர் ராம்கி தருகிற தகவலின்படி அங்கே மக்கள் ஓரளவு குழுமியிருக்கிறார்கள். கடலோரப்பகுதி மக்களை வெளியேறும்படி காவலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். தொலைக்காட்சி மற்றும் இதர பத்திரிகை நிருபர்கள் வந்து குழுமத்துவங்கியிருக்கின்றனர். இதுவரை அமைதி காக்கிறது சென்னைக் கடல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-111203436818332309?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/111203436818332309/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=111203436818332309' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/111203436818332309'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/111203436818332309'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2005/03/blog-post_28.html' title='சுமத்ரா நிலநடுக்கம்'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-111177238094202648</id><published>2005-03-25T09:37:00.000-08:00</published><updated>2007-03-31T07:05:02.089-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>லாண்டிரி லிஸ்டு</title><content type='html'>0. nequaquam vacuum&lt;br /&gt;1. ·போகால்ட் பெண்டுலம் புரியவில்லை&lt;br /&gt;2. சத்தியம் தியேட்டர் போய் ·பிகர் பார்த்தேன்&lt;br /&gt;3. நடுரோட்டில் மேற்தெறிக்க எச்சில் துப்புதல் நன்று &lt;br /&gt;4. செய்யப்படப்போகாத மென்பொருளை வடிவமைத்தேன்&lt;br /&gt;5. டிஜிட்டல் ·போர்ட்ரெஸ் சகிக்கவில்லை&lt;br /&gt;6. அடித்தொண்டையிலிருந்து இருமல் கேட்டால் என்னவோ செய்கிறது&lt;br /&gt;7. 'ஜல்ஜீரா வித் சோடா'விற்கு ஈடான பானம் உலகில் வேறேதுமில்லை&lt;br /&gt;8. கவிதை எழுதுவதை நிறுத்த முடிவுசெய்தேன்&lt;br /&gt;9. தேவதை ஓவியமொன்றைக் கிழித்துப்போட்டேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-111177238094202648?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/111177238094202648/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=111177238094202648' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/111177238094202648'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/111177238094202648'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2005/03/blog-post_25.html' title='லாண்டிரி லிஸ்டு'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-111009074502940805</id><published>2005-03-05T22:29:00.000-08:00</published><updated>2007-03-31T07:05:02.090-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>சந்திரமுகி  பாடல்கள்</title><content type='html'>சமீப காலங்களில் தப்பட்டைராயனாக அவதாரம் எடுத்திருக்கும் வித்யாசாகர் இசை என்பதால் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமலேதான் கேட்கத் தொடங்கினேன். வித்யாசாகர் மிகத்திறமையான இசையமைப்பாளர்தான். வித்தியாசமாகவும் சிறப்பாகவும் பல படங்களில் பாடல்களும் பின்னணி இசையும் தந்திருந்தாலும் (உதாரணம் அன்பே சிவம்) இப்போதெல்லாம் வித்யாசாகர் பெயரைக் கேட்டாலே பயமாக இருக்கிறது. 'டண்டணக்கர டண்டணக்கர' என்று சராகமாகத் தொடங்கி காதுகளைப் பிளந்துபோடாமல் விடமாட்டேன் என்று படுத்துகிறார். சில காலத்துக்கு அவர் விஜய் படங்களுக்கு இசையமைக்காமல் இருந்தால் தேவலை. உருப்பட வழியுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;சந்திரமுகி அந்த வரிசையில் முழுமையாகச் சேரவில்லை என்பது நல்ல சேதி. 'டண்டணக்கர' component இருக்கிறது. ஆனால் ஒரு பாடல்தான் ('அண்ணனோட பாட்டு'). மற்றபடி மெலடி என்று கணக்கு சொல்லத்தக்க வகையில் நான்கு பாடல்கள்! இன்றைய தமிழ் சினிமா நிலைமையில் இதுவே ஒரு ஆச்சரியமான விஷயம். &lt;br /&gt;&lt;br /&gt;தேவுடா தேவுடா என்று தலைவரின் ஒப்பனிங் சாங். கற்பூரம், ஆரத்தி சாமான்களுக்கு வேலைவைக்கும் நேரம். எனவே, அதற்கேற்ப தலையின் சூப்பர் சல்யூட், ட்ரேட்மார்க் சிரிப்பு, சமுதாய சிந்தனை வரிகள், நல்ல பளிச்சென்ற வெயிலில் அவுட்டோரில் பெருங்கூட்டம் புடைசூழ தலைவர் வேகமாக நடந்து வருவது, தாவணி (அப்படி ஒரு ஆடை உண்டு, நினைவிருக்கிறதா?!) உடுத்தி ஆடும் பெண்கள், ஏழைத் தொழிலாளியைக் கட்டியணைக்கும் தலைவர் என்று அத்தனைக்கும் ஸ்கோப் உள்ள பாடல். அத்தனையும் எதிர்பார்க்கிறேன். இதுகூட இல்லையென்றால் என்ன தலைவர் படம்? பாபா போல் தப்புத்தப்பாக யோசிக்காமல் ஒழுங்காக மன்னன், அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா மாதிரி படமெடுத்தால் ஒரு வருடம் ஓடும். கியாரண்டி. இன்னொரு விஷயம். இந்தப் பாடலைப் பாடியிருப்பது எஸ்.பி.பி. தலைவரின் ஓப்பனிங் பாடலை இவர் பாடுவது ஒரு சென்டிமெண்ட். அதை உடைத்ததால்தான் (ஷங்கர் மகாதேவன் - பாபா) போன படம் ஊத்தியது என்று ஒரு எண்ணம் உண்டு. இந்த முறை எதிலும் கோட்டை விடுவதில்லை என்று முடிவோடு இருக்கிறார் வாசு. பாம்பு சீன், அம்மா ச்£ன் எல்லாம் எதிர்பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வரவர ஆஷா போஸ்லே, உதித் நாராயண், சாத்னா சர்கம் இவர்களெல்லாம் தமிழ் பாடக்கேட்டாலே அவர்கள் வாயில் சல்ப்யூரிக் அமிலம் ஊற்றவேண்டும் போல ஆசை வருகிறது. நம்மவர்களிடம் இல்லாமல் இவர்களிடம் என்ன இழவு இருக்கிறது என்று திரும்பத்திரும்ப இவர்கள் மேல் விழுகிறார்கள்? உதித், சாத்னா இருவரும் கிட்டத்தட்ட இப்போது வருகிற எல்லா தமிழ்ப்படங்களிலும் பாடுகின்றனர். ஆஷா எவ்வளவோ காலமாகத் தமிழில் பாடுகிறார். கொஞ்சம் சிரத்தை எடுத்து தமிழ் உச்சரிக்கக் கற்றுக்கொண்டால் குறைந்தா போய்விடுவார்கள்? அதுசரி. எ·ப். எம்மில் சுத்தத் தமிழச்சிகளே "நிகச்சியை இணாயிந்து வழங்குவவர்கள்" என்று தமிழ் பினாத்தும்போது இவர்களை எங்கே போய்ச் சொல்வது? &lt;br /&gt;&lt;br /&gt;ஆஷா இந்தப்படத்தில் 'கொஞ்ச நேரம்' என்ற பாடல் பாடியிருக்கிறார். உடன் பாடுவது மது பாலகிருஷ்ணன் (பிதாமகன் 'பிறையே' புகழ்). அழகான மெலடி. இதமாக இருக்கிறது. தலைவர் படமாக இருந்தாலும் தம்மடிக்கப் போக வேண்டாமா? அதற்கேற்ற பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;"அத்திந்தோம்" என்று தொடங்கும் பாடல் எஸ்.பி.பி. குரலில் இனிமையாக இருக்கிறது. ரொம்ப நாள் கழித்து எஸ்.பி.பி இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார். இவரிடம் தமிழ் இசையமைப்பாளர்களுக்கு என்ன பிரச்னை? இவர் பாட மறுக்கிறாரா, அல்லது போரடித்துவிட்டது என்று இவரை ஒதுக்கிவிட்டார்களா? போரடிக்கும் குரலா அது!&lt;br /&gt;&lt;br /&gt;"கொக்கு பறபற கோழி பறபற" என்றபடி ஒரு ஜாலியான பாடல். 'ரா ரா' என்று ஒரு தெலுங்கு கர்நாடக சங்கீதம் இருக்கிறது. கேட்க நன்றாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பாடல்களை ஒரு முறை கேட்டிருக்கிறேன். சந்திரமுகி பரவாயில்லை. தலைவர் படத்துக்கென்று ஸ்பெஷலாக ஏதுமில்லை. ஆனால் குப்பையும் இல்லை. நான்கைந்து முறை கேட்டால் பிடித்துப்போய், நான்கைந்து மாதங்களுக்குப் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து, பிறகு காணாமற்போகும் வரிசையில் சேரப்போகும் பாடல்களைக் கேட்க &lt;a href="http://www.raaga.com/channels/tamil/movie/T0000667.html"&gt;ராகா&lt;/a&gt; இணையத்தளத்திற்குச் செல்லுங்கள் (இத்தளத்திலுள்ள பாடல்கள் அனுமதி பெற்று வெளியிடப்படுபவை என்று கேள்வி).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-111009074502940805?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/111009074502940805/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=111009074502940805' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/111009074502940805'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/111009074502940805'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2005/03/blog-post.html' title='சந்திரமுகி  பாடல்கள்'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-110876073956375536</id><published>2005-02-18T13:04:00.000-08:00</published><updated>2007-03-31T07:05:02.091-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>பத்தாவது ஸ்டேட் போர்டு</title><content type='html'>முதுகுப்புறம் சாய்வாக இன்க் தெளித்த வெள்ளைச் சட்டை. காக்கி பேண்ட்டுக்குப் பதவி உயர்வு வாங்கிக் கொஞ்ச நாளே ஆகியிருந்ததால் ஜாமெட்ரி பாக்ஸ் வைத்துத் திருத்தமாக இஸ்திரி போட்டுப் பெருமையாகச் சுற்றிக்கொண்டிருந்த காலம். ரெட்டை கலர் பெல்ட் என்று லஸ் கார்னர் பிளாட்பாரக் கடையில் விற்பார்கள். பெல்ட் இருபுறமும் இரண்டு வண்ணத்தில் இருக்கும். பக்கிள் பகுதி கழற்றி மாட்டும் வகையிலிருக்கும். அதை இப்படிப்போட்டால் கறுப்பு, அப்படிப்போட்டால் பிரவுன். 'Califorin' என்று தப்புத்தப்பாக எழுதிய கறுப்புத் தொப்பியைப் பீத்தலாகத் தலையில் மாட்டிக்கொண்டால் ஊர்சுற்றத் தயார். &lt;br /&gt;&lt;br /&gt;ஊரை ஏமாற்ற கையில் ஐடியல் 'Q &amp; A' கைடு. பத்தாவது ஸ்டேட் போர்டு படிக்கும் அந்நாட்டு மன்னர்களுக்கு ஆபத்பாந்தவனும் இன்னபிறவும் அதுதான் என்பதால் ஆளுக்கு ஒரு புத்தம்புதிய காப்பி வைத்திருப்போம். நிஜமாகவே படித்துக் கிழித்த புத்தகம் அதுவாகத்தான் இருக்கும். மாமல்லபுரம் கட்டுரையைத் துணைப்பாடப்புத்தகத்தில் படுபாவிகள் முப்பது பக்கம் வைத்துத் தொலைத்தால் என்ன பண்ணுவது? ஒரு 250 வார்த்தைக்காக எவ்வளவுதான் ஒரு மனிதன் பாடுபடுவது? சுவாரசியமாக இருந்து தொலைத்தாலாவது பரவாயில்லை. அருச்சுனன் தவம் செய்தால் என்ன, தறிகெட்டுப்போனால் என்ன? ஐடியலில் சிக்கனமாக நான்கு பக்கத்திலிருக்கும் கதைச் சுருக்கத்தைத் தட்டிக்கொண்டு போனால் மீட்டர் சரியாக நிற்கும். ஐடியல் ஒழுங்காகப் படித்தால் அறுபது சதவிகிதம் உத்தரவாதம். ஐடியல் பரிபூரணமாகத் தட்டினால் எண்பது. அதுதவிர பாடப்புத்தகமெல்லாம் படிக்கும் உத்தேசமிருந்தால் பிஸ்தாதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பிஸ்தாவாகப் பெயரெடுத்திருந்ததால் எங்கள் குரூப் ஸ்டடி குழுமத்திற்குக் கிட்டத்தட்ட நானே தலை. சும்மா சாதாரணக் குழு இல்லை அது. வகுப்பில் முதல் ரேங்க், இரண்டாவது, மூன்றாவது, ஐந்தாவது, பதினோராவது மற்றும் பார்டர் பாஸ் என்று ஒரு ஜனநாயகக் கும்பல். கார்த்தி வீட்டு மொட்டை மாடிதான் சாந்திநிகேதன். &lt;br /&gt;&lt;br /&gt;திட்டக்குழு என் தலைமையில் செயல்படும். இன்னின்ன செய்யவேண்டும் என்று தெளிவாக வகுத்துக்கொண்டு தடபுடலாகத்தான் ஆரம்பிப்போம். ஓரிரண்டு கட்டுரைகள் உருப்போட்டானபின் தான் கார்த்தி ஆரம்பிப்பான். இலேசாகக் கழுத்தைத் தூக்கிக் கீழே எட்டிப்பார்ப்பான். கீழே அந்த 'BSA LadyBird' தெரிகிறதோ? ஆயிற்று. "I will have some water" என்று பீட்டருக்குப் பிறந்தவனாய் எழுவான். &lt;br /&gt;&lt;br /&gt;மாடி சமையலறையில் இருந்து பார்த்தால் கீழ் வீட்டில் முற்றத்து ஊஞ்சல் தெரியும். கீழ் வீட்டு டீச்சரிடம் டியூஷனுக்கு வரும் பறவைகளும் தென்படும். ஒரு குவளை தண்ணீரைக் குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் குடிக்கும் தருணத்தில் சின்ன ·ப்ரேம் மூக்குக்கண்ணாடி உள்ளிருந்து மருண்ட இரு கண்கள் எட்டிப்பார்க்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்மிதா எவ்வளவு அழகாக இருப்பாளென்றால், என் நண்பன் அவ்வளவு ஆருயிர் நண்பனாக இருந்திராவிட்டால் அவனை அவள் பார்க்கும் காரணத்தாலேயே அவன் மண்டையைப் பிளந்திருப்பேன். ஆனால் 'நட்பைக் கூடக் கற்பைப் போல எண்ணும்' வமிசத்தில் உதித்தமையால் எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை. ஐந்தரைக்கு டியூஷன் முடிந்தவுடன் அவரவர் வீட்டுக்குப் போய்விட்டால் அப்புறம் மானுடப்பிறவியை இரு தினுசாகப் படைத்ததற்கு என்ன அர்த்தம் இருக்கிறது? &lt;br /&gt;&lt;br /&gt;கீழிருந்து அவளும் நோக்க மேலிருந்து இந்தப் பரதேசியும் நோக்க நாங்களெல்லாம் காதுகளில் புகை விட்டுக்கொண்டு மிச்சசொச்சங்களைக் கவனித்துக்கொண்டிருப்போம். அரட்டை அரங்கம் முடிந்து வண்டிகள் ஊர்சேரும் காலம் வந்தவுடன் அண்ணனுக்குப் பரபரக்கும். "மா! நான் தோ வந்துர்றன்" என்று சைக்கிள் சாவி எடுக்கும்போதே சேமியா கத்துவாள். "மா! இவன் எதுக்குப் போறான்னு கேளேன்". செளம்யா கார்த்தியின் அக்கா. அன்புப்பிசாசு. ஒரே வயது பெரியவள். எல்லா அடிதடி சண்டைகளும் அவளுடனே போடுவோம். &lt;br /&gt;&lt;br /&gt;"போடீ" என்று அவள் தலையில் ஒன்று வைத்துவிட்டு ஹீரோ படிதாண்டுவார். கூட செல்லும் பாக்கியம் ரவுண்ட் ராபின் முறையில் எங்களில் ஒருவனுக்குக் கிடைக்கும். நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு மல்லீஸ்வரன் தெருவில் இருக்கும் அவளது வீட்டுக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டுக்கொள்ளும் வரையில் பின்னாலேயே போவது புண்ணிய காரியம் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பார்வைகளோடேயே பத்தாவது முடிந்தது. பென்னாத்தூர் சுப்பிரமணியம் பள்ளியில் பத்தாவது வரையில் மட்டுமே இருந்ததால், நான் சாந்தோம் பள்ளிக்குப் போனேன். கார்த்தி தாம்பரத்துக்குப் போனான். ஸ்மிதா பத்தாவது பரிட்சையில் பிட் அடித்து மாட்டி பிறகு டுடோரியல் காலேஜில் தேறியதாகக் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் ஏன் சொல்லுகிறேனென்றால், இன்று அலுவலகத்திலிருந்து வழக்கம்போலப் பேய் நடமாடும் வேளையில் திரும்ப வந்துகொண்டிருந்தபோது வானொலியில் 'போறாளே பொன்னுத்தாயி' பாட்டு போட்டார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-110876073956375536?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/110876073956375536/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=110876073956375536' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/110876073956375536'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/110876073956375536'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2005/02/blog-post_18.html' title='பத்தாவது ஸ்டேட் போர்டு'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-110830646205430971</id><published>2005-02-13T06:53:00.000-08:00</published><updated>2007-03-31T07:05:02.092-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>காதலர் தினக் கழுதை</title><content type='html'>ஒரு கணமே வீசிய தென்றலில் &lt;br /&gt;அசைவுற்ற குறுமணியின் &lt;br /&gt;ஒற்றையோசை &lt;br /&gt;இலேசாகத் தொனித்த தருணத்தில்&lt;br /&gt;என்முன்னே தோன்றத்தான் போகிறாய்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நொடிப்பொழுதே பரவிய&lt;br /&gt;சுகந்தத்தின் ஓரிழை&lt;br /&gt;சுவாசித்த நிமிடத்தில்&lt;br /&gt;நம் கண்கள் சந்திக்கத்தான் போகின்றன&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மீட்டலிலே &lt;br /&gt;அறுந்த தந்தியின்&lt;br /&gt;அநாதம் &lt;br /&gt;அதிர்ந்த பொழுதில்&lt;br /&gt;உன் பார்வையை விலக்கத்தான் போகிறாய்&lt;br /&gt;&lt;br /&gt;காதலர் தினத்தில் ஏதும் புதிதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;சினேகமாக ஒரு பார்வை&lt;br /&gt;உதிர்த்துவிட்டுப் போ&lt;br /&gt;&lt;br /&gt;மலர்களின் இதழ்களை &lt;br /&gt;தேவதைகள்் பிய்க்கமாட்டார்கள்&lt;br /&gt;என்று கேள்வியுற்றிருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-110830646205430971?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/110830646205430971/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=110830646205430971' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/110830646205430971'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/110830646205430971'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2005/02/blog-post.html' title='காதலர் தினக் கழுதை'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-110407604433118063</id><published>2004-12-26T07:46:00.000-08:00</published><updated>2007-03-31T07:05:02.092-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>வால் நட்சத்திரம் விழுந்தாச்சு!</title><content type='html'>அப்புறம் மக்களே! ஞாயிறு வந்தாச்சு. புது நட்சத்திரம் வரப்போறாரு. சும்மா சொல்லக்கூடாது, தூமகேதுவா வந்தேன். என் காத்து கடல் மேல பலமா அடிச்சிருச்சு. மூட நம்பிக்கையெல்லாம் சுத்தமா புடிக்காது. ஆனாலும், கல்கி எ·பெக்ட்ல வால் நட்சத்திரம் வேலை செஞ்சது எனக்கு ரொம்பவே வருத்தம். &lt;br /&gt;&lt;br /&gt;முடிஞ்ச வரைக்கும் சுவாரசியமா இந்த வாரம் எழுத முயற்சி பண்ணேன். ஒத்துக்கணும். பொதுவா எழுதறத விட இந்த வாரம் கொஞ்சம் அதிகம் மெனக்கெட்டேன். ஜாலியாத்தான் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டார் வேல்யூ என்னன்னு இந்த வாரம் நல்லாவே தெரிஞ்சிகிட்டேன். கிட்டத்தட்ட அஞ்சாறு மாசமா ஒண்ணும் எழுதாம இருந்த என் வலைப்பூவுக்கு இந்த வாரம் கிடைச்ச ஹிட் கெளண்ட் பாத்து மலைச்சிப்போயிட்டேன். 'இந்த வார நட்சத்திரம்' ரொம்ப நல்லா வொர்க் அவுட் ஆவுது. நட்சத்திரமா எழுதறவருக்கு நல்ல வெளிச்சம் கெடைக்குது. &lt;br /&gt;&lt;br /&gt;சரி! வலப்பூ வால்க, வலப்பூ எளுதறவங்க புகள் வெல்கன்னு சொல்லி அப்பீட் ஆயிக்குறேன். வர்ட்டா!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-110407604433118063?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/110407604433118063/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=110407604433118063' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/110407604433118063'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/110407604433118063'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/12/blog-post_110407604433118063.html' title='வால் நட்சத்திரம் விழுந்தாச்சு!'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-110405374745624869</id><published>2004-12-26T01:35:00.000-08:00</published><updated>2007-03-31T07:05:02.103-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>சென்னையில் கடல் கொந்தளிப்பு - கடற்கரையிலிருந்து...</title><content type='html'>மயிலாப்பூர் கச்சேரி சாலை அருகில் வசித்துவருகிறேன். வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடையில் சாந்தோம் கடற்கரை.&lt;br /&gt;&lt;br /&gt;காலை நிலநடுக்கம் மற்றும் கடல் கொந்தளிப்புப் பற்றிக் கேட்டு, சட்டை மாட்டிக் கிளம்பினேன். கச்சேரி சாலை, தி.நகர் ரங்கநாதன் தெரு மாதிரி இருந்தது. தெருவெங்கும் மக்கள் டிரங்குப் பெட்டிகள், தட்டுமுட்டுச் சாமான்கள், பிளாஸ்டிக் தவலைகளோடும் கலவர முகத்துடனும் கலைந்த தலையுடனும் வேகவேகமாக நடந்துகொண்டிருந்தனர். கச்சேரி சாலை மட்டுமல்லாமல் காரணீஸ்வரர் தெரு, மாதா சர்ச் சாலை என்று கடற்கரையிலிருந்து உள்ளே வரும் அத்தனை சாலைகளிலும் பீதியடைந்த மக்கள் திரண்டிருந்தனர். பலரும் சாலையோரங்களில் அமர்ந்து புலம்பிக்கொண்டிருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் கொஞ்சமாக விசாரித்தும் பார்த்தும் விஷயங்கள் அறிந்துகொள்ள முயற்சி செய்தேன். காலை நிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு கடற்கரை மணற்பரப்பையெல்லாம் தாண்டி உள்ளே வந்திருக்கிறது. கலங்கரை விளக்கம் அருகில் ஆல் இண்டியா ரேடியோ வரை தண்ணீர் உள்ளே வந்திருக்கிறது. கடற்கரைச் சாலை முழுவதும் கடல் நீர் புகுந்த அடையாளமாக மணல் திட்டுக்கள். சாந்தோம் சர்ச் பின்புறம் வரை தண்ணீர் வந்திருக்கிறது. இதனால் இங்கே கடற்கரை மணல்வெளியை ஒட்டிய குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பலருக்கும் என்ன நடக்கிறது என்று தெரியுமுன்னே வீடுகளினுள் தண்ணீர் புகுந்திருக்கிறது. பட்டினப்பாக்கம் கடற்கரையையட்டிய குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;100 பேருக்கு மேல் காணாமற்போயிருக்கக்கூடும் என்று வானொலி அறிவித்தது. பலபேர் பிள்ளைகளைக் காணாமல் கதறிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. ஒரு பக்கம் சன் டீவி பீதியைக் கிளப்பிக்கொண்டிருக்கும்போதே மறுபக்கம் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிய ஆரம்பித்தது. நான் போய்ப் பார்த்தபோது தண்ணீர் பின்வாங்கி மணற்பரப்பு கொஞ்சம் தென்பட ஆரம்பித்திருந்தது. காந்தி சிலைக்குப் பின்பக்கம் இருக்கும் படிக்கட்டு வரை தண்ணீர் தேங்கியிருந்தது. முதல்முறையாகக் கடல் அலைகளைப் பார்த்துப் பயமாயிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் வழக்கம்போல சுத்தம். நான் இரண்டு முறை சென்று பார்த்தபிறகு திரும்பிவரும்போதுதான் மயிலாப்பூர் காவல் நிலையத்திலிருந்து காவலர்கள் வந்து குழுமத் தொடங்கினார்கள். முதல்முறை நான் போகும்போது (மணி காலை ஒன்பதரை இருக்கும்), சாந்தோம் சர்ச் ஒட்டி இரண்டே இரண்டு போக்குவரத்துக் காவலர்கள் நிலைமையைச் சமாளித்துக்கொண்டிருந்தனர். பீதியுடன் கடலலைகளை வெறித்துக்கொண்டு கும்பலாக மக்கள் நின்றிருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;சுமார் பனிரெண்டரை மணியளவில் சாம்பார் சாதம், பன் என்று உணவு வந்து இறங்கியது. பகல் ஒன்றரை மணி அளவில் முதல்வர் விசிட். பார்வையிடுவது என்றால் literally பார்வையிடுவது. வண்டியிலிருந்தவாறே வேடிக்கை பார்த்துக்கொண்டு போனார். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மணிக்கு எங்கள் வீடுகளில் மின்சாரம் வந்தது. கடற்கரைச்சாலை முழுவதும் காவலர் தலைகள் இப்போது. ஆம்புலன்ஸ்கள் பறக்கின்றன. அருகிலுள்ள மருத்துவமனைகள் அனைத்திலிருந்தும் ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டிருக்கின்றன. மீட்புப் பணிகள் சூடு பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். கடல் நீர் நன்கு பின்வாங்கியிருக்கிறது. நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. காலையில் நிகழ்ந்த சோகங்களுக்குப் பின்னர் இப்போது ஏதும் பிரச்னையில்லை. உயிர்ச்சேதம், பொருட்சேதம் குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் ஏதும் தரமுடியாத நிலையிலிருக்கிறேன். மேலும் எதாவது கேள்விப்பட்டால் எழுதுகிறேன். சன் டீவி செய்திகளைப் பொறுத்தவரையில் "take 'em with much more than a pinch of salt" என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டே நாட்களுக்கு முன் MGM resorts போய் கடலலைகளில் ஆட்டம் போட்டது நினைவுக்கு வருகிறது. அந்த அழகுக் கடலா இது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-110405374745624869?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/110405374745624869/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=110405374745624869' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/110405374745624869'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/110405374745624869'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/12/blog-post_26.html' title='சென்னையில் கடல் கொந்தளிப்பு - கடற்கரையிலிருந்து...'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-110391774423115965</id><published>2004-12-24T11:47:00.000-08:00</published><updated>2007-03-31T07:05:02.104-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>குமு(த்)தம்</title><content type='html'>கொஞ்ச நாட்களாகவே எழுத நினைத்துக்கொண்டிருந்தது. சினிமா விமர்சனங்கள், நூல் ஆய்வுகள் என்று பலவும் இருக்கின்றன. ஆனால், இவற்றையெல்லாம் பெரும்பாலாக வெளியிடும் பத்திரிகைகள் குறித்த விமர்சனங்கள் பார்க்கக் கிடைப்பதில்லை (அதை எழுதிய பின்னர் எங்கே போடுவது என்றெல்லாம் கேட்டுத் தொலைக்ககூடாது). இல்லை, இல்லை! சிறு பத்திரிகை பற்றியெல்லாம் பேசப்போவதில்லை. அவற்றின் பொருளடக்கமும், சார்பும் பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுபவை. அவற்றைப் பற்றி நான் பேசுமளவுக்கு விஷய ஞானம் இல்லாதவன். அந்தத் திசைக்கே ஒரு கும்பிடு.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று குமுதம் பத்திரிகையைக் கையில் எடுத்தேன். முதலில் அது கண்ணில் பட்டதால் எடுத்தேன். விகடன் கண்ணில் பட்டிருந்தால் அதை முதலில் எடுத்திருப்பேன். இரண்டுக்கும் வித்தியாசமெல்லாம் ஒன்றும் கிடையாது. ஒரே குட்டை, மட்டை. ஆனாலும், பல வருடங்களாக என் குடும்பத்தினர் விகடன் ஆதரவாளர்கள் என்பதால் அது மேல் ஒரு இது. வேறொன்றுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளாவு வாசகர்கள் படிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் ஆர்.எஸ். பதி மருந்து, வல்லாரை மாத்திரை எல்லாம் ஓசியில் தருவதில்லை. மக்கள் இன்னும் படிப்பதற்காகத் தான் குமுதம் வாங்குகிறார்கள். (எட்டணா சாமானுக்காக ஆறேழு ரூபாய் கொடுத்துப் பத்திரிகை வாங்கி, பிரிக்காமல் தூரப்போடுவதாகச் சொல்லப்படும் செய்திகள் எல்லாம் உயர்வு நவிற்சிதான் என்றாலும், ஓசியில் பினாயில் கொடுத்தாலும் வாங்கிக் குடிக்கும் மக்கள் தொகையைக் கூட்டிப்பார்த்தால் பதினோரு லட்சம் கண்டிப்பாக வரும் என்று நினைக்கிறேன்).&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதிருந்தே பொங்கல் மலர் என்று இரண்டு புத்தகங்கள். ஷ்ரேயாவை அட்டையில் போட்டதற்காகக் குமுதத்துக்கு ஒரு ஓ. பிரித்தால் முதல் பக்கத்தில் முதல் மேட்டர் "சனிக்கிழமை ராத்திரி வந்தால் பத்திக்குது இளமை ஜுரம்!". குமுதம் பிராண்ட். இப்போதைக்கு இதுதான் வெகுமக்கள் பத்திரிகைகள் எல்லாவற்றிற்கும் பிராண்ட். சரி, அது என்ன மேட்டர்? மேல்kind founder member என்பதால் ஆர்வமாகப் போய்ப் பார்த்தேன். ஏமாற்றம். கிட்டத்தட்ட முகம்மது பின் துக்ளக் காலத்திய சமாச்சாரத்தை என்னவோ நேற்றிலிருந்துதான் தொடங்கியதுபோல ஒரு கட்டுரை. நட்சத்திர ஓட்டலில் டிஸ்க் பற்றி எழுதியிருக்கிறார் திருவேங்கிமலை சரவணன். மொத்தம் மூன்றேமுக்கால் நிமிஷங்கள் செலவழித்து எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். "ஜீன்ஸ், டாப், மிடி, ஷார்ட்ஸ், சிலீவ்லெஸ்" -இன்றைய பெண்களின் உடைகளை இவ்வளவு காமெடியாக விளக்கத் திறமை வேண்டும். ஐயா! 1963-ல் இருந்து வெளியே வரலாம். உலகம் கொஞ்சம்போல நகர்ந்து போயிருக்கிறது. "வண்ண விளக்குகளின் ஒளியில் அரங்கமே 'ராப்' இசையில்"...ராப்? மன்னிக்கவேண்டும். தயவுசெய்து நேரில் போய்ப் பார்த்து, விசாரித்து, பெயர்கள் ஒழுங்காகத் தெரிந்துகொண்டு எழுத முயற்சி செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் சினிமா. கோவா திரைப்பட விழா குறித்த கட்டுரையிலிருந்து கேனத்தனமான சினிமாத் துணுக்குகள், கற்பனை உரையாடல்கள் வரை. இந்தச் சமயத்தில் ஷ்ரேயா படத்தை அட்டையில் போட்டதோடு உள்ளேயும் சில படங்களை அள்ளித்தெளித்ததால் குமுதத்துக்கு இன்னுமொரு ஓஓ.&lt;br /&gt;&lt;br /&gt;வெகுமக்கள் பத்திரிகைகளிலிருந்து முதலில் ஒழிக்கவேண்டிய விஷயம் சிறுகதைகள். ஒவ்வொன்றும் வாந்தி கதை. அனைத்திலும் பொதுவான டெம்ப்ளேட் இதுதான்: "அவன் கையில் பேனா மாதிரி ஏதோ ஒன்று எடுத்துவந்தான். டண்டணக்கா. டண்டணக்கா. டுர்ர்ர்ர். கடைசியில் அது பென்சில்!!!!!!!!!!!!!!!!!!!!!!!". என்ன ஆச்சரியம்! இதில் ஒருபக்கக் கதை வேறு. சுஜாதாவைச் சொல்ல வேண்டும். அடுத்து ஒழிக்கவேண்டியது கார்ட்டூன் கதைகள். அவற்றில் கார்ட்டூனும் கிடையாது. கதையும் கிடையாது. ரொம்ப ஓவராகக் கடிக்கிறார்கள். யாராவது முயற்சி செய்து இவற்றையெல்லாம் நிறுத்தினால் பரவாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயேந்திரர் கோட்டா, நடுப்பக்க கோட்டா, ஆன்மீகக் கோட்டா, ஜல்சா பட கோட்டா இதெல்லாம் வழக்கம்போல. கவர்ச்சியில் யார் பெஸ்ட் என்று கருத்துக்கணிப்பு நடத்திப் பரிசும் கொடுக்கிறார்கள். தேர்ந்தெடுத்ததற்கான காரணமும் போடவேண்டும் என்று சொல்கிறார்கள்! பொதுவாக சுவாரசியமாக இருக்கும் பாலிடிக்ஷில் த்ரிஷாவின் பாத்ரூம் மேட்டர் போட்டு சொதப்பிவைத்திருந்தார்கள். 'காதல்' படம் பற்றி நல்ல விமர்சனம் போட்டிருக்கிறது. போய்ப் பார்க்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;பாரதியார் பற்றிய ஒரு கட்டுரை, செல்வராகவன் பேட்டி, ஜெய்-அப்பு விவகாரங்கள் என்று ஒரு சில சுவாரசியமான அம்சங்கள் இருந்தாலும் இந்த வாரக் குமுதம் அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை. நான் தொடர்ந்து, ஆவி, குமுதம் படிப்பதுண்டு. இவர்கள் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால் ஆர்வமூட்டும் ஒரு நல்ல மசாலா இதழைக் கொண்டுவரமுடியும். மசாலாதான். குமுதம் வாங்கிப்படித்து யாரும் வாழ்க்கையில் முன்னுக்கு வந்துவிடப்போவதில்லை. அரைமணி, ஒருமணிநேரம் லேசாகப் படிப்பதற்காவது விஷயம் இருந்தால், 60-70% பக்கங்கள் படிக்கக்கூடியவையாக இருந்தால் தாராளமாக நான் குமுதம், விகடன் வாங்குவேன். அதுகூட இல்லை என்பதுதான் வருத்தம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-110391774423115965?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/110391774423115965/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=110391774423115965' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/110391774423115965'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/110391774423115965'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/12/blog-post_24.html' title='குமு(த்)தம்'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-110382874857124492</id><published>2004-12-23T11:04:00.000-08:00</published><updated>2007-03-31T07:05:02.105-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>சிசேரியன்</title><content type='html'>இன்று அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்ததால் எதுவும் எழுத முடியவில்லை. ஆனால், அப்படியே விட மனசில்லை. அதனால், நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி ஆண்டுமலருக்காக எழுதியதை இங்கே தருகிறேன். இதை இப்போது படிக்க எனக்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. இன்று இதை எழுதியிருந்தால் எப்படி எழுதியிருப்பேன் என்று யோசித்துப் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிசேரியன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டு மலருக்குக் &lt;br /&gt;கவியெழுதச் சொல்லியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இருள்.&lt;br /&gt;இருட்டைக் காட்டிலும் கறுப்பாக&lt;br /&gt;சுற்றிப்படர்ந்து மூச்சுத்திணற&lt;br /&gt;ஒரு பொறி&lt;br /&gt;ஒளிக்கூர் வாளாகக் &lt;br /&gt;கருமையைக் கிழித்து&lt;br /&gt;இத்யாதி&lt;br /&gt;நெருப்புப் பதங்கள் பொறுக்கிக் கோர்த்து&lt;br /&gt;புரட்சி உணர்ச்சி மறுமலர்ச்சி நிரப்பி&lt;br /&gt;ரத்தமாக ஒரு கவிதை&lt;br /&gt;கிளறி முடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற மலரில் பொலிந்த&lt;br /&gt;புரட்சிக் கவிதைக்கும் &lt;br /&gt;இதற்கும் &lt;br /&gt;வேற்றுமை அதிகம் காணப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரளயத் த்வனி.&lt;br /&gt;சிவனார் ஆழிக்கூத்தாட&lt;br /&gt;விஷ்ணு குப்புறப்படுத்திருக்க&lt;br /&gt;ஒளிக்கோளங்கள் சிதற&lt;br /&gt;உள் பிரவாகிக்கும்&lt;br /&gt;உனக்கும் எனக்கும் எவனுக்கும்&lt;br /&gt;புரியக்கூடாத&lt;br /&gt;கவியன்றைச் செதுக்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்கவே பயமாக இருந்ததால்&lt;br /&gt;கிழித்துப் போட்டுவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிறு குடித்த&lt;br /&gt;பீடிப்புகை கவிந்த&lt;br /&gt;நீல வானம் பற்றி&lt;br /&gt;இயற்கைக் கவிதை &lt;br /&gt;செயற்கையாக ஜனித்தது&lt;br /&gt;உடன் அடக்கம் செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கண நெருக்கலில்&lt;br /&gt;இலக்கே மரித்துப் போன&lt;br /&gt;அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களும்&lt;br /&gt;இசக்கவிகளும்&lt;br /&gt;நீலக்கவிகளும்&lt;br /&gt;&lt;br /&gt;பலவும்&lt;br /&gt;&lt;br /&gt;முயன்று கைவிட்டபின்னும்&lt;br /&gt;&lt;br /&gt;தேடிக்கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;ஒரு கவிதைக்காக&lt;br /&gt;&lt;br /&gt;வார்த்தைகளுக்கு மத்தியில்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-110382874857124492?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/110382874857124492/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=110382874857124492' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/110382874857124492'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/110382874857124492'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/12/blog-post_23.html' title='சிசேரியன்'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-110373417419525586</id><published>2004-12-22T08:48:00.000-08:00</published><updated>2007-03-31T07:05:02.106-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>விழிப்பின் இடையில் நான் தூங்கிக்கொண்டிருந்தபோது</title><content type='html'>7:43:&lt;br /&gt;கண்களை மூடிக்கொண்டிருந்தால் தூக்கம் என்று அர்த்தமானால், தினமும் பேருந்தில் தூங்கிக்கொண்டேதான் பயணம் செய்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;7:50:&lt;br /&gt;எங்கள் பேருந்தில் நிறைய மக்கள் ஏறவேண்டும். அவள் ஏறும்போது என் பக்கத்தில் மட்டுமே ஒரு காலி இருக்கை மீதமிருக்கவேண்டும். அதிசயமாகச் சில நாட்களில் அவ்வாறே அமைந்துவிடுவதும் உண்டு. அப்படித்தான் இன்றும். &lt;br /&gt;&lt;br /&gt;"இரண்டே இருக்கைகள்தாம் காலியாக உள்ளன.&lt;br /&gt;ஒன்று என் பக்கத்தில்.&lt;br /&gt;இன்னொன்று என் இதயத்தில்.&lt;br /&gt;நீ உன் விருப்பம்போல அமர்.&lt;br /&gt;பரவாயில்லை."&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லத்தானில்லை. திடீரென்று காதுகளில் உலகின் மிக இனிமையான சங்கீதம் ஒலித்தது. இரண்டாவது முறையும் அதே இசையைக் கேட்டபிறகு வார்த்தைகள் பொருள் கொண்டு "Excuse me" ஆக, அவளுக்கு இடம் விட்டு அமர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;7:54:&lt;br /&gt;ஒவ்வொருவருக்கும் ஒரு பேருந்துக் கதை இருக்கத்தான் செய்கிறது. சமயம் கிடைக்கும்போதெல்லாம் அதைப் பக்கத்திலிருப்பவருக்குச் சொல்ல முயன்றுகொண்டே இருக்கிறார்கள். சிலரது கதைகள் மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன. எனக்கு அப்படியில்லை. என் பேருந்துக்கதைகள் மிகச் சாதாரணமானவை. சொன்னால் யாரும் நின்று கேட்கமாட்டார்கள். ஆனாலும் அவை என் பேருந்துக் கதைகள். எனக்கு மிகவும் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;7:59:&lt;br /&gt;தெற்கிலிருந்து சென்னை நோக்கி வரும் பெரும்பாலான பேருந்துகள் விழுப்புரத்தின் மேல் செல்கின்றன. அவை அனைத்தையும் வீட்டிலிருந்தபடியே கைகாட்டி நிறுத்தி ஏறிக்கொள்ளும் பாத்தியதை பெற்ற ஒரே வீடு எங்கள் மாமா வீடாக இருந்தது. விழுப்புரம் போவதென்பது ஒரு திருவிழா. அங்கே ஒரே வீட்டில் நிறைய குடும்பங்கள். நிறைய குழந்தைகள். உறவே புரியாது. ஒரு திருமணம் முடித்து, பாக்கிகள் அடைத்து, வீட்டைத் திருத்துவதற்குள் அடுத்த திருமணம் அமைந்துவிடும். அடுக்களையில் ஓட்டல் மாதிரி உணவு சமைத்துக் கொண்டே இருப்பார்கள். யாராவது குளிக்க வெந்நீர் கொதித்துக்கொண்டே இருக்கும். நான் தெருவை நோக்கி இருக்கும் ஜன்னலில்தான் முகம் புதைத்திருப்பேன். &lt;br /&gt;&lt;br /&gt;8:03:&lt;br /&gt;பேருந்துகளின் நிறங்களில் எனக்குப் பெரிதாக ஆர்வமிருக்கவில்லை. அவை தாங்கி வரும் ஊர்களின் பெயர்கள்தான் சுவாரசியமாக இருக்கும். ஊரின் பெயரைப் பார்க்கும்போதே ஏதோ இனம்புரியாத கிளர்ச்சி இருக்கும். அந்த ஊருக்குப் போகப் போகிறமாதிரி. அப்புறம் அந்தப் போக்குவரத்துக் கழகப் பெயர்கள். திருவள்ளுவர், தீரன் சின்னமலை, அன்னை சத்யா, பெரியார், பட்டுக்கோட்டை அழகிரி. ஒவ்வொரு கழகத்தின் பேருந்துக்கும் ஒரு உருவமில்லாத உருவம் என் மனதில் பாடமாகி இருக்கும். பட்டுக்கோட்டை அழகிரி எனக்குப் பிடிக்காது. அவன் சொங்கி. தீரன் சின்னமலை ஆக்ரோஷமான ஒரு மாவீரன். அவனைப் பார்க்கும்போது பெருமிதமாக இருக்கும். யாருக்கோ கைகாட்டி அவன் பெருமைகளை நான் எடுத்துச் சொல்வதுபோலத் தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;8:08:&lt;br /&gt;நான் ஏறும் பேருந்து சாலையில் இருக்கும் அனைத்துப் பேருந்துகளையும் கடந்து முதலில் வந்துவிடவேண்டும். அதேபோல, நான் ஏறும் பேருந்தில் வேறெதிலும் இருக்காத வித்தியாசமான தொனியில் ஹாரன் இருக்கவேண்டும். லாரிகள் எனக்குப் பிடிக்காது. சாலைகளில் தறிகெட்டு அலையும் ராட்சதன்கள். ஒரு ஒளிக்கிரணம் போல எனது பேருந்து சாலையைக் கிழித்துக்கொண்டு இந்த ராட்சதர்களையெல்லாம் தோற்கடித்துச் சென்றுவிடவேண்டும். ஒவ்வொரு ராட்சதனையும் போராடி வெல்லவேண்டும். அவன் தோற்கும்போது நான் அவ்வளவு குதூகலப்படுவேன். அப்போது எனது வித்தியாசமான ஹாரனும் கெக்கலி கொட்டிச் சிரிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;8:11:&lt;br /&gt;பேருந்து ஓட்டுனர்கள்தான் எனது வீரபுருஷர்கள். பிற மானுடர்கள் அனைவரும் வெறுமனே உயிர்வாழும்போது, இவர்கள் மட்டும் ஜொலிக்கும் வெள்ளி ரதங்களைச் செலுத்தியவாறு வெற்றிவலம்வந்து உலகை ஆள்கிறார்கள். கையிலில்லாத சாட்டையைச் சொடுக்கி வீரியமான ஒலி ஏற்படுத்துகிறார்கள். இந்த நாயகர்கள் பவனி வருவதற்காகத்தான் பாதைகளாலான உலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பாதைகளின் இருமருங்கிலும் களைகளாகப் பாதைகளற்றவை  முளைத்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;8:17:&lt;br /&gt;ஒன்றாம் எண் பேருந்தின் நாயகன்தான் எனக்கு மிகவும் பிரியமானவன். அவன் சாரதி. அவனது தேரை எப்படிச் செலுத்தவேண்டும் என்பதை முழுவதும் அறிந்த விற்பன்னன். அவன் சாலையில் தடம் பதித்தவுடன் இன்னபிற வாகனங்கள் அனைத்தும் அவனுக்கு அடிபணிந்து விலகும். அவன்தான் சக்கரவர்த்தி. அவனது ராஜபாட்டை கிழக்குக் கடற்கரைச் சாலை. அங்கே அவன் பேருந்தைச் செலுத்தும்போது மட்டும் சாலை காற்றாலமைந்திருக்கும். பேருந்து தியானத்திலிருக்கும். உச்சாடனமாக அவனது பேச்சு சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கும். யாராவது கேட்கவேண்டும் என்பதில்லை. அவன் பேசிக்கொண்டேதான் இருப்பான். &lt;br /&gt;&lt;br /&gt;8:23:&lt;br /&gt;ஒன்றாம் எண் பேருந்தின் ஓட்டுனரைப் போன வாரம் வேலையிலிருந்து எடுத்துவிட்டார்கள். அவன்மேல் நிறைய புகார்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்றாம் எண் பேருந்து சாலையில் தட்டுத்தடுமாறி ஊர்ந்து செல்கிறது. கிழக்குக் கடற்கரைச் சாலை சோபையிழந்து தோன்றுகிறது. கழுத்தில் அடையாள அட்டையை மாட்டிக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கி என் நிறுவனத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறேன்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-110373417419525586?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/110373417419525586/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=110373417419525586' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/110373417419525586'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/110373417419525586'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/12/blog-post_22.html' title='விழிப்பின் இடையில் நான் தூங்கிக்கொண்டிருந்தபோது'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-110365438850773605</id><published>2004-12-21T10:38:00.000-08:00</published><updated>2007-03-31T07:05:02.106-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>சென்னைப்புற நானூறு</title><content type='html'>உம் புள்ள எங் க்குறான்னு &lt;br /&gt;லெயிட்டு கம்பத்ல சாஞ்சினு &lt;br /&gt;நெக்குலா கேக்குற!&lt;br /&gt;எம் மவென் எங் க்குறான்னு எனுக்குத் தெர்யாது.&lt;br /&gt;சொம்மா &lt;br /&gt;புலி உள்ளாற இர்ந்து போனா மேரி &lt;br /&gt;க்குது பெத்த வகுறு.&lt;br /&gt;அய்த்யா குப்பத்ல &lt;br /&gt;மூஞ்சி கீய்ஷ்ட்டு &lt;br /&gt;E-5ல இர்ப்பாம். &lt;br /&gt;போயி பாரு!&lt;br /&gt;&lt;br /&gt;(மூலம்:&lt;br /&gt;சிற்றில் நல்தூண் பற்றி, 'நின்மகன்&lt;br /&gt;யாண்டு உளனோ?' என வினவுதி; என் மகன்&lt;br /&gt;யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்&lt;br /&gt;புலி சேர்ந்து போகிய கல்அளை போல&lt;br /&gt;ஈன்ற வயிறோ இதுவே;&lt;br /&gt;தோன்றுவன் மாதோ! போர்க்களத்தானே!&lt;br /&gt;- காவற்பெண்டு)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-110365438850773605?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/110365438850773605/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=110365438850773605' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/110365438850773605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/110365438850773605'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/12/blog-post_21.html' title='சென்னைப்புற நானூறு'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-110356991761208592</id><published>2004-12-20T11:10:00.000-08:00</published><updated>2007-03-31T07:05:02.107-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>ராமனும் கிருஷ்ணனும் - ஒரு பின்நவீனத்துவப் பார்வை</title><content type='html'>இந்த ராமனுக்குத்தான் எத்தனை பெயர்கள்! ஜானகிராமன், கல்யாணராமன், அனந்தராமன், கோதண்டராமன்...ரெண்டு மூன்று சரணம் வைத்துப் பாட்டு எழுதுமளவுக்குப் பெயர்கள் ராமனுக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;அதேபோலத்தான் கிருஷ்ணனும். கோபாலகிருஷ்ணன், சந்தானகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன்...&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு பெயர்களையும் எப்படி நினைவில் வைத்திருப்பது? கடவுளின் பெயரே நினைவிலில்லையென்றால் தெய்வகுற்றமாகவிடுமல்லவா! அதனால் நமது முன்னோர்கள் யோசித்து இந்தப் பெயர்களை எளிதில் அழைக்க ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பூஜ்யத்தைக் கண்டுபிடித்தது முதற்கொண்டு நமது முன்னோர்களின் கணித பாண்டித்தியம் மிகவும் பிரசித்தி பெற்றதாகையால் அவர்கள் தமது கணித அறிவைப் பயன்படுத்தி ஒரு புது உத்தியைக் கண்டுபிடித்தார்கள். அதுதான் ARRAY எனப்படுவது.&lt;br /&gt;&lt;br /&gt;ராமனின் பெயர்களனைத்தையும் தூக்கி ஒரு ARRAYயில் போட்டார்கள். அதற்கு RAMA என்று பெயரிட்டார்கள். அதுபோலவே, கிருஷ்ணனின் பெயர்களனைத்தையும் ஒரு ARRAYயிலிட்டு, அதை KRISHNA என்று அழைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகென்ன! &lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;'ARRAY RAMA, ARRAY KRISHNA'!! :))&lt;br /&gt;------&lt;br /&gt;சத்தியமாக இதை எழுத நினைக்கவில்லை. ஆனால், மதியக்காவின் (தூமகேதுவில் பின்னூட்டம் பார்க்க) விருப்பத்தை நிறைவேற்றவேண்டாமா? ஆகவே மக்களே! அனைவரும் தயைகூர்ந்து புதுப்பேட்டை ஆட்டோக்களைத் தொந்தரவு செய்யாதிருக்கவேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-110356991761208592?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/110356991761208592/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=110356991761208592' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/110356991761208592'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/110356991761208592'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/12/blog-post_20.html' title='ராமனும் கிருஷ்ணனும் - ஒரு பின்நவீனத்துவப் பார்வை'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-110348730299362039</id><published>2004-12-19T21:11:00.000-08:00</published><updated>2007-03-31T07:05:02.108-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>முடிந்தால் பிடித்துக்கொள்!</title><content type='html'>அவன் பான் ஆம் விமான நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு விமானி.&lt;br /&gt;அவன் ஜார்ஜியா மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவன்.&lt;br /&gt;அவன் லூஸியானா மாகாணத்தில் பணிபுரியும் ஒரு வக்கீல்.&lt;br /&gt;அவனுக்கு வயது பத்தொன்பது.&lt;br /&gt;அவன் &lt;strong&gt;·ப்ரான்க் வில்லியம் அபக்னெல் ஜூனியர்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;நிஜம் சில சமயங்களில் எத்தனையோ அற்புதமான கதைகளை விஞ்சிவிடுகிறது. சில மனிதர்களுக்கு நொடிக்கு நொடி புதிய திருப்பங்களுடன், புதிய வெளிச்சங்களுடன், புதிய தவறுகளுடன், புதிய புரிதல்களுடன் ஒரு த்ரில்லர் வாழ்க்கை அமைந்துவிடுகிறது. ·ப்ரான்க் வில்லியம் அபக்னெலின் வாழ்க்கை அப்படிப்பட்டது; ஒரு ஹாலிவுட் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் போல. உலகப் புகழ்பெற்ற இயக்குனர் &lt;strong&gt;ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்&lt;/strong&gt;கிற்கும் அப்படித் தோன்றியதில் வியப்பொன்றுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;·ப்ரான்க் ஒரு புத்திசாலி மாணவன். அப்பா செல்லம். அப்பாவுடன் மிக நெருக்கம். நல்ல குடும்பம். அமைதியான வாழ்க்கை. நிம்மதியான தூக்கத்தைக் கலைப்பதுபோல ஒரு சபிக்கப்பட்ட நாளில் அப்பா அம்மா பிரிய நேர்கிறது. ·ப்ராங்க்கின் 420 வாழ்க்கை உருவாகிறது. ஒரு செக் புத்தகத்தை மூலதனமாக வைத்து டுபாக்கூர் காசோலைகள் எழுதுவதில் தொடங்கி அமெரிக்கா முழுவதையும் பரபரப்பில் ஆழ்த்திய தகிடுதத்த ராஜாவின் கதையை &lt;strong&gt;Catch me if you can&lt;/strong&gt; திரைப்படத்தைவிடச் சிறப்பாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;·ப்ரான்க்காக &lt;strong&gt;லியோனார்டோ டிகாப்ரியோ&lt;/strong&gt;. இதைவிடப் பொருத்தமான ஆள் ஹாலிவுட்டில் கிடையாது. ·ப்ரான்க்கின் மிகமுக்கியமான ஆயுதம் அவனது வசீகரம். போகுமிடமெல்லாம் பெண்களை வளைத்துப் போட்டே பல காரியங்களைச் சாதித்த ·ப்ரான்க் பாத்திரத்தில் கனகச்சிதமாகப் பொருந்துகிறார் டிகாப்ரியோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;டாம் ஹாங்க்ஸ்&lt;/strong&gt; ஹாலிவுட் செய்த தவப்பயன். ஒரு துறையில் ஒருவரது ஆளுமையை நான்கு படிகளாகச் சொல்கிறார்கள். can do, good, brilliant, natural. நடிப்பில் டாம் ஹாங்க்ஸ் நான்காவது வகை. நடிப்பு அவரது இயல்பு. பல் துலக்குவதில் நமக்கு இருக்கும் லாவகம் அவருக்கு நடிப்பில் வருகிறது. அடுத்த முக்கியமான ஆள், ·ப்ரான்க்கின் அப்பாவாக வரும் &lt;strong&gt;க்ரிஸ்டோ·பர் வாக்கன்&lt;/strong&gt;. அப்பா-மகன் உறவு பற்றியெல்லாம் தமிழ்ப்படங்களில் பலவற்றில் இப்போது பேசுகிறார்கள். அவர்களெல்லாம் இந்தப் படத்தைப் பார்க்கலாம். ஏதாவது கற்றுக்கொள்ள இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் அப்படியே ·ப்ரான்க்கின் வாழ்க்கையை அலுங்காமல் குலுங்காமல் தருவதாகவெல்லாம் சொல்லமுடியாது. நிஜக்கதையில் நடந்த விஷயங்கள் கொஞ்சம் அப்படி, கொஞ்சம் இப்படியென்று புரட்டிச் சொல்லப்பட்டிருப்பது உண்மை. படத்தின் திரைக்கதை கிட்டத்தட்ட 80% ·ப்ரான்க்கின் வாழ்க்கைச் சம்பவங்களே என்கிறார் ஸ்பீல்பெர்க். படத்தின் படத்தன்மைக்காக சில சங்கதிகள் கட்டிவிடப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் ஒரு ரொமான்டிக் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காகவே. ஹாலிவுட் திரைப்பட நாயகன் என்று வந்துவிட்டால் அதற்கென்று சில larger-than-life கட்டளைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒரு கமர்ஷியல் படத்தில் மீறுவது உசிதமில்லை என்பதால் கொஞ்சம் ரீல் சுற்றுகிறார்கள். இந்த இடைச்செருகல்களால் ·ப்ரான்க்கின் பிம்பம் கொஞ்சம் மெருகூட்டப்படுவது உண்மை. ஆனால், இப்படிச் சொல்லியிராவிட்டால் இந்தப்படம் நம்மை இந்த அளவுக்குப் பாதித்திருக்குமா என்பது சந்தேகமே.&lt;br /&gt;&lt;br /&gt;தெருவில் விமானப் பணிப்பெண்கள் புடைசூழச் செல்லும் ஒரு விமானியைப் பார்த்தவுடனே ·ப்ரான்க் தானும் ஒரு விமானியாவதென்று முடிவுசெய்கிறான். போலி விமானியாகவே உலகம் முழுவதும் பயணம் செய்து போகும் இடமெல்லாம் போலிக் காசோலைகளை அள்ளித்தெளித்து மில்லியன் கணக்கில் டாலர்கள் அள்ளுகிறான். ஜாலியாக ஒரு மருத்துவமனைக்குப் போய் தான் ஹார்வார்டில் மருத்துவம் படித்திருப்பதாக சர்டிபிகேட் காட்டுகிறான். திடீரென்று ஒரு கட்டத்தில் தான் சட்டம் படித்திருப்பதாகச் சொல்லி, பாரிஸ்டர் தேர்வும் எழுதுகிறான். ஒரு டீனேஜ் பையனாக அவன் செய்யும் சாகசங்கள் வியப்பிலாழ்த்துகின்றன. அத்துடன், அவன் எப்படிப்பட்ட புத்திசாலியாக இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் எழுகிறது. இது ஜேம்ஸ் பாண்ட் கதையோ, சிட்னி ஷெல்டன் நாவலோ அல்ல என்று அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கிரிமினலாக வாழ்க்கையைத் தொடங்கும் ·ப்ரான்க் அப்படியே செத்துப்போயிருந்தால் இந்தப் படம் வந்திருக்காது. ஆனால், ·ப்ரான்க்கின் வாழ்க்கையின் இன்னுமொரு சினிமாத் திருப்பம் காத்திருக்கிறது. ஒரு விமானியாக, ஒரு குழந்தைகள் நல மருத்துவனாக, ஒரு வக்கீலாக இன்னும் என்னென்னவோ வேஷங்களில் வலம்வந்த ·ப்ரான்க்கும் ஒரு நாள் FBIயிடம் பிடிபடுகிறான்; பனிரெண்டு வருடங்கள் தண்டனை பெறுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தருணத்தில்தான் ஒரு ஆச்சரியமான சம்பவம் நடக்கிறது. ·ப்ரான்க்கின் உதவி FBIக்கே தேவைப்படுகிறது. ·ப்ரான்க்கிடம் ஒரு மிக முக்கியமான பொருள் இருக்கிறது. ஒரு கிரிமினலின் மூளை. ·ப்ரான்க் வாழ்க்கையின் இரண்டாம் பாகம் எழுதப்படுகிறது. இன்று ·ப்ராடு, ·போர்ஜரி கண்டறியும் துறையில் உலகத்தின் முக்கியமான புள்ளிகளில் ஒருவராகக் கருதப்படுபவர் &lt;a href="http://www.abagnal.com"&gt;&lt;strong&gt;·ப்ரான்க் வில்லியம் அபக்னெல் ஜூனியர்&lt;/strong&gt;&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-110348730299362039?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/110348730299362039/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=110348730299362039' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/110348730299362039'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/110348730299362039'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/12/blog-post_19.html' title='முடிந்தால் பிடித்துக்கொள்!'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-110348698923532705</id><published>2004-12-19T21:00:00.000-08:00</published><updated>2007-03-31T07:05:02.109-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>இந்த வார தூமகேது</title><content type='html'>இந்த வார நட்சத்திரம் சங்கரன்! இந்த வாரம் மட்டுமில்லீங்கோ! கொஞ்ச நாளாவே அவுரு நட்சத்திரமாத் தானே இருக்காரு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;(அடேய்! அரசியல் பேசினா பின்மண்டை கபாலத்துலயே பொளேர்னு விழும், தெரிஞ்சிக்கோ)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரிங்ணா! அரசியல் பேசமாட்டேன். சமாட்டேன். மாட்டேன். ட்டேன். டேன். ன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மொழியில் இன்றைய இலக்கியச் சூழலின் போக்குகள், நீக்குகள், நாக்குகள், வாக்குகள், சாக்குகள், தாக்குகள், பேக்குகள் எல்லாவற்றையும் பற்றிய ஒரு கருத்துப் பரிமாற்றக்களமாக இந்த ஒரு வாரத்தைப் பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கை எனக்குத் துளிர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;(வண்ட்டாண்டா எல்க்கியவியாதி! டேய்! உனுக்குத் தெரிஞ்சத மாத்தரம் பேசு. சொம்மா டகால்டி காட்னே, மவ்னே நீ காலி)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா, மன்ச்சுக்க! இனி எல்க்கியம் அது இதுன்னு வாயே தொறக்கமாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாப்பானைப் பொளக்கவேண்டும், தேவனைத் தெர்த்த வேண்டும், பிள்ளையைப் பிலுக்க வேண்டும். பெரியார் என்னா சொன்னார்? அம்பேத்கார் என்னா சொன்னார்? ஜாதி ஒழிப்பைப் பற்றிப் பேசவில்லையானால், அடித்துக்கொள்ளவில்லையானால், கெட்டவார்த்தைகளால் திட்டிக்கொள்ளவில்லையானால், காறித் துப்பிக்கொள்ளவில்லையானால் வலைப்பூக்களினால் வேறென்ன பயன்? அதனால் நண்பர்களே! நாமெல்லோரும் சமத்துவத்தோடும் சகோதரத்துவத்தோடும் எந்தவித பேதமுமின்றி ஆளுக்கு ஒரு உருட்டுக்கட்டையை எடுத்து எல்லோர் மண்டையையும் பிளந்துபோட்டுவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;(உன்னப் பொளக்கணும்டா! டேய்! பெரியாரோட தாடியத் தவுர உனுக்கு வேற என்னா தெரியும்? தெரியாததப் பேசாதேன்னு இப்பதான சொன்னேன்)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒக்கே தலீவா! அப்பன்னா இந்த வாரம் முழுசா மனசுக்குத் தோணின பெரிய தலைங்க எல்லாத்தையும் ஒரு ரவுண்டு அசிங்க அசிங்கமா திட்டி வுட்றலாமா? என்ன நாஞ் சொல்றது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;(இப்ப எந்திரிச்சி வந்தேன்னு வெச்சிக்க, மக்கா, நீ சட்னிதாண்டி)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அய்யோ! வாணாம் வாணாம்! சரி, அப்ப என்னாத்தைப் பேசுறது? இதெல்லாம் பேசாட்டி, நாம பேசுறத யாரும் கேக்க மாட்டாய்ங்களே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;(த பாரு கண்ணா! நீ பாத்ததப் பேசு, நீ அனுபவிச்சதப் பேசு, நீ படிச்சதப் பேசு, உனுக்குப் புடிச்சதப் பேசு, உனுக்குப் புரிஞ்சதப் பேசு, தெர்தா)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ செரி. பெயரிலி பாணியில பின்ன ஈனத்துவத்தப் பத்தி இந்த வாரம் முழுசும் போட்டுத் தாளிச்சிறவேண்டியது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;(அடிங்...!!!)&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;அல்லாத்துக்கும் வண்க்கம் நைனாங்களா! நல்லா கீறீங்களா? நாந்தான் இந்த வார நச்சத்தரம், வால் நச்சத்தரம்!&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-110348698923532705?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/110348698923532705/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=110348698923532705' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/110348698923532705'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/110348698923532705'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/12/blog-post.html' title='இந்த வார தூமகேது'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-109899281410552183</id><published>2004-10-28T13:44:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.109-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>காண்பதெல்லாம் மறையுமென்றால்...</title><content type='html'>ஒரு பரந்த மேய்ச்சல்வெளியில் தரையிறங்கியிருந்தோம். பக்கத்தில் மூன்று ஏக்கர் பரப்பில் ஒரு ஏரி. இல்லினாய்ஸ¤க்கும் இண்டியானாவுக்கும் இடையே எங்கோ, ஊரிலிருந்து ரொம்பத் தள்ளி இருக்கவேண்டும் இந்த இடம். இன்று பயணிகள் யாருமில்லை. எங்களுக்கு விடுமுறை என்று எண்ணிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"கவனி!" அவன் சொன்னான், "கவனிக்காதே! இங்கேயே அமைதியாக இருந்து வேடிக்கை பார். நீ பார்க்கப் போவது அதிசயமொன்றுமில்லை. அணு இயற்பியல் புத்தகத்தை எடுத்துப் படித்துப்பார்...ஒரு குழந்தை கூட தண்ணீரின்மேல் நடந்துவிடமுடியும்"&lt;br /&gt;&lt;br /&gt;இதைச் சொல்லிக்கொண்டே அவன் அந்த ஏரியின் நீர்ப்பரப்பின் மேல் கொஞ்ச தூரம் நடந்துபோனான். தண்ணீர் இருப்பதை அவன் கவனித்தமாதிரியே தெரியவில்லை. தண்ணீர், கல்லாலான ஏரியின் மேல் கொளுத்தும் வெயிலில் ஏற்படும் கானல் நீர் போல இருந்தது. நீர்ப்பரப்பின்மேல் திடமாக நின்றான். ஒரு அலை, ஒரு துளி, அவனது பூட்ஸில் தெறித்திருக்கவேண்டுமே! ம்ஹ¥ம்!&lt;br /&gt;&lt;br /&gt;"வா! நீ வந்து செய்துபார்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;என் கண்களால் பார்த்தது. கண்டிப்பாய் இது சாத்தியம்தான். அவன் தான் அங்கே நின்றுகொண்டிருக்கிறானே, சரியென்று நானும் நடந்துபோய் அவனுடன் நின்றுகொண்டேன். நீலநிற லினோலியம் தரையின்மேல் நடப்பதுபோலிருந்தது. எனக்குச் சிரிப்பு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"டொனால்ட்! எனக்கு நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன்றுமில்லை! எல்லோரும் இன்றோ நாளையோ கற்றுக்கொள்ளப்போகிற ஒன்றை உனக்குச் செய்துகாட்டிக்கொண்டிருக்கிறேன். இன்று நீதான் எனக்குக் கிடைத்தாய்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனால்...நான்..."&lt;br /&gt;&lt;br /&gt;"இதோ பார்! தண்ணீர் திடப்பொருளாய் இருக்கலாம்" - காலால் மிதித்தான். கல்லைத் தோலால் அடிப்பதுபோல் சத்தம் கேட்டது. "இல்லாமலும் இருக்கலாம்" - திரும்பவும் மிதிக்க, இப்போது தண்ணீர் எங்களிருவரின்மீதும் தெறித்து விழுந்தது. "புரிகிறதா? முயற்சித்துப்பார்!"&lt;br /&gt;&lt;br /&gt;அதிசயங்கள் எவ்வளவு விரைவாக நமக்குப் பழக்கமாகிவிடுகின்றன! ஒரே நிமிடத்தில் நீரின்மேல் நடப்பது சாத்தியம் என்று நினைக்கத்தொடங்கிவிட்டேன். இது முடியும், இது இயல்புதானே...அட! இப்பொழுது அதற்கென்ன வந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;"தண்ணீர் திடப்பொருளாய் இருக்குமானால் அதை எப்படி நாம் குடிப்பது?"&lt;br /&gt;&lt;br /&gt;"எப்படி அதன்மேல் நடந்தாயோ அப்படித்தான், ரிச்சர்ட். இது திடமுமில்லை, இது திரவமுமில்லை. இது நம் கண்கள் முன் எப்படி இருக்கப்போகிறது என்பதை நீயும் நானும்தான் முடிவு செய்கிறோம். தண்ணீர் திரவமாய் இருக்கவேண்டும் என்று நீ விரும்பினால், அதைத் திரவம் என்று நினை. திரவம் என்று நினைத்துக்கொண்டே அதைக்குடி. அது வாயுவாய் இருக்கவேண்டுமானால் அதை வாயு என்று நினைத்துக்கொள், சுவாசி. முயன்று பார்".&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு உயர்ந்த ஆத்மா அருகாமையில் இருப்பதால் ஏதோ நடக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். ஒரு வேளை இவ்வாறான ஆத்மாக்களின் ஐம்பது மீட்டர் சுற்றளவில் இவையெல்லாம் நடக்க அனுமதிக்கப்படுகின்றனவோ என்னவோ...&lt;br /&gt;&lt;br /&gt;குனிந்து தண்ணீர்ப்பரப்பினுள் கையை விட்டேன். திரவம். பரப்பின்மேல் படுத்து நீலத்தில் என் முகத்தை வைத்துக்கொண்டு முகர்ந்துபார்த்தேன், நம்பிக்கையாய். சூடான திரவ ஆக்ஸிஜன் மாதிரி வாசமடித்தது. மூச்செதுவும் அடைக்கவில்லை. எழுந்து அவனைக் கேள்வியாய்ப் பார்த்தேன். என் மனதில் என்ன இருக்கிறது என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"பேசு" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் ஏன் பேசவேண்டும்?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ சொல்லவருவதை வார்த்தைகளால் சொன்னால்தான் சரியாக இருக்கும். பேசு"&lt;br /&gt;&lt;br /&gt;"நம்மால் தண்ணீர் மேல் நடக்கமுடிந்தால், குடிக்கவும் முகரவும் இயன்றால், இவற்றையெல்லாம் தரைக்கும் ஏன் செய்யமுடியாது?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆம். நல்லது. நீ கவனித்தாயானால்..."&lt;br /&gt;&lt;br /&gt;வரைந்துவைத்த ஏரியின்மேல் நடந்துபோவதைப் போல் எளிதாய் நடந்து கரைக்குப்போனான். மணலும் புல்லுமாய் இருந்த தரையில் கால் வைத்த அடுத்த கணம் அமிழ்ந்தான். பிறகு தட்டுத்தடுமாறி எப்படியோ தோளளவு தரையில் நின்றான். அந்த ஏரி திடீரென்று ஒரு தீவாகிவிட்டது போலவும், அதைச் சுற்றி இருந்த நிலம் கடலாகிவிட்டது போலவும் தோன்றியது. அழுக்கு நிறத்தில் களிமண் துளிகளைத் தெறித்துக்கொண்டே புல்வெளியில் கொஞ்ச நேரம் நீந்தினான். பிறகு அதன்மேல் மிதந்தான். பிறகு எழுந்து நிலத்தில் நடக்கத்தொடங்கினான். ஒரு மனிதன் தரையில் நடந்து போவது அச்சமயம் மாபெரும் அதிசயமாய்ப் பட்டது!&lt;br /&gt;&lt;br /&gt;ஏரிப்பரப்பின்மேல் நின்றுகொண்டு கரவொலி எழுப்பி அவனது சாதனைக்காக அவனைப் பாராட்டினேன். அவன் தலைவணங்கி அதை ஏற்றுக்கொண்டு பதிலுக்கு என்னைப் பாராட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏரியின் விளிம்புக்கு நடந்து சென்றேன். நிலம் ஒரு திரவம் என்று எண்ணிக்கொண்டே என் பாதத்தால் அதைத் தொட்டேன். புல்லில் அலைகள் வட்டமாய்ப் பரவின. தரை எவ்வளவு ஆழமாய் இருக்கும்? கிட்டத்தட்ட உரக்கவே கேட்டுக்கொண்டேன். அது எவ்வளவு ஆழம் என்று நான் நினைக்கிறேனோ அவ்வளவு ஆழம் இருக்கும். இரண்டடி, ஆம், இரண்டடி ஆழம் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெகு நம்பிக்கையாய்த் தரையில் கால் வைத்து, உடனடியாகத் தலை வரை அமிழ்ந்துபோனேன். தரைக்கடியில் ஒரே கறுப்பாய் இருந்தது. பயமாய் இருந்தது. பிரயாசைப்பட்டு, மூச்சைப் பிடித்துக்கொண்டு தட்டுத்தடவி திடமான தண்ணீரைத் தேடினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புல்வெளியில் உட்கார்ந்து சிரித்துக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ ஒரு சுவாரசியமான மாணவன் தெரியுமோ?"&lt;br /&gt;&lt;br /&gt;"நானொன்றும் மாணவனில்லை! என்னை இதிலிருந்து வெளியே கொண்டுவந்து தொலை!"&lt;br /&gt;&lt;br /&gt;"நீயே வெளியே வந்துகொள்"&lt;br /&gt;&lt;br /&gt;தடுமாற்றத்தை நிறுத்தினேன். திடம் என்று அதைப் பார்த்தால் எழுந்து வெளியே வந்துவிடலாம். திடம் என்று நினைத்தேன்...உடம்பெல்லாம் கறுப்பாய் அழுக்கு கெட்டித்தட்டிப் போக, வெளியே வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த வேலையில் இறங்கினால் மிகவும் அழுக்காகிப் போகிறது"&lt;br /&gt;&lt;br /&gt;அவனது நீலநிற சட்டையும் ஜீன்ஸ¤ம் துளிக்கூட அழுக்கில்லாமல் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆ!" என் தலையிலிருந்தும் காதிடுக்குகளிலிருந்தும் அழுக்கெடுத்தேன். சிறிது நேரம் கழித்து என் பர்ஸைப் புல்வெளியில் விட்டுவிட்டு, திரவத் தண்ணீரில் போய் எப்போதும்போல ஈரவழியில் என்னை சுத்தப்படுத்திக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சுத்தமாக இதைவிட நல்ல வழி இருந்தாகவேண்டும் இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இதைவிடவும் வேகமான வழி இருக்கிறது"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனால் நீ சொல்லமாட்டாய் இல்லையா? அங்கேயே அமர்ந்து சிரி. நானே யோசித்துக் கண்டுபிடித்துக்கொள்கிறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி."&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் ஈரம் சொட்டச்சொட்ட என் விமானத்துக்குப் போய் உடை மாற்றி, ஈர ஆடைகளைக் காயப்போட்டுவிட்டு வரவேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ரிச்சர்ட், இன்றைக்கு நீ செய்ததை மறந்துவிடாதே. நமக்கு நிஜமாகவே தெரிந்த ஒரு விஷயத்தை ஒரு கனவு மாதிரி, ஒரு அதிசயம் மாதிரி, ஒரே ஒரு தடவைதான் நடக்கும் என்பது போல நினைத்து மறந்துவிடுவோம். நல்ல விஷயம் எதுவும் அதிசயமல்ல. அழகான விஷயம் எதுவும் சொப்பனமல்ல."&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த உலகமே ஒரு கனவென்று நீதானே சொன்னாய். ஆனால் சிலசமயம் இது அழகாக இருக்கிறதே. சூரிய அஸ்தமனம். மேகங்கள். வானம்"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை. இந்த பிம்பம் ஒரு கனவு. ஆனால் அழகு நிஜம். வித்தியாசம் புரிகிறதா?"&lt;br /&gt;&lt;br /&gt;நான் தலையாட்டினேன். கிட்டத்தட்ட புரிந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;(சுவடுகளின் நூறாவது பதிவிற்காக, ரிச்சர்ட் பாக்கின் 'Illusions' புத்தகத்திலிருந்து ஒரு பகுதி. மொழிபெயர்ப்பு - அடியேன். அவஸ்தை - உங்களுக்கு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-109899281410552183?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/109899281410552183/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=109899281410552183' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/109899281410552183'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/109899281410552183'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/10/blog-post_28.html' title='காண்பதெல்லாம் மறையுமென்றால்...'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-109889838666046939</id><published>2004-10-27T10:32:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.110-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>கேல்வின் அண்ட் ஹாப்ஸ் - 10</title><content type='html'>&lt;img alt="calpic.gif" src="http://suvadu.yarl.net/pictures/calpic.gif" border="0" height="192" width="600" /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-109889838666046939?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/109889838666046939/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=109889838666046939' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/109889838666046939'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/109889838666046939'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/10/10.html' title='கேல்வின் அண்ட் ஹாப்ஸ் - 10'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-109881647237429835</id><published>2004-10-26T11:39:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.111-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>பாட்லு-பொர்லு-ஜாமா-தமிழ்</title><content type='html'>அக்டோபர் 15 அன்று இகாரஸ் பிரகாஷ் எழுதிய &lt;a href="http://icarus1972us.blogspot.com/2004/10/blog-post_109785132501331969.html"&gt;பதிவை&lt;/a&gt; இன்று படித்தேன். இந்தியா சுதந்தரம் வாங்கிவிட்டது என்ற செய்தியைக் கூடிய சீக்கிரம் படித்துவிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே வலைப்பூ உலகிலும் இணைய நண்பர்கள் வட்டத்திலும் இளம்பெரும் இலக்கியவியாதியாய் அறியப்பட்டிருக்கும் நான், ஒரு கேப் விட்டு எழுத வரும்போது இலக்கியம் பற்றி எழுதினால்தானே பொருத்தமாய் இருக்கும்? இன்றைய விஷயம் வெங்கட் சாமிநாதன் பெற்ற விருதும் அதன் மேல் நடந்த சர்ச்சைகளும் பற்றி. முதலில் பிரகாஷ் கொடுத்திருந்த கட்டுரை வரிசையில் இரண்டு தொடர்பில்லாத இழைகள் இருப்பது உறுத்துகிறது. காலக்கிரமமாகக் கொடுக்க எண்ணியிருக்கிறார். ஆனால், இந்த விஷயத்தில் காலக்கிரமமாய்க் கொடுப்பது பொருந்தவில்லை. இரண்டையும் தனித்தனி இழையாய்க் குறித்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாய்ந்து மாய்ந்து அனைத்துச் சுட்டிகளையும் படித்துமுடித்ததில் மொத்தமாய் என்ன கற்றுக்கொண்டேன்? பூஜ்யம். குழப்பமே மிஞ்சியது. திசே தமிழன்-சுமதி சுந்தர ரூபன்-ஜெயமோகன்-வெ.சா இழையில் தனி நபர் தாக்குடன்கூட, கொஞ்சமே கொஞ்சமாய் விஷயமிருந்தது. ஆனால் சாரமில்லை. வெ.சா மற்றும் ஜெயமோகனின் பதில்கள் தெளிவாய் இருந்ததாகப் பட்டது. திசே தமிழன், சுமதி சிந்தனைகளும் எதிர்வினைகளும் ஆக்கோவாய் இருந்ததே ஒழிய ஆக்கமாய் இல்லை. மாலனின் கேள்விகளும் அதற்கான வெ.சாவின் பதிலும் இதில் ஒட்டவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த இழை (மைய இழை என்றும் சொல்லலாம்) வெ.சா-சு.ரா எதிர்வினைகள். தமிழ் இலக்கிய வட்டத்தில் அவரவர் துறைகளில் மிக முக்கியமானவர்களாக இவர்களிருவரும் முன்னிறுத்தப்பட்டுப் பலமுறை படித்திருக்கிறேன். இருவருடைய எழுத்துக்களையும் படித்தபோது (கொஞ்சம்போல படித்தபோது என்று படிக்கவும்), அவை ஏந்தி நின்ற கருத்துக்களின் அழுத்தமும் அவ்வெழுத்துக்களின் உண்மையும் என்னை வியக்க வைத்திருக்கின்றன. துரதிருஷ்டவசமாக இந்த இழையிலிருக்கும் நீண்ட கட்டுரைகள் அல்லது தன்பக்க நியாயத்தைச் சொல்லும் புலம்பல்கள் அனைத்தும் மாபெரும் வியர்த்தமாகவே எனக்குத் தொனிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மூத்த எழுத்தாளர்கள் இருவர் ஆக்கபூர்வமான விவாதங்கள் ஏதுமில்லாமல் குறிக்கோளே அற்ற ஒரு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பது என்ன காரணம் கருதி? அவர்களுக்குப் பொழுது போகவில்லையென்று பொதுவாய்ச் சொல்லிவிட இயலும். ஆனால் அது கொழுப்பு. மிகக் கொடிய அளவில் மனப்பாரம் அழுத்த, அதனால் உந்தப்பட்டு எழுதப்பட்ட எழுத்துக்களாகவே இவை இருக்கின்றன. சு.ரா சொல்வது சரியா, வெ.சா சொல்வது சரியா என்று எனக்குச் சத்தியமாய்த் தெரியவில்லை. ஆனால், எவ்வளவோ நடந்தும்கூட இன்றும் நம் தமிழ்ச்சூழலில் எந்தவிதப் பின்னிணைப்புகளோ, அனுமானங்களோ, தனிநபர் காழ்ப்புணர்ச்சிகளோ இல்லாமல் கருத்தை மட்டும் முன்வைத்து விவாதிக்கும் போக்கு உருவாகவில்லை என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குக் காரணமாய் என் கண்களுக்குத் தெரிவது ஒவ்வொருவருள்ளும் இருக்கிற அடம். என்வகையில் இது சரி, அவன் வகையில் என்ன என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை என்கிற ஆதார மனப்போக்கு. எந்த ஒரு விஷயத்தையும் அதன் universe-உடன் வைத்துப் பார்த்து விசாலமான பரப்பில் அதன் முக்கியத்துவம் என்ன, அதன் விவாதக்களம் என்ன என்று யோசிக்கும் அளவுக்கு யாருடைய மனமும் விசாலமாக இல்லை என்று தோன்றுகிறது. அந்த வகையில் இதில் ஈடுபடும் ஒவ்வொருவரும் மிகக் குறுகிய, பைசா பிரயோஜனமில்லாத மனநிலையுடன் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கட் சாமிநாதனையோ சுந்தர ராமசாமியையோ இந்த எழுத்துக்களின் மூலம் பார்க்கும்போது தெருவில் நாற்பது பேர் கூடி அடித்துத் துவைத்துப்போட்ட ஒரு நாதியற்ற மனிதன் வீட்டிற்குப் போய், சின்ன சண்டை போட்ட அவனுடைய பெண்சாதியிடம் எகிறுவதுபோல்தான் படுகிறது. இருவரும் நல்ல நண்பர்களாகவே, பல விஷயங்களில் ஒத்த கருத்துடையவர்களாகவே இருந்திருப்பர். ஆனாலும், எந்த வகையிலும் உபயோகமில்லாத ஒரு வாக்குவாதத்தால் இருவரும் முகந்திருப்பிப்போவது சிறுபிள்ளைத்தனமாகப் படுகிறது. இதேபோன்ற சண்டைகளால்தான் இன்றைய சிற்றிலக்கிய அக்கப்போர்களும் அடிதடிகளும் நடக்கின்றன என்றால் கேட்க மிகக் கேவலமாய் இருக்கிறது. சு.ரா, வெ.சா இருவரும் எத்தனையோ இழிமனமும் காழ்ப்புணர்ச்சியும் கொண்டவர்களால் காயப்பட்டிருப்பார்கள். உண்மை. ஆனாலும், ஒரு தேனீர்க் கோப்பையின்முன் ஒரு மாலை நேரத்தில் தீர்த்திருக்கவேண்டிய ஒரு விஷயத்தைப் பற்றி பொதுவில் ஒரு பத்திரிகையில் இவ்வளவு தூரம் கடித்துக்குதறிக்கொள்கிறார்கள் என்றால் பார்க்கப் பயமாய் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நமது வலைப்பூக்களிலும் இந்தக் கூறுகளெல்லாம் அங்கங்கு தென்படுவதைப் பார்க்கிறேன். தமிழில் நல்ல விஷயங்கள் சொல்ல முனையக்கூடிய எந்த ஊடகத்திலும் இந்த சைத்தான் வந்து புகுந்துவிடும் போல இருக்கிறது. நாம் உருப்படியான விஷயங்கள் செய்வது மிக அரிது. இதோ பாருங்கள், எவ்வளவு நேரம் வீணடித்திருக்கிறேன்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-109881647237429835?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/109881647237429835/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=109881647237429835' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/109881647237429835'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/109881647237429835'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/10/blog-post_26.html' title='பாட்லு-பொர்லு-ஜாமா-தமிழ்'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-109726752244828273</id><published>2004-10-08T13:31:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.112-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>Calvin and Hobbes</title><content type='html'>இன்று முதல் கேல்வின் அண்ட் ஹாப்ஸ் கார்ட்டூன் தொடராக வரப்போகிறது. முதலில் எனக்குப் பிடித்த சில சித்திரங்களை எந்த வரிசையும் இல்லாமல் போட நினைத்தேன். பிறகு அனைத்து கேல்வின் கார்ட்டூன்களையும் வரிசையாகப் போட்டுவிட முடிவு செய்துவிட்டேன். 1987 முதல் 1991 வரை வந்த இந்தத் தொடர் எனக்கு மிகவும் பிடித்த கார்ட்டூன் தொடர்களில் முதன்மையானது. கேல்வின் என்று ஒரு சிறுவன், அவன் உயிர் நண்பனாய் பாவிக்கும் ஹாப்ஸ் என்ற ஒரு புலி (பொம்மை), அப்பா, அம்மா, சூஸி என்ற ஒரு தோழி(?) இவர்களைச் சுற்றித் தான் சம்பவங்கள். பொதுவாக ஒவ்வொரு சித்திரமும் தனித் தனியானதுதான். 4 - 5 படங்கள் தொடர்ச்சியுடையவையாய் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கேல்வினின் உலகம் அற்புதமானது. எந்த ஒரு கட்டியமும் இல்லாமல் கேல்வினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இனி உங்கள் பாடு. அவன் பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;கூடிய விரைவில் இதற்கு ஒரு பின்னூட்டப் பகுதி ஏற்பாடு செய்கிறேன். அதுவரை ஏதாவது சொல்லத் தோன்றினால் கார்ட்டூனின் கீழே உள்ள புதிய வலைப் பதிவின் பின்னூட்டத்திலேயே உங்கள் கருத்துக்களைப் போட்டுவிடலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-109726752244828273?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/109726752244828273/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=109726752244828273' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/109726752244828273'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/109726752244828273'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/10/calvin-and-hobbes.html' title='Calvin and Hobbes'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-109553747074327747</id><published>2004-09-18T13:56:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.112-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>கிழக்குக் கடற்கரையோரம்...</title><content type='html'>கடலென்னும் தொட்டிலிலே&lt;br /&gt;கட்டுமரம் மிதக்கையிலே &lt;br /&gt;களியாட்டம் ஆடுதடி ஐலேசா! - நெஞ்சு&lt;br /&gt;கதைகதையாப் பேசுதடி ஐலேசா!&lt;br /&gt;&lt;br /&gt;சமுத்திரத்துப் பாவிமக&lt;br /&gt;சலசலத்துச் சிரிக்கையிலே &lt;br /&gt;சந்தோஷம் பொங்குதடி ஐலேசா! - மனசில்&lt;br /&gt;சந்தடியும் அடங்குதடி ஐலேசா!&lt;br /&gt;&lt;br /&gt;சமீபகாலங்களில் நான் பார்த்திருந்த மிகப்பெரிய நீர்நிலை எங்கள் வீட்டுப் பெரிய வாளியில் பிடித்து வைக்கப்பட்ட தண்ணீர். அப்படிப்பட்ட நான் இன்று சாயங்காலம் இருந்தது நடுக்கடலில் ஒரு கட்டுமரத்தில்!&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் அலுவலகத்தில் பணிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது எங்காவது போய் ஊர்சுற்றி ஜாலி பண்ணவேண்டும் என்ற எழுதப்படாத அருமையான விதி ஒன்று இருக்கிறது. அதன்படி, இன்று சற்று வித்தியாசமாக யோசித்து, மாமல்லபுரம் அருகிலுள்ள GRT Temple Bay Resorts என்ற ஒரு இடத்துக்குப் போயிருந்தோம். அங்கே சிறப்பம்சம் கட்டுமரத்தில் கடலுக்குள் அழைத்துச் செல்வது. கடல் தண்ணீரில் கணுக்கால் மட்டுமே நனைய அனுமதிக்கும் என்போன்ற பிரகிருதிகளுக்கு இது மிகவும் அபாயகரமான விஷயமாகத் தோன்றினாலும் மனப்பேய் மத்தியான உறக்கத்திலிருந்தபோது ஒரு ஆர்வக்கோளாறில் இந்த இடத்திற்குப் போய்ப் பார்ப்பதென்று தீர்மானித்தாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;சற்றே முரட்டுத்தனமான கடல். அதனால் தண்ணீருக்குள் போவதற்கு முன் ஒரு உயிராடையைக் (Life Jacket என்பதன் தமிழ்ப்'படுத்தல்') கொடுத்து மாட்டிக் கொள்ளச் சொன்னபோது உள்ளுக்குள் 'ஒய்' என்றாலும், எச்சில் விழுங்கி, கேனத்தனமாகச் சிரித்துவைத்து அதை மாட்டிக்கொண்டேன். அதில் ஜிப் இல்லை என்பதும் உடம்போடு இறுக்கிப் பிடிக்க வேண்டிய இணைப்புகள் உடைந்தும் உடையாமலும் இருந்தன என்பதும் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி உற்பத்தியைப் பன்மடங்கு அதிகமாக்கியது. படகிலும் போயிருக்கலாம், கட்டுமரத்திலும் போயிருக்கலாம். ஆனாலும் கட்டுமரம் என்ற வார்த்தையின் வசீகரம் மிகவும் ஈர்த்துக்கொண்டிருந்தது (கல்கி நாசமாய்ப் போகட்டும்).&lt;br /&gt;&lt;br /&gt;துடுப்பெல்லாம் கிடையாது. மோட்டார் பொருத்தப்பட்ட கட்டுமரம்தான். ஆனாலும் ஏதோ பெரிய சாகசம் செய்யப்போகும் வேகத்தோடு நாங்கள் நான்கு பேர் கட்டுமரத்தைச் சுற்றி நின்றோம். கட்டுமர ஓட்டுனரும் நடத்துனரும் (நான் மெட்ராஸ்காரன் அய்யா! எனக்கு மாநகரப் போக்குவரத்துக் கழகம்தான் தெரியும். என்ன செய்ய?!) சாதகமான அலை வரக்காத்திருந்து கட்டுமரத்தைத் தண்ணீருள் தள்ளியபோது மனதினுள் ஏனோ பூங்குழலி வந்து மலர்தூவிப் போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுமரம் என்பது மரத்தால் கட்டப்பட்டது. அதனால் கட்டுமானத்தின் சந்துபொந்துகள் வழியாகத் தண்ணீர் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் சிந்தனையோட்டத்தினூடே மட்டும் வரக்கூடியது என்பதால் என் சிற்றறிவுக்கெல்லாம் எட்டவேயில்லை. என் கால்சட்டை முழுவதுமாக நனைந்தபிறகு நாம் கடலிலிருக்கிறோம் என்ற பிரக்ஞை பின்மண்டையில் தட்ட, தண்ணீருக்குக் கொஞ்சம் நண்பனானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ கடலுக்குள் போனோம். தண்ணீரில் கொஞ்ச நேரம் நனைந்தோம் என்றில்லாமல் நடுக்கடலில் தண்ணீருக்குள் இறங்கவேண்டும் என்றெல்லாம் நம் மக்களுக்கு ஏன் ஆசை வருகிறது? கயிறொன்றைக் கையில் கொடுத்து "கடலில் இறங்குடா கண்ணா!" என்றபோது பேஜாராகிப்போனேன். ஆனாலும் 'ஆசையே துன்பத்துக்குக் காரணம்' என்று புத்தர் வேலைவெட்டி இல்லாமலா சொல்லிவைத்தார்?! தண்ணீருக்குள் இறங்கு. மூக்கிலும் வாயிலும் தண்ணீர் குடி. முங்கு. அப்புறம் தடவி மேலே வா. (இத்தனையும் Life Jacket போட்டுக்கொண்டே. நான் எவ்வளவு தத்தி பார்த்துக்கொள்ளுங்கள்!) இரண்டு மூன்று நிமிஷம் பார்த்துவிட்டு இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று கட்டுமரத்தில் திரும்ப ஏறியாயிற்று. இப்போது விட்டால் ஒரு அரைமணி நேரம் அங்கே இருப்பேன்! எல்லாம் தரை கொடுக்கும் தைரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கப்புறம் கரைசேர்ந்து, ஒரு அரைமணிநேரம் கடற்கரையில் அலைகளில் விளையாடிக் களைத்து, மரணப்பசியோடு MGM Resort போய் மூக்குமுட்ட சாப்பிட்டு வீடு வந்து சேர்ந்தாயிற்று. மனசு மட்டும் இன்னும் கடலிலேயே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடல் ஒரு அற்புதம். உலகின் அனைத்து மனிதர்களும் மண்டியிடத்தக்க பெருமிதம் அதனிடம் இருக்கிறது. இயற்கையின் இந்தப் பிரம்மாண்டத்தை முழுவதும் உணர நடுக்கடலன்றி வேறு பொருத்தமான இடம் ஏது? ஒரு சின்ன கட்டுமரத்தில் நாலாபக்கமும் தண்ணீரின் இருப்பும் ஓசையும்  சூழ்ந்திருக்க நமது சின்னஞ்சிறுமையைப் பரிபூரணமாய் அறியவேண்டும். அது ஆனந்தம். அப்போது ஆகாயத்தைப் பார்த்திருக்கவேண்டும். தவறிவிட்டேன். &lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-109553747074327747?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/109553747074327747/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=109553747074327747' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/109553747074327747'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/109553747074327747'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/09/blog-post.html' title='கிழக்குக் கடற்கரையோரம்...'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-109510046226690513</id><published>2004-09-13T11:32:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.121-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>"Life is reel"</title><content type='html'>ஒரு ஊர்ல ஒரு வேலயத்த வெட்டிப்பய. வெனையொண்ணும் தெரியாது. வீண் பேச்சுக்குக் கொறச்சலில்ல. தொடப்பக்கட்டைக்கிப் பட்டுக் குஞ்சலம் கட்டினாப்ல, அவனுக்கு ஒரு கம்பீட்டரு. அறுக்க மாட்டாதவளுக்கு அம்பத்தெட்டு அருவாமனை. படங்காட்டுற பயலுக்குத் தோதா அதுல ஒரு 17 inch monitor, 5.1 surround sound card, 5.1 channel speaker setup (5 speaker, 1 sub woofer).&lt;br /&gt;&lt;br /&gt;அதிசயம் அதிசயம் அத்தகாரே, கொதிக்கிற கூழு சிரிக்கிதடின்னு அவன் என்ன பண்ணானாம், ஒரு DVD drive வாங்கினானாம். அல்பனுக்கு அதிஷ்ட்டம் வந்தா, அத்தராத்திரியில கொட புடிப்பாங்கறமாதிரி அவன் பண்ற அட்டூழியத்துல, அன்னியிலேந்து வீட்டுக்குப் புடிச்சது சனி.&lt;br /&gt;&lt;br /&gt;டுபாக்கூர் கடையில டூப்ளிகேட் வீசிடி எடுத்து பாத்துகிட்டு இருந்த பய, இன்னிக்கி என்னாடான்னா ஊர் பேர் தெரியாத இங்கிலீஷ் படமெல்லாம் பாத்துகிட்டுத் திரியுறான்.&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;சென்டிமெண்ட் படமென்றாலே எனக்குக் கொஞ்சம் அலர்ஜி. அப்படிப்பட்ட எனக்கு முன்னால் ஒரு சென்டிமெண்ட் சமுத்திரத்தையே கொண்டுவந்தால் எப்படி இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;நன்றாக இருக்கும்! 'Sleepless in Seattle' படம் பார்க்கும்போது அப்படித்தான் இருந்தது. இந்தப் படத்திலிருந்து ஒரு பத்துப் பதினைந்து இந்திப்படமும் ஐந்தாறு தமிழ்ப்படமும் செய்திருப்பார்களென்று தோன்றியது. அப்படி ஒரு 'டச்சிங் டச்சிங்' படம். ஆனாலும் கண்டிப்பாக இந்தப் படத்தைத் தவறவே விடாதீர்கள். என் திமிரெடுத்த நக்கலையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு இந்தப் படம் பார்த்தபோது ஏற்பட்ட உணர்வு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;செத்துப்போன மனைவியின் நினைவுகளிலேயே வாடிக்கொண்டிருக்கும் கதாநாயகனின் (Tom Hanks) குட்டிப் பையன், அப்பா படும் அவஸ்தை பார்க்க சகிக்காமல் அப்பாவுக்கு இன்னொரு திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரேடியோவில் ஒரு நிகழ்ச்சி. கிட்டத்தட்ட, நம்ம விஜய் டீவியில் வந்த 'கதையல்ல நிஜம்' மாதிரி. (அது என்னவென்று தெரியாதவர்களுக்கு, ஏதாவது ஒரு பிரச்னையுள்ளவரை அழைத்துவந்து அவரது குறைகேட்டு, ஆறுதல் சொல்லி, பிரச்னையைத் தீர்த்து வைக்க முயற்சி செய்து குட்டை குழப்பப்படும். இடையிடையே பொதுமக்கள் தொலைபேசி, கேனத்தனமான யோசனைகளெல்லாம் சொல்வார்கள்).&lt;br /&gt;&lt;br /&gt;நம் குட்டிப்பையன் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சிக்குத் தொலைபேசி செய்து, அப்பாவையும் பேசச்சொல்கிறான். அந்தப் பேச்சைக் கேட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பெண்களும் (உயர்வு நவிற்சி) அவனைத் திருமணம் செய்ய விரும்புகிறார்கள். அதில் ஒரு பெண் (Meg Ryan), ஏற்கனவே இன்னொருவரைக் காதலித்துக் கொண்டிருக்கிறாள். நிச்சயமும் ஆகிவிட்டது. அந்த நிலையில் வானொலியில் இந்த நிகழ்ச்சியைக் கேட்கிறாள். இனம்புரியாத ஒரு உந்துதலில், எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் உச்சியில் காதலர் தினத்தன்று கதாநாயகனைச் சந்திக்க விரும்புவதாகக் கடிதமும் எழுதிவிடுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களிருவரும் சேர்கிறார்களா இல்லையா? கணித்திரையில் காண்க என்று தினத்தந்தி பாணியில் முடிக்காமல், இந்தப் படம் பற்றி ரெண்டு வரி.உணர்வுபூர்வமாக நம்மை மிக சந்தோஷமாக உணரவைக்கும் படம். நாயகன் சாம் பால்ட்வின் ஒரு ஆதர்ச புருஷன். அவனுக்குப் படத்தொடக்கத்திலேயே பெரிய சோகம். நம் ஆட்களிடம் விட்டிருந்தால் டஜன் கணக்கில் கர்ச்சீப் பிழியவிட்டிருப்பார்கள். நல்ல வேளை. பூமியில் இன்னும் நல்லார் சிலர் உளறிக்கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருவதால் பிழைத்தோம். மெக் ரயனும் அந்தப் பொடியனும் கலக்கல். ஜாலியாகப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுமாதிரி இன்னும் சில படங்கள் மாட்டின. Catch me if you can, Unbreakable, Signs, Road to Perdition, The Green Mile, Amelie, The Italian Job, The Bicycle Thief, Desparado இப்படி விவஸ்தையே இல்லாத கலவையாய். இங்கே அபிராமபுரத்தில் Cinema Paradiso என்று ஒரு கடை. அங்கே வெறும் DVD தான் வைத்திருக்கிறார்கள். கேட்ட படமெல்லாம் கிடைக்கின்றன. அகிரா குராசாவா எல்லாம் கண்ணில் பட்டனர். என் சம்பளத்துக்கு இன்னும் நிறைய வேட்டு காத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-109510046226690513?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/109510046226690513/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=109510046226690513' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/109510046226690513'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/109510046226690513'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/09/life-is-reel.html' title='&quot;Life is reel&quot;'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-109328607751671721</id><published>2004-08-23T11:33:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.121-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>சுஜாதாவின் வலைப்பதிவு பற்றிய கருத்துகள்</title><content type='html'>சமீபத்தில் 'உயிர்மை' இதழின் முதலாண்டு நிறைவு விழா மற்றும் 'உயிர்மை.காம்' துவக்க விழா நிகழ்ச்சியில் எழுத்தாளர் சுஜாதாவைப் பார்த்தேன். பார்க்க மிகவும் வருத்தமாயிருந்தது. முதுமையின் வலுக்கரங்கள் முழுமையாய்ப் பிடித்து அழுத்திக்கொண்டிருக்க, வில்போல வளைந்த முதுகுடன் தளர்ந்து நடந்து வந்தவரா சுஜாதா?! அவரது குரல் கேட்டுதான் சற்று ஆறுதலாயிருந்தது. அதே பழைய வசீகரக்குரல்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வார ஆனந்த விகடனில் சுஜாதா 'கற்றதும் பெற்றது'மில் வலைப்பதிவாளர்கள் பற்றி எழுதியிருக்கிறாரென்று கேள்விப்பட்டு, படித்தேன். முதலில் குதிரையின் வாயிலிருந்து:"இப்போது புதிதாக பிலாக்ஸ் என்று வந்திருப்பது ஒரு விதத்தில் சின்ன வயசில் நாங்கள் எல்லோரும் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையின் மறுவடிவம்தான். 'இதோ பார் என் கவிதை', 'இதோ பார் என் கருத்து', 'இதோ பார் உலகுக்கு என் உபதேசம்' என நானும் இருக்கிறேன் நண்டுவளையில் என்று, ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பிரகடனப்படுத்த கைகளைக் குவித்து ஏதோ ஒரு திசையில் குரல் கொடுத்துவிட்டு, யாராவது பதில் தருகிறார்களா என்று அவரவர் பதினைந்து நிமிஷப் புகழுக்குக் காத்திருப்பதுதான் இது! பிரபஞ்சத்தில் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை இப்படித்தான் தேடுகிறார்கள்"&lt;br /&gt;&lt;br /&gt;கற்களின் மேல் செதுக்கியதற்குப் பின், ஓலைச்சுவடிகளில் எழுதியதற்குப் பின், காகிதத்தின்மேல் துணியின்மேல் எழுதியதற்குப் பின், அச்சுத் தொழில்நுட்பம் தோன்றி, பல்கிப்பெருகி புத்தகங்கள் எழுதிக் குவித்ததற்குப்பின் வரும் அடுத்த தொழில்நுட்ப மாற்றம் இணைய எழுத்து. அதில் முக்கிய வடிவங்களில் ஒன்று வலைப்பதிவு. ஒரு மொழியில் மிகுந்த ஆளுமையும், செல்வாக்கும், அதனால் ஏற்படும் பொறுப்பும் மிக்க ஒரு மூத்த எழுத்தாளர் ஒரு வெகுஜன இதழில், லட்சக்கணக்கான தொழில்நுட்பம் தெரியாத மக்களுக்கு இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாத்தியத்தை அறிமுகப்படுத்தும்போது எழுத வேண்டுவது மேற்கண்டதா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வருடம் வலைப்பதிவு நடத்திக் கிழித்ததென்ன என்று யாரேனும் கேட்டால் என்னால் ஓரளவுக்குமேல் பதில் சொல்ல இயலாது என்று ஒப்புக்கொள்கிறேன். இலக்கியமாய்ப் பார்த்தால் ஒரு நல்ல நாவலோ, நல்ல சிறுகதையோ, நல்ல கவிதையோ, நல்ல விமர்சனமோ வராது போயிருக்கலாம் (தங்கமணியும் பெயரிலியும் நினைவுக்கு வந்து படுத்துகிறார்கள்). துறைசார்ந்து கவனித்தால் கவனிக்கத்தக்க வகையில் படைப்புகள் வராது போயிருக்கலாம் (அடடா! மீனாக்ஸ் எழுதுவது இருக்கிறதே!). ஆனால், ஒரே ஒரு வருட வாழ்க்கையில், இன்று புகழ்பெற்றிருக்கும் ஊடகங்கள் என்ன கிழித்திருக்க முடியும் என்று நாம் எதிர்கேள்வி கேட்பதற்கு நேரமாகாது. ஆனால் நோக்கம் அதுவல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;புதியதோர் சாத்தியம் நம் முன்வரும்போது அதன் நிறைகுறைகளை ஆய்ந்து நிறைகளை முன்னிறுத்தி, மக்களுக்குச் சென்று சேர்த்து, குறைகளைச் சீர்செய்ய முயல்வதே செய்யத்தக்கது. அதுவல்லாது, மேற்கூறிய வகையில் வெட்டி விமர்சனம் செய்வது எவ்வகையிலும் நியாயமல்ல. அதுவும், சுஜாதா போன்ற வாசகர் வெள்ளம் கொண்ட எழுத்தாளர்களுக்கு இது கொஞ்சமும் அழகல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு தனி மனிதனும் (திரு. சுஜாதா உட்பட) தன்னைப் பிரகடனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவது அவ்வளவொன்றும் கீழ்த்தரமானதென்று எனக்குத் தோன்றவில்லை. நீங்களும் நானும் ஏன் எழுதுகிறோம்? நல்ல ஒரு விஷயத்தை நாம் சொல்லி நான்கு பேர் தெரிந்துகொள்ளலாம் என்றோ, நம்மிடம் உள்ள ஏதோ ஒரு திறமையை மற்றவர் அடையாளம் காணலாம் என்றோ, நிஜமாகவே சமூகத்திற்கு ஏதாவது நல்ல விஷயம் செய்யலாம் என்றோ, இணையத்திலும், காகிதத்திலும், சுவர்களிலும், ஏன், கழிப்பறையிலும் எழுதிவைப்பது ஏன்? பதினைந்து நிமிஷப் புகழ் பற்றி சுஜாதா எழுதுவதற்குமுன் சில நொடிகள் கண்மூடி யோசித்திருக்கலாம். வேற்றுக்கிரக உதாரணம் முலம் என்ன சொல்ல வருகிறார்?&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் வருத்தமான முன்னுதாரணம். மட்டுறுத்தப்படாத, தணிக்கை செய்யப்படாத எழுத்து என்கிற ஒரே வித்தியாசத்தைத் தவிர எனக்கு இதழ்களிலும் புத்தகங்களிலும் வரும் எழுத்துக்களுக்கும் வலைப்பதிவுகளுக்கும் எந்த ஒரு வேறுபாடும் புலப்படவில்லை. நான்கு புதிய சிந்தனைகள் வருவது அவ்வளவு பாவகாரியமா என்ன? "நாற்பது குப்பைகள் மத்தியில் நான்கு" என்று சொல்லப்போகிறவரிடம் ஒரு பட்டியல் காட்ட விழைகிறேன்: குமுதம், ஆனந்த விகடன், காலச்சுவடு, குங்குமம், கல்கி, வாரமலர், உயிர்மை, மங்கையர் மலர், தீம்தரிகிட, ஜூனியர் விகடன், ரிப்போர்ட்டர், கணையாழி, தேவி, ராணிமுத்து... புரிகிறதா ஐயா!&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-109328607751671721?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/109328607751671721/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=109328607751671721' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/109328607751671721'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/109328607751671721'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/08/blog-post.html' title='சுஜாதாவின் வலைப்பதிவு பற்றிய கருத்துகள்'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-109061015483358419</id><published>2004-07-23T12:08:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.122-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>'தட்டு'ங்கள் திறக்கப்படும்</title><content type='html'>பனிரெண்டாம் வகுப்பு இயற்பியல் புத்தகம். தமிழ் வழி. முதல் பாடம் "மின்காந்த அலைகளும் அலை ஒளியியலும்". அப்படியென்றால் என்ன என்ற அரிச்சுவடி கூட தெரியாத தேப்யம் நான். ஐ. ஐ. டி சீட்டு கிடைப்பதற்காக இந்த பூமியில் பிறந்த இரண்டாம் நாளிலிருந்து வகுப்புகளுக்கெல்லாம் போயிருக்காத, ஆசிரியர் தொழில் செய்து சம்பளம் வாங்கும் ஊழியர்களிடமிருந்து மனப்பாடப் பகுதிகளை மட்டுமே பயின்ற பின்னணியுடன் இந்தப் புத்தகத்தைப் பிரிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாடம், முதல் பக்கம், முதல் பத்தி இதோ:&lt;br /&gt;"பிரிட்டிஷ் நாட்டு அறிஞர், ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் 1864ல் முடுக்குவிக்கப்பட்ட மின்னூட்டங்கள், மின்புலமும், காந்தபுலமும் இணைந்த மாறுபாடுகளை உண்டாக்குகின்றன என்ற ஒரு குறிப்பிடத்தக்க கருத்தை வெளியிடார். மின்னூட்டங்கள் தொடர்ந்துஅலைவுறுமென்றால் இம்மாறுபாடுகளின் மின்காந்தக் கூறுகள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைவதோடு மட்டுமல்லாமல் இயக்கத் திசைக்கும் குத்தாக அமையும்."&lt;br /&gt;&lt;br /&gt;என் தலையிலிருக்கும் கருமை நிற வஸ்துக்களெல்லாம்தான் இதைப்படித்துவிட்டு செங்குத்தாக அமைகின்றன. இதே புத்தகத்தில் இன்னும் சில பக்கங்கள் கழித்து மின்னூட்டம், மின்புலம், காந்தபுலம் எல்லாமும் அடிப்படையிலிருந்து விளக்கப் படவேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிலையில் முதல் பக்கத்தில் இந்த இம்சை. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டிலிருக்கும் பல லட்சக்கணக்கான மாணவப் பரிதாபங்களின் பிரதிநிதி நான். படித்தது ஸ்டேட் போர்டு. ஆங்கில வழியில்தான். எனக்கு சி. பி. எஸ். சி பற்றியோ, மெட்ரிக்குலேஷன் பற்றியோ தெரிந்ததெல்லாம் அவற்றின் பாடப் புத்தகங்கள் தலை வைத்துப் படுக்க வசதியாயிருக்கும் என்பது ஒன்றுதான். அதனால் நான் ஊறின, நாறின ஸ்டேட் போர்டு பற்றி மட்டும் இங்கே சொல்லப் போகிறேன். சில அத்தியாவசியமான புரிதல்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பு பற்றி:&lt;br /&gt;1. படிக்கிறவன் என்பவன் மார்க்கு வாங்குபவன்.&lt;br /&gt;2. பள்ளிக்கல்வியின் தலையாய நோக்கம் மார்க்கு வாங்குவது.&lt;br /&gt;3. சொந்தமாக எழுதுபவனுக்கு மார்க்குப் போடக்கூடாது. அவனுக்கு அறிவு கிடையாது.&lt;br /&gt;4. புரிந்துகொள்ள முயற்சிப்பவன் முட்டாள்.&lt;br /&gt;5. வகுப்பில் கேள்வி கேட்பவன் அதிகப்பிரசங்கி.&lt;br /&gt;6. உருடப்பா உருட்டுவதே உய்ய உகந்த உபாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்வு பற்றி:&lt;br /&gt;1. பரிட்சை எழுத அத்தியாவசியமான விஷயங்கள் அடிக்கோடிட பென்சில், ஸ்கேல்.&lt;br /&gt;2. ஒன்றுமே தெரியாவிட்டாலும் ஜல்லியடிப்பதை ஐந்து பாயிண்ட்டுகளாய்ப் பிரித்து ஜல்லியடிக்க வேண்டும்.&lt;br /&gt;3. டயமண்டு நோட்ஸில் பார்த்த முக்கியமான வார்த்தைகளைக் கண்டிப்பாக விடையில் எழுத வேண்டும்.&lt;br /&gt;4. விடை தெரியாவிட்டாலும் வினா எண் போட்டுவைக்க வேண்டும். நாளை "அவுட் ஆப் போர்ஷன்" ஆகிவிட்டால் முழு மதிப்பெண் கிடைக்கும்.&lt;br /&gt;5. கடந்த ஐந்து வருட வினாத்தாள்களைப் படித்துவிட்டால் கண்டிப்பாகத் தேர்ச்சி நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழுக்கு - கோனார் தமிழ் உரை, அதே மணிப்பிரவாள நடை.&lt;br /&gt;ஆங்கிலத்துக்கு - டயமண்டு கெய்டு, 250 வார்த்தைகளில் விடையளிக்கச் சொன்னால் 500-750 வார்த்தைகளில் விடையளித்தால் போதும்.&lt;br /&gt;கணக்குக்கு - தேற்றங்கள் நிரூபணம் எல்லாம் விரல்நுனியில். யோசித்துப் போட வேண்டிய கணக்கு வந்தால் சாய்ஸ்.&lt;br /&gt;அறிவியலுக்கு - எல்லாக் கோட்பாடுகளையும் தட்டு. சோதனை விளக்கங்களை முழுங்கு. படம் வரைந்து பாகங்களைக் குறித்தால் பாதி மதிப்பெண். தப்பான படமாயிருந்தாலும் நம் வரைதிறனை மதித்து எதாவது மதிப்பெண் போடுவார்கள்.&lt;br /&gt;சமூக அறிவியலுக்கு - ஆண்டுகள், ஊர்கள், ராஜாக்களின் பிரபுக்களின் பெயர்கள். எதோ ஒன்று ஏன் நடந்தது என்பது பற்றி ஐந்து பாயிண்டு. எதோ ஒன்று நடந்ததினால் ஏற்பட்ட விளைவுகள் பற்றி ஐந்து பாயிண்டு. இந்தியாவில் 'ஜிஞ்சினுக்கா' பயிர் விளையும் 50 ஊர்கள் பட்டியல் மனப்பாடம் செய்யவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;சாரி சாரியாக, மந்தை மந்தையாக ஒன்றுக்கும் உதவாத எதிர்கால இந்தியாக்களை உருவாக்கும் நமது திவ்வியமான கல்விமுறை பற்றிக் கொஞ்சம் சிந்திப்போமா, இனி வரும் பதிவுகளில்?&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-109061015483358419?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/109061015483358419/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=109061015483358419' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/109061015483358419'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/109061015483358419'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/07/blog-post_23.html' title='&apos;தட்டு&apos;ங்கள் திறக்கப்படும்'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108948841249835181</id><published>2004-07-10T12:38:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.134-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>கவித மேறி பெனாத்துனதுக்குப் பொயிப்பொறை!</title><content type='html'>நெறியா பேரு வந்து படிக்கொ சொல்லோ டங்சனாயிப் போன டுபாக்கூர் கவிதைக்கிப் பொயிப்பொற போடாட்டி மன்ஸ¤ பீலாவுதுபா! அத்னால குய்க்கா ரிப்பீட் ஆயிக்கிறேன். பட்ச்சிட்டு அப்பீட் ஆயிக்குங்கோ!&lt;br /&gt;&lt;br /&gt;மவுசு பாயிண்ட்டரு பாத்துகிறீங்களா உங்க கம்ப்பீட்டருல! அதப்பத்தி சொல்லொ சொல்லோ ஒர்த்தரு சூரியன்றாரு, ஒர்த்தரு காலம்ன்றாரு, ஒர்த்தரு அடிக்க வர்றாரு, அல்லாரும் பீலாவுறாங்கோ! அத்னால அதே பினாத்தல இங்கிலீஸ¤ல எய்திகிறேன்:&lt;br /&gt;&lt;br /&gt;off.&lt;br /&gt;&lt;br /&gt;push start button.&lt;br /&gt;beep.&lt;br /&gt;american megatrends...Pentium III 500 MHz ok...autodetecting primary master quantum fireball HDD...&lt;br /&gt;blue screen.mouse pointer&lt;br /&gt;at the center.&lt;br /&gt;waiting for OS to load completely. rotating sand clock.&lt;br /&gt;&lt;br /&gt;point.&lt;br /&gt;click.&lt;br /&gt;edit.&lt;br /&gt;open file system.&lt;br /&gt;browse.&lt;br /&gt;&lt;br /&gt;start menu at the left bottom.&lt;br /&gt;hyperlinks.&lt;br /&gt;left click.&lt;br /&gt;right click.&lt;br /&gt;always on top.&lt;br /&gt;shut down.&lt;br /&gt;&lt;br /&gt;keyboard shortcuts.&lt;br /&gt;&lt;br /&gt;(கதையின் நீதிகள்:&lt;br /&gt;1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். &lt;br /&gt;2. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.&lt;br /&gt;3. ஊழ்வினை உருத்து வந்து...&lt;br /&gt;&lt;br /&gt;அய்யோ சாரிங்க! நீதிகள்னு சொன்னாலேயே இந்த மூணுதான் ஞாபகத்துக்கு வந்து தொலையுது! இப்போ ஒழுங்கா சொல்றேன்:&lt;br /&gt;&lt;br /&gt;1. ரொம்ப சீரியஸாகத் தொனிப்பதெல்லாம் சீரியஸாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. &lt;br /&gt;2. கவிதை என்பது குறுக்கெழுத்துப் புதிர் மாதிரி இருக்காது.&lt;br /&gt;3. ·பார்முலா வைத்து சுலபமாகப் புதுக்கவிதை மாதிரி எழுதி நன்றாக வாங்கிக் கட்டிக்கொள்ள முடியும்.)&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108948841249835181?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108948841249835181/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108948841249835181' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108948841249835181'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108948841249835181'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/07/blog-post_108948841249835181.html' title='கவித மேறி பெனாத்துனதுக்குப் பொயிப்பொறை!'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108948828346417797</id><published>2004-07-10T12:35:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.135-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>'நேசமுடன்' வெங்கடெஷ¤க்குப் பரிசு</title><content type='html'>'கலைமகள்' நடத்திய குறுநாவல் போட்டியில் 'நேசமுடன்' வெங்கடேஷ் முதற்பரிசு வாங்கியிருக்கிறார். இன்று மாலை மயிலையில் பரிசளிப்பு நிகழ்ச்சி 'கலைமகள் இலக்கிய விழா'வாக நடத்தப்பட்டது. சென்னை வலைப்பதிவர் குழாம் சும்மா இருக்குமா? பாரா, பிரகாஷ், முத்துராமன், கிருபா மற்றும் நான் மயிலை வீதிகளில் வலம் வந்து, பஜ்ஜிக்கடைகளில் மண்டகப்படி அடித்து சிவசாமி கலாலயா பள்ளியின் ஆர்.கே. அரங்கில் நிலைக்கு வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம்போல ஆரம்பித்த விழா வழக்கம்போலவே நடந்தது. "மாயியண்ணன் வந்திருக்காக, மாப்புள மொக்கச்சாமி வந்துருக்காக" என்று பேச்சாளர்கள் வந்து வந்து சொல்லிக்கொண்டிருந்த நகைச்சுவை எப்பொழுதும்போல நடந்தேறியது. அந்நேரங்களில் கிருபா கையிலிருந்த மசால்வடைகள் ஒவ்வொன்றாகக் கபளீகரம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. வாய் நிறைய வடை, கண் நிறைய சிரிப்பு, காது நிறைய காமெடி.&lt;br /&gt;&lt;br /&gt;சுவாரசியமான பேச்சு என்று சொல்லப் போனால் தலைமையேற்ற அஷோக் லெய்லேண்ட் சேஷசாயி பற்றிச் சொல்லலாம். மிகவும் இயல்பான எளிமையான பேச்சு. அதேபோல், இறுதியாகப் பேசிய ஞானசம்பந்தன். தலைவருக்கு நகைச்சுவை ஒரு வரம். பேசின நேரம் முழுவதும் அரங்கம் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்துக்கொண்டு இருந்தது. வெறும் வெற்று அரட்டையாக மட்டும் இல்லாமல் வாசிப்புப் பழக்கம் பற்றி நிஜமான ஆதங்கத்துடன் பேசினார். ஒரே பிரச்னை. பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கே உரிய பாணியில் அடிக்கடி எங்கெங்கோ போய்விடுவது. ஆனாலும் பஜனையடித்து வெகு சாமர்த்தியமாக விஷயத்துக்குத் திரும்பி வருவதில் கில்லாடியாயிருந்தார். மிகவும் சுவாரசியமான, தவறவிடாமல் கேட்கவேண்டிய பேச்சாளர். சகட்டுமேனிக்கு எல்லா ஆண்களையும் திருமதி என்று விளித்ததும் (திருமிகு சொல்லவந்து), ஒரே பெண்மணி அனுராதா ரமணனை "பெருமகனார்" என்று மதிப்புடன் அழைத்ததும் அங்கதச்சுவை கூட்டின.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி நன்றாகப் பேசுவார் என்று உணர்ச்சிவசப்பட்டு பல்பு வாங்கினேன். கடி!&lt;br /&gt;&lt;br /&gt;அனுராதா ரமணன் பரிசு வழங்க அழைக்கப் பட்டிருந்தார்; பேசவும் கூப்பிட்டார்கள்.&lt;br /&gt;இருங்கள், இருங்கள்! contraversy எதுவும் எழுதப் போவதில்லை :-)&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் மைக் செட் போட்டவர்கள் முதற்கொண்டு நன்றி சொல்லப்பட்டு, தேசியப்பண்ணோ எதுவோ பாடப்போவதாகச் சொல்லிவிட்டு "வாழிய செந்தமிழ்" பாடிவிட்டுக் கூட்டம் கலைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கிய விழா என்றெல்லாம் ஜிகினாவாகப் பெயர் சூட்டிக்கொண்டாலும் பேச வருபவர்கள் என்னவோ தூங்கி எழுந்து பெட் காபி சாப்பிட்டுவிட்டு ஏதோ தோன்றி எழுந்து வருபவர்கள் போலத்தான் வருகிறார்கள். மைக் முன்னால் நின்றுதான் யோசிக்கிறார்கள். வாயில் வருவதைத்தான் சொல்கிறார்கள். இது பற்றிப் பேசவேண்டும்; இன்னின்ன கருத்துகள் கூறவேண்டும் என்றெல்லாம் திட்டம் செய்துகொண்டு வருவதாகத் தெரியவில்லை. 'முதலாவதாக' என்று ஒரு கருத்து சொல்லிவிட்டு, குறைந்தபட்சம் மூன்று முறை 'இரண்டாவதாக' கருத்து சொல்கிறார்கள். ஆனந்த விகடன் பற்றிப் பெரிய கதை ஒன்று சொல்லிவிட்டு, தவறாமல் "இப்படிப்பட்ட கலைமகள் பத்திரிகை" என்று முடிக்க வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவர் அண்ணா கண்ணன் வந்திருந்தார். நம்ம வெங்கடேஷ் கலக்கல் குர்தாவில் மாப்பிள்ளை மாதிரி நச்சென்று இருந்ததைச் சொல்லாமல் விட்டால் எனக்கு நாளை காலை இடியாப்பம் கிடைக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்துக்கள் வெங்கடேஷ்! (நீங்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க :-))&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே வரும்போது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்பும் இந்த மாத கலைமகளும் கொடுத்தார்கள். அட்டையில் கும்மென்று குஷ்பு படம்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108948828346417797?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108948828346417797/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108948828346417797' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108948828346417797'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108948828346417797'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/07/blog-post_10.html' title='&apos;நேசமுடன்&apos; வெங்கடெஷ¤க்குப் பரிசு'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108940203104085436</id><published>2004-07-09T12:37:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.136-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>விம்பிள்டன் தேவதை ஷரபோவா</title><content type='html'>மகளிர் டென்னிஸ், கைதேர்ந்த ஓவியன் ஒருவன் வரைந்த கோட்டுச் சித்திரம் போல; நளினமும் லாவகமும் வீச்சும். அதெல்லாம் ஸ்டெ·பியோடு போயிற்று. ஸ்டெ·பி ஒரு சகாப்தம். அவள் இருந்தவரை மகளிர் டென்னிஸ் எழில் பொருந்தியிருந்தது. இப்போதெல்லாம் மாடும், பன்றியும் தின்றுவிட்டு மாட்டடி அடிக்கும் பெண் மலைகள் ஜெயிக்கும் காலம். டென்னிஸ் மட்டை இரு கைகளாலும் பிடித்து ஆடுபவர்களைக் கண்டால் பற்றிக்கொண்டு வரும். டென்னிஸ் எனும் விளையாட்டின் அடிப்படையே தகர்ந்தாற்போல் ஒரு பிரமை. அந்தப் பதவிசு எங்கே? &lt;br /&gt;&lt;br /&gt;விம்பிள்டனில் சென்ற வாரம் ஒரு இனிய ஆச்சரியம், மரியா ஷரபோவா. பூங்கொத்து மாதிரி இருக்கிறாள். செரீனா வில்லியம்ஸை எளிதாக ஜெயித்து விம்பிள்டன் பட்டம் அள்ளியிருக்கிறாள். பதினேழே வயசு ஆகிறது. ரஷியா ஈன்ற ரத்தினம். தற்போது அமெரிக்காவில் வாசம். சரியாக என் உயரம் (சரி! சரி! அமைதி!) 5' 9". நாலு வயசிலிருந்து டென்னிஸ், டென்னிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் அவளது ஆட்டத்தைப் பார்க்கவில்லை (சென்னையில் CAS உபயம், இவர்கள் நாசமாய்ப் போகட்டும்!). ஸ்டெ·பிக்கு அடுத்து இப்போதுதான் டென்னிஸ் பார்க்கவேண்டும் போலிருக்கிறது. ஆனா கோர்னிகோவா போலில்லாமல் டென்னிஸ் மேல் உயிராய் இருக்கிறாள். மாடலிங்கும் செய்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;டென்னிஸ் கிடக்கட்டும். மீடியா உலகில் இப்போது இவள்தான் "செம்ம ஹாட்டு மச்சீ!". உலகிலேயே அதிகம் சம்பாதித்த வீராங்கனை ஷரபோவா என்று கூடிய சீக்கிரம் பெயரெடுக்க அனைத்து சாத்தியங்களும் இருக்கின்றன. அடுத்த பத்தாண்டுகளில் நூறு மில்லியனுக்குச் சொந்தக்காரியாய் விளாங்கப்போகிறாள் ஷரபோவா என்றெல்லாம் ஹேஷ்யங்கள் நிலவுவதைப் புறந்தள்ளிவிட்டு, இப்போது ஒரு மலர்க்கண்காட்சி. உங்களுக்காக, மரியா ஷரபோவா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;table border=0&gt;&lt;tr&gt;&lt;br /&gt;&lt;td&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=shankar&amp;pid=158317" alt="sharapova1" border=0 width="172" height="254"&gt;&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=shankar&amp;pid=158322" alt="sharapova4" border=0 width="174" height="254"&gt;&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=shankar&amp;pid=158323" alt="sharapova5" border=0 width="166" height="254"&gt;&lt;/td&gt;&lt;br /&gt;&lt;/tr&gt;&lt;/table&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108940203104085436?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108940203104085436/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108940203104085436' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108940203104085436'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108940203104085436'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/07/blog-post_09.html' title='விம்பிள்டன் தேவதை ஷரபோவா'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108922278276165341</id><published>2004-07-07T10:51:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.136-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>சத்தியமாய் ஜாலியாக எழுதியது.</title><content type='html'>சூனியம்.&lt;br /&gt;&lt;br /&gt;அழுத்தம். &lt;br /&gt;ஓசை. &lt;br /&gt;இருள்வெளியில் வெண்படிமங்கள் ஓடி மறையும். &lt;br /&gt;நீலம் வியாபிக்க நான் பிரசன்னமாவேன், இடப்புறம் தலைசாய்ந்த ஊசியாய் (வலப்புறம்?).&lt;br /&gt;மத்தியில் நிற்பேன். &lt;br /&gt;மணலில் நேரங்கழிவதைக் காட்டிச் சுற்றுவேன். &lt;br /&gt;என்னை நீ அசைக்கமுடியாத சில கணங்களுக்குப் பிறகு உனக்கு நான் அடிமையாகி நிற்பேன்;&lt;br /&gt;நீ எனக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எதையேனும் தொடவேண்டும். நான்.&lt;br /&gt;எதையேனும் இயக்கவேண்டும். நான்.&lt;br /&gt;எதையேனும் இயற்றவேண்டும். நான்.&lt;br /&gt;கருவூலம் திறக்கவேண்டும். நான்.&lt;br /&gt;படர்ந்து அலையவேண்டும். நான்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழே இடப்புறம் சூத்திரக்கயிறு. &lt;br /&gt;என்னாலியக்கப்படும்.&lt;br /&gt;சூட்சுமப் பாதைகள்.&lt;br /&gt;என்னால் ஆராயப்படும். &lt;br /&gt;இடமாய் ஒரு தொழில்.&lt;br /&gt;வலமாய் ஒரு தொழில்.&lt;br /&gt;உன் இயக்கங்கள் அனைத்தினுக்கும் மவுன சாட்சியாய் விழித்திருப்பேன்.&lt;br /&gt;என் மரணத்திற்கும் பாதையமைத்தளிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ எஜமானன்.&lt;br /&gt;நான் எஜமானன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் வருவான்.&lt;br /&gt;என் அசைவுக்காக நான் காத்துக்கிடப்பேன்.&lt;br /&gt;பழைய வேதங்களைப் புதிய பாதைகளாய்ச் செப்பனிடுவான்.&lt;br /&gt;நான் புறக்கணிக்கப்படுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தனித்திருப்பேன்;&lt;br /&gt;என் இயலாமையோடு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108922278276165341?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108922278276165341/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108922278276165341' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108922278276165341'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108922278276165341'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/07/blog-post.html' title='சத்தியமாய் ஜாலியாக எழுதியது.'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108828008983135250</id><published>2004-06-26T12:55:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.137-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>வலைப்பதிவாளர் சந்திப்பு - கொர்லு வுட்டுகுறேம்பா!</title><content type='html'>கொர்லு பதிவு இங்க:&lt;br /&gt;&lt;p&gt;&lt;EMBED src="http://suvadu.yarl.net/voice/announce1.mp3" width=225 height=75 type=audio/x-pn-realaudio loop="false" repeat="false" autostart="false"&gt; &lt;/p&gt;&lt;br /&gt;அதே மேட்டர் எய்த்துல:&lt;br /&gt;சும்மா வெள்ளாட்டுக்கு கூட்டம் போடலாம் போடலாம்னு சொல்லிகிட்டு திரிஞ்சிகிட்டு இருந்தோமா, கடேசியில நெஜம்மாவே கூட்டம் போடப்போறோம். பின்னூட்டப் பொட்டியில சலாம் வெச்சிகிட்டு இருந்தவங்க நேர்ல சந்திச்சிக்கப் போறோம். &lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவாளர்கள் சந்திப்பு ஏற்பாடு பத்தி &lt;a href="http://www.tamiloviam.com/writerpara/page.asp?ID=214&amp;fldrID=1"&gt;பாரா பக்கத்துல&lt;/a&gt; படிச்சிருப்பீங்க. கிருபாவும் &lt;a href="http://www4.brinkster.com/shankarkrupa/blog/Default.asp?entryid=11"&gt;குட்டையக் கொழப்பணும்னு&lt;/a&gt; கங்கணம் கட்டிக்கிட்டுக் கெளம்பி இருக்காரு. நெறைய பேரு நாங்களும் ஆட்டைக்கி வர்றோம்னு ஆசப் பட்டிருக்காங்க. மக்களோட வசதியக் கணக்குப் போட்டு நாள், நேரம், இடம் முடிவானப்புறம் அல்லாருக்கும் அழைப்பு அனுப்ப உத்தேசம். கூடிய சீக்கிரம் தண்டோரா போட்றலாம். &lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதியுறவங்க யாராவது பாரா, கிருபா பக்கம் படிக்கறதுக்கு முன்னாடி தப்பித் தவறி இந்தப் பக்கம் வந்துருந்தீங்கன்னா, வாங்க! வாங்க! கூடிய சீக்கிரம் நடக்கப் போற வலைப்பதிவாளருங்க சந்திப்புக்குக் கண்டிப்பா வாங்க! வெளிநாட்ல இருக்கறவுங்க சந்திப்பு நடக்குறப்ப இந்தியா வர்ற வேலை இருந்தா, இந்தப் பக்கம் ஒரு எட்டு வாங்க! ரவுசுக்கு ரவுசும் ஆச்சு, கருத்துக்குக் கருத்தும் ஆச்சு, கடலைக்கிக் கடலையும் ஆச்சு (அட! கடலை முட்டாயி சொன்னேம்பா! தப்புத் தப்பா யோசிக்காதீங்க!).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108828008983135250?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108828008983135250/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108828008983135250' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108828008983135250'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108828008983135250'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/06/blog-post_108828008983135250.html' title='வலைப்பதிவாளர் சந்திப்பு - கொர்லு வுட்டுகுறேம்பா!'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108784210241184841</id><published>2004-06-21T11:20:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.138-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>ஜே. ஜே. சில குறிப்புகள் சில குறிப்புகள்</title><content type='html'>உண்மையாகச் சில எழுத்துகள் வரைய, சில பொழுதுகள் வாழ முயற்சிக்க வேண்டும். சில அபூர்வமான தருணங்களில் தகைந்துவிடக் கூடும். இன்றில்லாவிடில் வேறொரு நாள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108784210241184841?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108784210241184841/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108784210241184841' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108784210241184841'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108784210241184841'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/06/blog-post_21.html' title='ஜே. ஜே. சில குறிப்புகள் சில குறிப்புகள்'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108766948131286834</id><published>2004-06-19T11:23:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.139-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>பெயரில்லாத சிறுகதை - பகுதி 4</title><content type='html'>	ரெண்டு நாளாக ப்ரியா என்னிடம் சரியாகவே பேசவில்லை. எனக்கு மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிருந்தது. அவளுக்கு எல்லாமே நான்தான். என்னதான் சண்டை போட்டாலும் சட்டென்று சமாதானமாகிவிடும். இப்படிப் பேசாமலெல்லாம் இருந்ததேயில்லை. ஞாயிற்றுக்கிழமையாதலால் நான் தொலைக்காட்சி முன்னாலேயே தவங்கிடந்தேன். ப்ரியாவைக் கவனிக்கவேயில்லை. பாவம், என்ன பண்ணுகிறாளோ?&lt;br /&gt;&lt;br /&gt;	எழுந்து போய் என்ன செய்கிறாள் என்று பார்த்தேன். படுக்கையறையில் குப்புறப் படுத்திருந்தாள். கிட்டே போனதும் விசும்பல் கேட்டது. "ப்ரியா! டேய்..." என்றதும் எழுந்து என்னைக் கட்டிக்கொண்டாள். விசித்து விசித்து அழுதாள். எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. "கமான்! என்னாச்சு உனக்கு?" என்று கேட்டேன். "நாளைக்கு திங்கள்" என்றாள். &lt;br /&gt;	"ஸோ?"&lt;br /&gt;	"என்ன ஸோ! உனக்கு எல்லாம் விளையாட்டு! அவரு சொன்னாருல்ல, உனக்கு..." திக்கித் திக்கிப் பேசினாள்.&lt;br /&gt;	"அட மக்கு! இதுதானா அழுகை! அவன் கெடக்கறான் ·ப்ராடு பையன். உன் ஹீரோக்கு ஒண்ணும் ஆகாது, கவலைப்படாதே" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;	காலையில் நான் காலுறை போடும்போது எதிரில் ப்ரியா வந்து நிற்கிறது. கையில் ஒரு பொட்டலம். "இது கபாலி கோவில் பிரசாதம். நீ இன்னிக்கு அவசியம் போகணுமாடா! வீட்லயே இரேன்" என்றாள். "போடி! உனக்கு வேற வேலை இல்லை. அவன்தான் ஏதோ பேத்தினான்னா நீயும் அதையே புடிச்சிகிட்டு இருக்கே? வேணும்னா எனக்கு வீரத்திலகம் இட்டு வழியனுப்பு" என்று விபூதி இட்டுக்கொண்டு காரைக் கிளப்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;	கச்சேரி சாலையிலிருந்து இடப்புறம் திரும்பி ராமகிருஷ்ணா மடம் சாலையில் நுழையும்போது கவனித்தேன். ஏதோ சரியாக இல்லை. கார் சரியில்லையா இல்லை நான் சரியில்லையா என்று தெரியவில்லை. சம்பந்தமே இல்லாமல் அந்த சாமியாரின் முகம் நினைவில் வந்தது. அந்த ஆள் எப்படி அவனைப் பற்றித்தான் நான் நினைத்தேன் என்று கண்டுபிடித்தான்??&lt;br /&gt;	ப்ரேக் சரியாகப் பிடிக்காததுபோல் ஒரு பிரமை. என்ன ஆச்சு எனக்கு? இடப்புற இண்டிகேட்டருக்கு பதில் வலப்புற இண்டிகேட்டர் போட்டு. கடைசியில் ஏதோ தோன்றி மாற்றினேன். எதோ தப்பு. என் கை ஏன் நடுங்குகிறது? முட்டாள் பயலே! தெளிவாயிரு!&lt;br /&gt;&lt;br /&gt;	அப்போதுதான் அது நடந்தது. மந்தைவெளி நிறுத்தம் தாண்டி நேராக வந்துகொண்டிருந்தபோது, தேவநாதன் தெருவிலிருந்து தவறான பாதையில் ஒரு மொபெட் வந்தது. ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை. ப்ரேக் அழுத்தப் போய், தவறுதலாக வேகத்தை அதிகப்படுத்தி, சுதாரிப்பதற்குள், மொபெட் பறந்துபோய் விழ...ஆ...&lt;br /&gt;&lt;br /&gt;	நினைவுதிரும்பும் படலத்தை நிறைய கதைகளிலும் சினிமாக்களிலும் நீங்கள் பார்த்திருப்பதால் அதை நீங்களே இட்டு நிரப்பிக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;	ப்ரியா பழச்சாறு தயாரித்துக்கொண்டிருக்க, நான் சொன்னேன் "சே! அந்த உபாசகரை நான் தப்பா நெனச்சிட்டேன்! அவரு தீர்க்கதரிசி! தெய்வம்!"&lt;br /&gt;	ப்ரியா சொன்னாள், "நாசமாப் போச்சு! தெய்வம்னு சொல்லிட்டு, கிட்டத்தட்ட அவரை தெய்வமாவே ஆக்கிட்ட நீ! சண்டாளப்பாவி! பாவம் அந்த மனுசன். இன்னும் இன்டென்ஸிவ் கேர்லதான் இருக்காரு!".&lt;br /&gt;(முற்றும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108766948131286834?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108766948131286834/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108766948131286834' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108766948131286834'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108766948131286834'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/06/4.html' title='பெயரில்லாத சிறுகதை - பகுதி 4'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108758132846920746</id><published>2004-06-18T10:54:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.139-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>பெயரில்லாத சிறுகதை - பகுதி 3</title><content type='html'>	சின்ன அறைதான். ஒரு சுவற்றில் நிறைய அம்மன் படங்கள். பெரிய வெண்கலக் குத்துவிளக்கு. அறை முழுக்க லேவண்டர் ஊதுபத்தி மணம் கமழ, சக்தி உபாசகர் படங்களின் முன்னால் உட்கார்ந்திருந்தார். நல்ல தெளிவான முகம். தங்க ·ப்ரேம் கண்ணாடியுள் தீட்சண்யமான கண்கள். முழுக்காவி, பற்கள் உட்பட. சற்று அடர்ந்த தாடி. பரந்த மார்பின்மேல் போர்த்திய காவித்துண்டு. ப்ரியாதான் கும்பிட்டாள். நான் சும்மா இருந்தேன். இருவரையும் உட்கார் என்பதுபோல் சைகை செய்தார். என்னை உற்றுப்பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;	பிறகு அவருக்கு எதிரில் உட்கார்ந்திருந்த வழுகை ஆசாமியை ஏறிட்டு "சொல்லுங்க" என்றார். "என்னத்த சாமி சொல்றது? எம்புள்ள சும்மா செக்கச் செவேர்னு சேட்டுப் புள்ள மாதிரி இருப்பான். திடீர்னு இந்தத் தோல் வியாதி வந்து, உடம்பு கலரே போச்சு. பள்ளிக்குடம் போகவே வெக்கப்படுறான். பாக்காத டாக்டரில்ல. செய்யாத வைத்தியமில்ல. ஒண்ணும் பிரயோசனமில்ல. நீங்கதான்..." என்றுவிட்டு, தன் பையனை நோக்கி "டேய்! சாமியக் கும்புட்டுக்கடா" என்று அதட்டினார் வழுக்கை.&lt;br /&gt;	"இருக்கட்டும். ம். இந்த விபூதிப் பிரசாதம், குங்குமப் பிரசாதம் வெச்சிக்குங்க. எல்லாம் அவ பாத்துக்குவா. கவலப்படாம போங்க. அருகம்புல் அரைச்சு உடம்புல தேச்சிக் குளிக்க சொல்லுங்க. அருகம்புல் சாறு கொடுங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்" என்று நம் சாமி சொல்ல, எனக்கு சிரிப்புதான் வந்தது. இந்தாள் சாமியாரா, நாட்டு வைத்தியனா?".&lt;br /&gt;&lt;br /&gt;	திடீரென்று சாமியார் என்னை முறைத்தார். "இப்ப நீங்க என்ன நெனச்சீங்க?" என்று கேட்க, நான் ஆடித்தான் போய்விட்டேன். கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு "ஒண்ணும் நெனைக்கலியே" என்றேன். அவர் ப்ரியாவைப் பார்த்து "ஏம்மா நம்பிக்கையில்லாதவங்களையெல்லாம் கூட்டிட்டு வர்றீங்க?" என்றார். ப்ரியா முகமே மாறிவிட்டது. "அது வந்து..." என்று இழுக்க, "இவருதான் நாத்திகம் பேசறாரு இல்ல? இவரோட atheist எண்ண அலைகள் மத்தவங்களையும் கலைக்குதில்ல?". எனக்குப் பற்றிக்கொண்டு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;	"நான் atheist கிடையாது, Agnostic"&lt;br /&gt;	"இது வேறயா! கடவுள் நம்பிக்கை இல்லைன்னாவது திடமா இருக்கணும். அது என்ன சார், agnostic? கடவுள் இருக்காரா இல்லயான்னு தெரியாது, சொல்ல முடியாதுன்னுட்டு; ஒம்போதுத்தனமா. வெளிய பாத்தா சாமி, பூதம் கெடையாது, தெரியாதும்பீங்க. ராத்திரியில வாசல்ல வெள்ளையா ஆடினா, "காக்க காக்க"ன்னு கந்தசஷ்டி கவசம் சொல்வீங்க. எல்லாம் பாசாங்கு"&lt;br /&gt;&lt;br /&gt;	"பாசாங்கைப் பத்தி நீங்க பேசறீங்களா சாமியாரே! நீங்கல்லாம் பண்றது என்னவாம்?"&lt;br /&gt;	"இந்தக் காலத்துப் பசங்களே இப்பிடிதான் இருக்கீங்க. ஏதோ ஒண்ணு ரெண்டு சாமியார் தப்பு பண்ணி மாட்டினாங்கறதுக்காக ஒட்டுமொத்தமா பொதுவா சந்தேகப் படறீங்க. மேம்போக்கா சிந்திக்கிறீங்க"&lt;br /&gt;	"நீங்கதான் இப்போ பொதுவா சொல்றீங்க. Agnostism பத்தின உங்க விளக்கமே தப்பு. என்னோட அபிப்பிராயங்களைக் குறை சொல்ற உரிமை உங்களுக்குக் கெடையாது"&lt;br /&gt;&lt;br /&gt;	"எங்களோட நம்பிக்கைகளைக் குறை சொல்ற உரிமை உங்களுக்கு மட்டும் இருக்கா? இவ்ளோ பேசறீங்களே, உங்க அறிவியல வெச்சிகிட்டு படைப்பை விளக்குங்க பாப்போம்?"&lt;br /&gt;	"ஒத்துக்கறேன். அதுமட்டும் இப்போதைக்குத்தான் முடியலை. ஆனா மீதியெல்லாம் விளக்க முடியுதே. அங்க எல்லாம் கடவுள் தேவையில்லையே! அப்ப உங்க கடவுள் உலகத்தைப் படைச்சிட்டு, நாசமாப் போகட்டும்னு விட்டுட்டு இண்டியா-பாகிஸ்தான் கிரிக்கெட் பாக்கப் போயிட்டாரா?"&lt;br /&gt;	"நீங்க பண்றது விதண்டாவாதம்"&lt;br /&gt;&lt;br /&gt;	"அப்ப கடவுளைக் காமிங்க! show him! make us feel him!"&lt;br /&gt;	"அது உங்க கண்களால முடியாது"&lt;br /&gt;	"இதோ பாருங்க! இந்த ஞானக்கண், பூனைக்கண் பஜனையெல்லாம் வேண்டாம்! கடவுள் இருக்காருன்னு எனக்குத் தெரிய வெக்கணும்! செய்ய முடியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;	எல்லாரும் என்னை பயந்தமாதிரி பார்த்தார்கள். நான் கன்னாபின்னாவென்று கத்தியிருக்க வேண்டும். என் கையெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. சாமியார் மவுனமாக இருந்தார். கண்களை மூடிக்கொண்டு யோசிக்கிறமாதிரி பட்டது. நான் வென்றுவிட்டாற்போல ஒரு பிரமை.&lt;br /&gt;&lt;br /&gt;	சட்டென்று அவர் சொன்னார், "சரி, நீங்க இவ்ளோ பேசினதுக்கப்புறம் சொல்றேன். அடுத்த வாரம் திங்கட்கிழமை நீங்க போற வழியில உங்களுக்கு ஒரு விபத்து நடக்கும். அதிலிருந்து நீங்க தெய்வாதீனமா தப்பிச்சிடுவீங்க. அப்புறம் கடவுளை நம்புவீங்க".&lt;br /&gt;&lt;br /&gt;	எனக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. "என்னய்யா! சாபம் விடறியா! பாக்கலாமா! விபத்தும் நடக்காது ஒரு மசிரும் நடக்காது, ஏய் ப்ரியா! இந்தாள் ஹம்பக். சும்மா ஓலடிக்கிறான். வா போலாம்" என்று அலறினேன். ப்ரியா மிரண்டு போய் என்னைப் பார்த்தாள். "இப்போ வரப்போறியா இல்லியா" என்று நான் கத்த, விலுக்கென்று எழுந்து வந்துவிட்டாள்.&lt;br /&gt;(அடுத்த பதிவில் முடியும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108758132846920746?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108758132846920746/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108758132846920746' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108758132846920746'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108758132846920746'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/06/3.html' title='பெயரில்லாத சிறுகதை - பகுதி 3'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108749442123798428</id><published>2004-06-17T10:45:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.140-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>பெயரில்லாத சிறுகதை - பகுதி 2</title><content type='html'>	மத்திய தட்டு ரசனையில் ஒரே மாதிரி கட்டப்பட்டிருந்த வீடுகள் கொண்டிருந்த தெருக்களில் புகுந்து, குண்டுகுழிகளைத் தவிர்த்து, வேகத்தடைகளில் எகிறி, அந்த உபாசகர் வீட்டைக் கண்டுபிடிப்பதே கொஞ்சம் கஷ்டமாய்த்தான் இருந்தது. வாசலில்&lt;br /&gt;		"சக்தி. செல்வராஜ்&lt;br /&gt;			M.Sc. M.Phil&lt;br /&gt;		 சக்தி உபாசகர்"&lt;br /&gt;	சந்தன குங்குமத் தெளிப்புகளுக்குப் பின்னாலிருந்து எட்டிப் பார்த்தது. இது என்னாடா கொடுமை! இவ்ளோ படித்துவிட்டு இந்த ஆள் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறான்?&lt;br /&gt;&lt;br /&gt;	புதிய வீடுதான். வாசற்படிக்கு முன் ஒடியிருந்த ஸ்டிக்கர் கோலம். நிறைய செருப்புகள். ஒருக்களித்து சாத்தியிருந்த கதவுக்குப் பின்னாலிருந்து ஒரு வாண்டு எட்டிப் பார்க்க, நாதஸ்வரம் போல ஏதோ ஒன்று வழிந்து வெளியே வந்து காதை நனைத்தது. ஆன்மீகம் திணிக்கப் பட்டு வீடு கொஞ்சம் அவஸ்தைப்படும் தோற்றத்தில் இருந்தது. ப்ரியா பின்னாலிருந்து காதைக் கடித்தாள். "உள்ள போயேன். ஏன் வாசல்லயே நின்னு பராக்கு பாக்கறே?". யாரும் அழைக்காமல் உள்ளே போய் நான்கைந்து தலைகளைத் தாண்டி ஒரு முக்கில் உட்கார்ந்தபின் சுற்றி ஒரு நோட்டம் விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;	இருபதடிக்குப் பனிரெண்டடி முன்னறையில் மொத்தம் பத்துப் பதினைந்து பேர் இருந்திருப்பார்கள். கூடவே ஒரு சின்ன டைனிங் டேபிள், ·ப்ரிட்ஜ். சிலர் பொழுதுபோகாமல் தலை சொறிந்துகொண்டும், மூக்கு நோண்டிக்கொண்டும், தலைகுனிந்து கையைப் பார்த்துக்கொண்டும் சேஷ்டைகள் செய்துகொண்டிருந்தாலும், நான் உட்பட நிறைய பேருக்கு எதிரேயிருந்த அறையின் மேல்தான் கவனம் சென்றது. &lt;br /&gt;&lt;br /&gt;	அதனுள்ளே இருப்பவர்களை மற்றும் இருப்பவற்றை ஒரு திரைச்சீலை மறைத்துக் கொண்டிருந்தது. அது காற்றில் அசைந்தபோது உள்ளேயும் சில தலைகள் தெரிய, என் ஆர்வம் இன்னும் அதிகமானது. அவர்கள் என்ன சிறப்பு தரிசனமா என்று சந்தேகம் எழும்ப, பக்கத்திலிருந்த பெரியவரிடம் கேட்டேன். அவர் சிரிப்பதுபோல ஏதோ பண்ணிவிட்டு "அங்கதான் ஷாமியாழு இழுக்காழு சாழ்" என்றுவிட்டு வாயிடுக்கில் வழிந்த புகையிலை எச்சிலைத் துடைத்துக்கொண்டார். "ஷாமி கூ·ப்ட்ட பொறவு நாமளும் உள்ளாற போகணும்" என்றுவிட்டு எச்சில் துப்ப எழுந்து போனார். வெளியே போய்த் துப்ப இன்னும் என்ன இருக்கிறதென்று தெரியவில்லை. நான் ப்ரியாவிடம் கேட்டேன் "அப்பன்னா நாம போய் எதாவது பதிவு கிதிவு பண்ணிக்கணுமா, இல்ல கியூ சிஸ்டமா?". அதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் அவள் சிரித்துக்கொண்டுதான் சொன்னாள் "இதென்ன டாக்டர் க்ளினிக்னு நெனச்சியா! சக்தி உபாசகர்! அவரே ஒரு அசிஸ்டெண்டை விட்டனுப்பி நம்ம பேரோ அடையாளமோ கரெக்டா சொல்லிக் கூப்புடுவாராம். ஞான திருஷ்டியெல்லாம் உண்மைன்னு இப்ப நீயே புரிஞ்சிப்பே".&lt;br /&gt;&lt;br /&gt;	எனக்கு "தோடா" சொல்லத் தோன்றியது. திரைச்சீலை விலகி ஒரு ஆள் அந்த அறையிலிருந்து பிரசன்னமானான்; "இங்க லட்சுமிங்கறது யாருங்க?" என்றான். இரண்டு மூன்று பெண்கள் கன்னத்தில் போட்டுக்கொண்டு எழுந்தார்கள். "·ப்ரிஜ்ஜுக்குப் பக்கத்துல இருக்கற லட்சுமி மட்டும் வாங்கம்மா! சாமி அப்பிடி சொல்லித்தான் கூப்ட்டாரு" என்றான். "நாந்தாங்க, சுப்புலட்சுமி" என்று அந்த அம்மாள் தன் கையிலிருந்த மஞ்சள் பையை என் தலையில் இடித்துக்கொண்டு உள்ளே போனாள். பைக்குள் இருந்த தேங்காய் ஏழெட்டு ரூபாய் இருக்கும் என்று அந்தத் தாக்குதல் என் மண்டைக்குப் பிரகடனம் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;	ப்ரியா புல்லரித்துப்போய் உட்கார்ந்திருந்தாள். "எவ்ளோ சக்தி பாத்தியா!" என்றாள். நான் தலையிலடித்துக்கொண்டேன். "உனக்குக் காமன் சென்ஸ் மருந்துக்குக் கூட கெடையாதா ப்ரியா! நம்ம தமிழ்நாட்டுல எவ்ளோ லட்சுமி தெரியுமா! theoritical-ஆ 8 லட்சுமி. நிஜ வாழ்க்கையில எக்கச்சக்க லட்சுமி. நான்கூட ஒரு இருவது தாய்க்குலம் இருக்கற எடத்துல போய் மொட்டையா லட்சுமீன்னு கூப்பிட்டா ஒரு நாலு லட்சுமி திரும்பிப் பாக்கும். இந்த ஆள் வேலைக்காக மாட்டான். சும்மா பஜனை! டைம் வேஸ்ட்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;	ப்ரியாவுக்கு அந்தப்பக்கத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. "சார்! அப்படியெல்லாம் சந்தேகப்படாதீங்க! இவரு நெஜமான மகான். தீர்க்கதரிசி. நீங்க ஒரு தடவை உள்ள போயி உக்காந்து பாருங்க. உங்களுக்கே தெரியும். ஒரு மாதிரி உடம்பெல்லாம் பரபரன்னு இருக்கும். என்னன்னே சொல்ல முடியாது. எதோ ஒரு பெரிய சக்தி நம்மள சுத்தி இருக்கறமாதிரி. சில சமயம் நாம நம்மளையே மறந்துபோய்டுவோம். அவருகிட்ட எதோ இருக்கு சார்!".&lt;br /&gt;	எனக்கு அவரைப் பார்த்தால் பாவமாய் இருந்தது. பார்க்க கொஞ்சம் பெரிய மனிதர் தோரணை இருந்தது. நான் சொன்னேன் "மன்னிக்கணும். உங்க வலது மூளையோட சேட்டைகளை எல்லாம் இவரோட சக்தின்னு சொல்றீங்க. இந்தாளுக்கும் உங்க உணர்ச்சிகளுக்கும் சம்பந்தமே இல்லை".&lt;br /&gt;&lt;br /&gt;	அவர் காயப்பட்டது போல் முறைத்தார். "ப்ச்" என்றார். பிறகு திரும்பி உட்கார்ந்தார். ப்ரியாவுக்குக் கோபமே வந்துவிட்டது. என் காதில் கிசுகிசுத்தாள் "ஏய்! உனக்கு ரொம்ப கொழுப்பு ஏறிப்போச்சு! உனக்கு நம்பிக்கை இல்லைன்னா சும்மாயிரு. என் கிட்ட உளர்றாமாதிரி எல்லார் கிட்டயும் உளறாதே"&lt;br /&gt;	"இல்ல ப்ரியா! நான்..."&lt;br /&gt;	"சரி! நீ இவ்ளோ பேசறியே, என் பேர் ப்ரியா! தெரிஞ்ச பேர்தான்னாலும் லட்சுமி மாதிரி கெடையாதில்லையா! என்னை எப்டி கூப்டுவாரு சொல்லு?"&lt;br /&gt;&lt;br /&gt;	"அய்யே! இது ரொம்ப சுலபம்! அந்த ஆள் வருவான், வந்து, கையில ப்ரவுன் ஹேண்ட் பேக் வெச்சுகிட்டு கப்போர்ட் பக்கத்துல உட்கார்ந்துகிட்டு இருக்கிறவங்களையும் அவங்க பக்கத்துல பச்சை சட்டை, வேஷ்டி கட்டிகிட்டு இருக்கிறவரையும் சாமி கூப்ட்டாருன்னு சொல்வான்! சிம்பிள்!". சொல்லி வாயை மூடவில்லை. அந்த ஆள் அறையிலிருந்து வெளியே வந்தான். கூடவே இரண்டு பேர், புருஷன் பெண்டாட்டியாய்த் தானிருக்கவேண்டும். அந்தப் பெண் முகத்தில் புளகாங்கிதத்தோடும் கையில் கொஞ்சம் பூவோடும் "இனிமே கவலை இல்லை! சாமிகிட்ட சொல்லியாச்சு. அவர் பாத்துப்பார்" என்று சொல்லிக்கொண்டே செருப்புமாட்டிக் கிளம்பினாள். சாமியாரின் வேலையாள் "இங்க யாரும்மா ப்ரவுன் ஹேண்ட் பேக் வெச்சிருக்கீங்க?" என்று கேட்க, நான் ப்ரியாவை ஏறிட்டேன். ப்ரியா "நாந்தான்" என்று எழுந்தாள். நாங்களிருவரும் உள்ளே போனோம். &lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108749442123798428?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108749442123798428/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108749442123798428' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108749442123798428'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108749442123798428'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/06/2.html' title='பெயரில்லாத சிறுகதை - பகுதி 2'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108741222343290093</id><published>2004-06-16T11:55:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.141-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>பெயரில்லாத சிறுகதை - பகுதி 1</title><content type='html'>என் கழுத்துச் சங்கிலியை நிமிண்டிக்கொண்டே அவள் அதை ஆரம்பித்தபோதுதான் எனக்குக் கோபம் வந்தது. &lt;br /&gt;	"தோ பாருடீ! சும்மா 'காயமே இது பொய்யடா'ன்னு புல்ஷிட் பேசற ஆள்ட்டல்லாம் என்னால வரமுடியாது!" - கத்திவிட்டேன். கண்ணோரமாய்க் கொஞ்சமாய்க் கண்ணீர் எட்டிப்பார்க்க, திரும்பிப்படுத்தவள்தான், அப்புறம் என் பக்கம் திரும்பவேயில்லை. கொஞ்ச நேரம் அவளது முதுகை வெறித்துவிட்டு பிறகு தூங்கிப்போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;	காலையில் கண்ணாடி முன் நின்று ஷேவிங் செய்யவேண்டியிருக்குமோ என்ற சாத்தியம் தந்த கடுப்பில் தாடையைத் தேய்த்துக்கொண்டிருந்தபோது பாவமாய் வந்து என் பக்கத்தில் நின்றது. ராத்திரி பூரா அழுதிருக்கவேண்டும். ஏற்கனவே குண்டான மூஞ்சி இன்னும் உப்பி வீங்கியிருந்தது. &lt;br /&gt;	"என்னடா?" என்றேன்.&lt;br /&gt;	"என்கிட்டே பேசாதே!" என்றது.&lt;br /&gt;	"ஸாரிம்மா" என்றேன் - அவ்வளவுதான்.&lt;br /&gt;	"நான் அப்பிடி என்ன கேட்டுட்டேன்னு நீ என்னைப் பிடிச்சுக் கத்தினே? கல்யாணமாகி நாலு வருஷம் ஆச்சு. ஏய்! ஷேவிங் பண்ற பாவ்லால்லாம் வேண்டாம். என்னைப் பாரு. ம்...எங்க விட்டேன்? ஆ...நாலு வருஷம் ஆச்சு. என்கிட்டயும் மிஸ்டேக் இல்ல, உன்கிட்டயும் மிஸ்டேக் இல்லன்னுட்டு கொம்பு மொளச்ச டாக்டரெல்லாம் சொல்லியாச்சு. உனக்கென்ன தெரியும் என் மனசு படற வேதனை (இந்த வாக்கியம் மட்டும் யாராலயும் மாத்தி சொல்லவே முடியாதா?). 'குறுகுறு நடந்து சிறுகை நீட்டி' - இந்த சந்தோஷம் பத்தியெல்லாம் நெனப்பே கிடையாது உனக்கு. உட்கார்ந்து ஜாவால நூல் நூர்க்கச்சொன்னா செஞ்சிகிட்டு இருப்ப."&lt;br /&gt;	"நீ MA தமிழ்னு அப்பப்ப எஸ்டாப்ளிஷ் பண்ணியே ஆகணுமா ப்ரியா?'&lt;br /&gt;	"பேச்சை மாத்தாதே. அந்த சக்தி உபாசகர் எவ்ளோ பெரீய்ய ஆள் தெரியுமா! அவர்கிட்ட ஒரு தடவை போனா குழந்தை இல்லாதவங்களுக்கெல்லாம் குழந்தை பொறக்குதுன்னு நம்ம ஹெட்மாஸ்டர் மாமி சொன்னாங்க"&lt;br /&gt;	"அடிப்பாவி! அவ்ளோ வில்லங்கமான ஆள்கிட்டயா போகணும்னு சொல்ற? வேணாம்டீ. வம்பு!"&lt;br /&gt;	"You perverted brat! வாயைக் கழுவு. இதோ பார். என்கிட்ட வாதம் பண்ணாதே! மரியாதையா உன் கம்ப்யூட்டருக்கு லீவு விட்டுட்டு என்கூட கொடுங்கையூர் வர்றே. நாம அந்த உபாசகரை பாக்கறோம். And that's that".&lt;br /&gt;&lt;br /&gt;	உம்கொட்டிக்கொண்டு கதை கேட்டுக்கொண்டிருக்கும் நேயர்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க, என் திருவாயை மூடிக்கொண்டு 'தங்கள் சித்தம் என் பாக்கியம்' என்று ப்ரியா அன்னை காலாலிட்ட பணியைச் சிரமேற்கொண்டு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்ட நான் ஷேவிங் தியாகம் செய்து தலைக்குக் குளித்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு ஆவணி அவிட்டத்துக்கு மட்டும் உபயோகப்படுத்தும் என் ஒரே வேஷ்டியைக் கட்டிக்கொண்டு ப்ரியாவுடன் கிளம்பியாயிற்று கொடுங்கையூருக்கு.&lt;br /&gt; &lt;br /&gt;                                                                                 (தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108741222343290093?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108741222343290093/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108741222343290093' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108741222343290093'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108741222343290093'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/06/1.html' title='பெயரில்லாத சிறுகதை - பகுதி 1'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108706588246170789</id><published>2004-06-12T11:43:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.142-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>முச்சங்கர்</title><content type='html'>நுங்கை, சூன் - 12&lt;br /&gt;&lt;br /&gt;உலக வலைப்பதிஞர் வரலாற்றிலே பொன்னெழுத்துக்களினாலே பொறிக்கப்படவேண்டியதான ஒரு நிகழ்ச்சி இன்று நடந்தேறியதாலே எம் உள்ளம் இறும்பூதடைகின்றது. வலைப்பதிவுலகத்தின் எதிர்காலமெனக் கருதத்தகும் தங்கத்தமிழகத்தின் சிங்கச் சிறுத்தைகளான பெங்கை மீனாஷிசங்கரரும், சைதை வஸ்தாது கிருபாசங்கரம் பிள்ளையவர்களும் (அன்னாரது தோற்றப் பொலிவுகண்டு இச்சமயம் நாமகரணம் தோத்திரமாகச் செய்விக்கப் படுகிறதேயன்றி குதர்க்கச் சிந்தனை கிஞ்சித்துமில்லையென்பதை இவ்விடத்திற் சொல்லிக்கொள்ள வேணும்), "இளம்பெரும் இலக்கியவியாதி" மைலை அரு. சங்கரனாரும் சரித்திரப் பிரசித்தி பெறப்போகின்ற இந்தப் பொன்னாளிலே நுங்கை இரயில் நிலையத்தினிலே முக்கியத்துவம் வாய்ந்ததொரு சந்திப்பினை நிகழ்த்தாநின்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சிந்தனாவாதிகளின் கூட்டத்தினிலே விவாதிக்கப்பட்ட விஷயங்களிலே பெரும்பாலானவை நுண்ணறிவாளருக்கே விளங்கத்தகும் என்பதினாலே அவற்றை இவ்விடத்தே விவரிக்க இயலாதுபோகின்றது. ஆயினும் சமூக நலன் கருதி சிற்சில முக்கியமான கருத்துக்களையும் தீர்மானங்களையும் யாம் பட்டியலிட்டுத் தருகின்றோம்:&lt;br /&gt;&lt;br /&gt;1. வாலிபப் பிராயத்தினரான மைலை சங்கரனார் தனது இதயத்தினிலே கொலுவீற்றிருக்கும் தேவதையாகிய ---வின் கவனத்தினைக் கவருவதற்கு ஆக்கபூர்வமான யோசனைகள் பலவற்றை மீனாஷிசங்கரர் உவந்தருளின பாங்கு மெய்சிலிர்க்கவைத்தது. குறிப்பாக "மீனைப் பிடிக்க வேண்டுமென்றால் தூண்டிலை நாம்தான் போட வேண்டும். மீன் வந்து நம் முன்னர் தானாகவெல்லாம் வந்து விழாது" என்ற அறிவுரை சங்கரனாரின் வாழ்வினிலே ஒளியேற்றிவைக்கும் என்ற நம்பிக்கை எமக்குத் துளிர்த்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;2. போகும், வரும் இரயில்களின் சத்தத்தினூடே அமிழ்ந்துபோன பொக்கிஷமனைய உரையாடல்கள், கருத்து எண் மூன்றிலிருந்து எண் ஆயிரத்துமுன்னூற்று நாற்பத்தாறு வரையானவை.&lt;br /&gt;&lt;br /&gt;1347. சென்னை மாநகரம், பல்லவ, பாண்டிய, சோழ, சேர மற்றும் அண்டை இராச்சியங்களான கருநாடகம், ஆந்திரம் போன்ற நாடுகளிலெல்லாம் இருக்கும் கோடானுகோடி வலைப்பதிஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாபெரும் எழுச்சிக் கூட்டமொன்றை நடாத்திட வேண்டுமென்ற அவாவினாலுந்தப்பட்ட இந்த இளம் வீரர்கள் மூவரும் ஆய்தம் போல் அணிதிரண்டு வீர சபதம் பூண்டனர். அதன்படி அடுத்த திங்கள் சீர்மிகு சென்னைமாநகரில் வலைப்பதிஞர்கள் ஒன்றுதிரள்வரென்றும் தமிழ் செழிக்கத் தம்மாலியன்றதைச் செய்ய வீறுகொண்டு எழுவரென்றும் நிச்சயமாயிற்று. இதுகுறித்து வலைப்பதிவு ஜாம்பவான்கள் பலரிடமும் அளவளாவி ஆவன செய்வதென்றும் முடிவுசெய்யப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய பள்ளிப்படையில் ஆக்கபூர்வமாகப் பல தீர்மானங்களியற்றியும் அழிவுபூர்வமாகப் பல வலைப்பதிவாளர்களின் தலையையுருட்டியுஞ் சாகசங்கள் பல புரிந்துவிட்டு இரவியொத்த இந்த இளைஞர்கள் வீடுதிரும்பினர். இனி வருங்காலத்தினிலே இந்த இளைஞர் படை விந்தை பலபுரிந்து சரித்திரத்தில் தமக்கென்று ஒரு தனி இடத்தை சிருஷ்டித்துக் கொள்ளுமென்பதில் எள்ளளவும் ஐயமுண்டோ?! &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108706588246170789?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108706588246170789/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108706588246170789' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108706588246170789'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108706588246170789'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/06/blog-post_12.html' title='முச்சங்கர்'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108654468279161728</id><published>2004-06-06T10:53:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.143-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>யுவா - சற்றே சிறிய விமர்சனம்</title><content type='html'>யுவா கேவலமாக இருக்கிறது. ஏதோ முன்பெல்லாம் வருமே செவ்வாய்க்கிழமை தூர்தர்ஷன் நாடகம், அது மாதிரி. யுவாவில் மணிரத்னத்தின் நடிகர் தேர்வு பற்றி நிறைய பேர் பேசிவிட்டார்கள். அது எவ்வளவு தூரம் உண்மை என்று இன்று புரிந்துகொண்டேன். அபிஷேக் பச்சன் திருவிழாவில் தொலந்துபோனதுபோல் முழிமுழியென்று முழிக்கிறார். மாதவனுக்குத் தொப்பிகள் தூக்கப்படுகின்றன (hats offங்கோ!).தமிழில் இதே பாத்திரத்தைத் திவ்யமாகச் செய்திருக்கிறார். அஜய் தேவ்கனெல்லாம் கல்லூரி மாணவராம்! விளையாடுகிறீர்களா! விவேக் ஓபராயும் கரீனாவும் பரவாயில்லை. கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. ஓம் பூரி பெங்காலி பாணி ஹிந்தியெல்லாம் நன்றாகத்தான் பேசுகிறார். ஆனால் பாரதிராஜா அளவுக்கு சோபிக்கவில்லை. படத்தில் எல்லாருமே ginger eating monkeyயாக வலம் வருவது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு கேவலமான விஷயம், தமிழில் சித்தார்த் சூர்யாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு போலீஸ் கேஸ் என்றவுடன் எஸ்கேப் ஆகப் பார்ப்பார். த்ரிஷா கேட்கும்போது "போலீஸ் கிட்ட போனா என் பாஸ்போர்ட்டைப் புடுங்கி வெச்சிக்குவாங்க. அப்புறம் யு. எஸ். போக முடியாது" என்பார். பாத்திர வார்ப்புக்குத் தேவையான ஒரு கட்டம். ஆனால் ஹிந்தியில் அது கிடையாது. விவேக் ஓபராய்க்கு இயல்பாகவே சமூக அக்கறையெல்லாம் கொடிகட்டிப் பறக்குமாம். கண்டிப்பாக விவேக் ஓபராயின் இமேஜ் குறித்த பிரச்னையால்தான் இந்தக் காட்சி ஹிந்திப் பதிப்பில் நீக்கப்பட்டிருக்க வேண்டும். ஆய்த எழுத்தின் வேகமோ, அதிலிருந்த கொஞ்சநஞ்ச அழுத்தமோ யுவாவில் சுத்தமாகக் கிடையாது.  யுவா தண்டம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தவிகடன் ஆய்த எழுத்துக்கு விமர்சனம் எழுதி 40 மதிப்பெண் போட்டிருக்கிறது. மணிரத்னம் இதைத் தனக்குக் கிடைத்த பெரிய மரியாதையாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர் பிரபஞ்ச நாயகன் சின்ன சடை சிலம்பரசனின் புதிய படமான "குத்து" என்ற உலகத்தரம் வாய்ந்த படத்துக்கு 40 மதிப்பெண் கொடுக்கப்பட்டிருந்தது. மணிரத்னத்துக்கு இது மிகப்பெரிய பெருமையல்லவா! ஆனந்தவிகடனின் விமர்சனங்கள் வரவர மிகவும் மரியாதைக்குரியதாகி வருகின்றன. பாய்ஸ் படம் வந்தபோது அதற்கு விமர்சனம் என்று முதல் பக்கத்தில் "சீ" என்று ஒற்றை வரியில் முடித்திருந்தது நினைவுக்கு வருகிறது. அதே விகடனில் கொஞ்சம் உள்ளே அதிவில்லங்கமான படங்கள் தொடர்ந்து வெளியாகி வருவதும் நினைவுக்கு வருகிறது. &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108654468279161728?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108654468279161728/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108654468279161728' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108654468279161728'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108654468279161728'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/06/blog-post_06.html' title='யுவா - சற்றே சிறிய விமர்சனம்'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108645984996870383</id><published>2004-06-05T11:23:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.147-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>ஆய்த எழுத்து - சற்றே பெரிய விமர்சனம்</title><content type='html'>கல்லூரி நண்பர்களுடன் சத்தியம் திரையரங்கில் 'ஆய்த எழுத்து' படம் பார்த்தேன் இன்று. முதலில் திரையரங்கு பற்றிச் சொல்ல வேண்டும். சென்னையின் சிறந்த அரங்கு இது என்று சொல்லலாம். நன்கு பேணப்பட்டு, நல்ல வசதிகளுடன் நிறைவாகப் படம் பார்க்கலாம். ரொம்ப நாள் கழித்து, அல்லது, புதிதாகச் சென்னை வருபவர்கள் கண்டிப்பாக சத்தியம் திரையரங்கு போய்ப் பாருங்கள். இன்னொரு சுவாரசியமான விஷயம். நான் ஆய்த எழுத்துடன் அதன் ஹிந்தி பதிப்பான யுவாவும் பார்க்க நினைத்திருந்தேன். நாளை யுவா பார்க்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது (ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்?). அது பற்றி நாளை. இனி ஆய்த எழுத்து பற்றி. இருங்க இருங்க! மீனாக்ஸ், ரவியா மற்றும் கோடானுகோடி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கிணங்க, ஒரு ஜிலீர் செய்தி. இன்று என் தேவதையும் தற்செயலாக அதே படம் பார்க்க வந்திருந்தாள். அப்புறம்? ஒன்றும் இல்லை! அவள் அவள் கும்பலோடு படம் பார்த்துக் கொண்டிருக்க, நான் என் கும்பலுடன் படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தேன் :-) இனி படம்!&lt;br /&gt;&lt;br /&gt;மணிரத்னம், ஷங்கர் படங்களில் ஏதாவது ஒரு காலகட்டத்து நிகழ்வுகள் அல்லது ஒரு சமூகப் பிரச்னை பற்றி "larger than life" அணுகுமுறையில் சொல்லப்பட்டு, தீர்வுகளும் (?) அளிக்கப்பட்டிருக்கும். அதே பாணியில் இன்னொரு படம் ஆய்த எழுத்து. எடுத்துக்கொள்ளப் பட்ட களம் "அரசியலில் இளைஞர்கள்".&lt;br /&gt;&lt;br /&gt;மணிரத்னம் மீது எப்போதும் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று "ஏ.சி. ரூமிலிருந்துகொண்டு பிரச்னைகள் பற்றிச் சிந்திப்பது". திரும்பவும் அந்தக் குற்றச்சாட்டு எடுத்துவைக்கப்படும். ஆனாலும் இந்தப் படம் முக்கியமானதாக எனக்குப் படுகிறது. காரணம் அது எழுப்பும் கேள்விகள். கொஞ்சம் சுயசிந்தனையும் சமூக அக்கறையும் உள்ள எவனும் இந்தப் படம் பார்த்தபின் கொஞ்சம் சலனப்பட வேண்டும். அந்தச் சலனத்திற்கு இப்படம் காரணமாக இல்லாமற்போகலாம். ஆனால் இந்தப் படம் சரியாகச் சித்தரிக்காது விட்ட கருத்துக்கள் கண்டிப்பாக மறைமுகமாக நம்மைத் தொடும். &lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் இன்பா (மாதவன்), மைக்கெல் (சூர்யா). 'fruit' மாதவனா அது?! 'ரன்' படத்தில் ஆக்ரோஷமாக ஏதோ செய்ய முயற்சித்திருந்தாலும் அமுல் பேபி மாதிரி தான் இருப்பார். இந்தப் படத்தில் அவரைப் பார்த்தால் நிஜமாகவே கரடுமுரடாக இருக்கிறது. எதிர்மறைப் பாத்திரத்தில் அடித்துக் கிளப்புகிறார். சூர்யாவுக்கு இன்னொரு 'காக்க காக்க' ரிபீட். அதனால் இயல்பாகவே அவரை நமக்குப் பிடிக்கிறது. இதில் அறிவுஜீவி என்று இன்னொரு பரிமாணம். அதிபுத்திசாலி, சமூக அக்கறையுள்ளவர், அடிதடிக்கு சளைக்காதவர் என்று perfectly ideal பாத்திரம். ஆனால் நம்பும்படியாகவே இருக்கிறது. திடீரென்று மைக்கெல் grand unified theory பற்றியெல்லாம் விளாசுகிறார். அவர் அறிவுஜீவி என்று காட்டுவதற்காக அது, அப்புறம் அடிக்கடி DNA, organic chemistry என்றெல்லாம் பேசுகிறார். லைப்ரரியில் ஆறு புத்தகங்களை அடுக்கியெடுக்கிறார். ஆனால் அவருக்கு Professor Weinberg கடிதம் போட்டு படிப்புதவி கொடுக்கிறார் என்றெல்லாம் சொல்லி என் வயித்தெரிச்சலைக் கொட்டிக் கொண்டிருக்க வேண்டாம். பொறாமையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மீரா ஜாஸ்மின் பற்றிச் சொல்லியாக வேண்டும். எதிர்பாராவிதமாக (:-)) நன்றாக நடித்திருக்கிறார். ஈஷா தியோல் அழகாக வந்துபோகிறார். அம்மா ஹேமாமாலினி மாதிரியே சகலமும். நடிப்பு உட்பட. தத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;த்ரிஷா-சித்தார்த் ஜோடி மிகவும் இயல்பாக இருக்கிறது. மணிரத்னத்திற்கு இன்றைய மேல்தட்டு இளைஞர்களின் மனப்போக்கு துல்லியமாகத் தெரிந்திருக்கிறது. அவர்களின் சித்தரிப்பு மிகை என்று தோன்றுபவர்கள் ஜீரணித்துக் கொள்ளுங்கள். இதுதான் நிதர்சனம். நம் த்ரிஷா பிராட்டி அள்ளிக்கொண்டு போகிறார். லட்டு. &lt;br /&gt;&lt;br /&gt;பாரதிராஜாவையும் போட்டிருக்கலாம். வேறு யாரையாவதும் போட்டிருக்கலாம். ரொம்ப பெரிய வாய்ப்பெல்லாம் இல்லை. ஆனால் வந்த அளவில் பாரதிராஜா கலக்குகிறார். மாதவன், பாரதிராஜா, மீரா ஜாஸ்மின் எல்லாரும் சொல்லி வைத்தாற்போல் இயல்பாக அசிங்கமாகப் பேசுகிறார்கள். அப்புறம் ஹீரோக்களும் ஹீரோயின்களும் சொந்தக் குரல்களில் பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன். த்ரிஷா, ஈஷா வாய்களில் தமிழ் படும் பாடு!&lt;br /&gt;&lt;br /&gt;ரவி. கே. சந்திரன் இன்று இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர் என்று சொல்லுவேன். ஒளிப்பதிவு அட்டகாசமாக இருக்கிறது. மிகவும் புதிய கோணங்கள், சுவாரசியமான முறையில் கேமரா வளைய வருகிறது. இறுதி சண்டைக்காட்சி அமர்க்களம். ரஹ்மான் திறமையாக வேலை செய்திருக்கிறார். வழக்கம்போல் பாட்டெல்லாம் தனித்தனியாகத் தொங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவின் வசனம் பல இடங்களில் பழைய வாசனை அடிக்கிறது. சில இடங்களில் நச்சென்று இருக்கிறது. சூர்யாவிடம் ஒரு பேராசிரியர் - "நீ நல்லா படிச்சு நல்லா முன்னுக்கு வந்தா நாடு தானா நல்லா ஆயிடப்போவுது", சூர்யா - "மேடம்! நீங்க படிக்கிற காலத்துல நல்லாதானே படிச்சீங்க?", பேராசிரியர் "of course! first class with distinction", சூர்யா - "இப்போ அதனால நாடு என்ன தானா நல்லாவா ஆயிடிச்சு?!". சூர்யா ஈஷாவிடம் - "கல்யாணம்ங்கறது சமூகத்துக்காக வேண்டி நாம பண்ணிக்கறது. நாம சமூகத்துக்கு இதுவரைக்கும் எதுவுமே பண்ணதில்லை. இதை மட்டும் ஏன் பண்ணனும்?". &lt;br /&gt;&lt;br /&gt;சுவாரசியமான உத்தியில் திரைக்கதை சொல்லப் பட்டிருக்கிறது. இப்போதெல்லாம் தமிழ்ப்படங்களில் உத்தி பற்றிய ஒரு கவனம் இருப்பது நல்ல முன்னேற்றம். சிலர் இந்த உத்தி நன்றாக இல்லை என்கிறார்கள். இதையே முதலில் எல்லோரையும் அறிமுகப்படுத்தி வரிசையாய் A, B, C, D என்று கதை சொல்லியிருந்தால் பிடித்திருக்குமோ என்னவோ! உத்தியெல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. மேட்டர் தான் இடிக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;"இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். படித்த இளைஞர்கள் அவர்கள் அறிவை சமூக அக்கறையுடன் பயன்படுத்தவேண்டும். " - சரி, மிகச்சரி. மிகவும் முக்கியமான அவசியமான கருத்துக்கள். ஒரு அறிவாளி, ஒரு துடிப்பான அமெரிக்கா ஆசையுள்ள இளைஞன். ஒரு பொறுக்கி. பொருத்தமான களம். இவையெல்லாம் இருந்தும் ஏன் படத்தில் ஒரு சினிமாத்தனம் அப்பட்டமாகத் தொனிக்கிறது? மணிரத்னத்துக்கு சில கேள்விகளை எழுப்ப ஆசையாய் இருந்திருக்கிறது:&lt;br /&gt;&lt;br /&gt;1. மிகப்படித்த அறிவாளிகள் ஏன் பொது வாழ்க்கையில் ஈடுபடாமல் சுயநலத்துடன் ஒதுங்கியிருக்கிறார்கள்?&lt;br /&gt;2. அமெரிக்கா போய் வெள்ளைக்காரனுக்குச் சம்பாதித்துப் போடாமல், நம் நாட்டை முன்னேற்ற உழைக்கலாமே?&lt;br /&gt;3. இளைஞர்கள் முன்வந்தால்தானே அரசியல் குட்டையைத் தூர்வாரி சுத்தப்படுத்த முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கேள்விகளை எழுப்புவதுடன் இந்தப் படத்தின் குறிக்கோள் முடிகிறது. ஆனால், மணிரத்னம் அத்துடன் விடமாட்டேனென்கிறார். அவர் ஒரு தீர்வும் கொடுக்கிறார். தேர்தலில் நிற்கவேண்டும். அதுவும் உடனடியாக. சட்டுபுட்டென்று 4 பேர் வரப்போகிற இடைத்தேர்தலில் நிற்கிறார்கள். வசனகர்த்தா சுஜாதா பாணியில் சொல்ல வேண்டுமென்றால் " நுங்கம்பாக்கத்தில் இருப்பவர்கள் திடீரென்று போய் நெய்க்காரன்பட்டியில் இடைத்தேர்தலில் நிற்கிறார்கள். விளைநிலங்களில் டான்ஸ் ஆடுகிறார்கள். மண்ணில் புரள்கிறார்கள். ஜெயித்துவிடுகிறார்கள்". நம் காதுகளில் பூமணக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் முடிவு பற்றி சூர்யாவிடம் சொல்லும் ஈஷா, முதலில் "தோற்றுவிட்டோம்" என்கிறார். "அடடா! பரவாயில்லையே! நடைமுறையில் என்ன நடக்குமோ, அதைக் காட்டுகிறார்களே!" என்று சந்தோஷப்பட்டு முடிக்குமுன் அது பொய் என்று காட்டி நோகடிக்கிறார்கள். சூர்யா கூடவே 4 பேர் தேர்தலில் நிற்கிறார்கள். ஏதோ இட ஒதுக்கீடு மாதிரி அதில் ஒரு பெண்ணும் (மிர்ச்சி சுச்சி!). இங்கும் தனிநபர் வழிபாடுதான். சூர்யா தான் சிந்தனை, செயல் எல்லாம். மிச்ச மக்கள் சும்மா ஒப்புக்குச் சப்பாணி. சுய சிந்தனையே கிடையாது. சித்தார்த் பாத்திரம் மிகவும் முரண். அமெரிக்கா அமெரிக்கா என்று ஆலாய்ப் பறக்கிறார். ஒரு கட்டத்தில் த்ரிஷா மீது எக்கச்சக்கக் காதலுடன் "என்னை விட்டுப் போகாதே" எனும்போது "நீ எனக்காக அமெரிக்கா போகாமலிருப்பியா" என்று த்ரிஷா கேட்கிறார். அப்போது பதிலே சொல்லாமல் "இ லவ் யூ!" என்று சொல்லி டாட்டா காட்டிப் போகிறார் சித்தார்த். ஆனால் திடீரென்று மைக்கெலுடன் தேர்தலில் நிற்கிறார். அமெரிக்காவெல்லாம் வேண்டாமென்று சொல்கிறார். மைக்கெலின் சிந்தனை, அவருக்குப் பட்ட அடி, இன்பா தன்னைப் போட்டு மொத்துமொத்தென்று மொத்தினது இதெல்லாம் சரியான காரணமாகப் படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நடிப்பு, தொழில்நுட்பம் போன்ற விஷயங்களில் படம் மிக நன்றாகவே இருக்கிறது. சூரியா தேர்தலில் நிற்கலாம் என்று முடிவெடுத்தவுடன் படம் முடிவடைந்துவிட்டதாக நான் நினைக்கிறேன். நல்ல படங்கள் கடைசியில் தேவையில்லாத காட்சிகள் கொண்டிருப்பது பல வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது. பாரதிராஜாவின் "என் உயிர்த் தோழன்" எனக்கு ரொம்பப் பிடித்த படம். மிகவும் யதார்த்தமாக ஒரு கடைநிலைத் தொண்டனை எப்படியெல்லாம் அரசியல் தலைவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று சொன்ன படம். ஆனால், அதில் கடைசியில் திரிசூலம், வெட்டரிவாள், வேல்கம்பு எல்லாம் எடுத்துக் கொண்டு சூரசம்ஹாரம் செய்வார்கள். அதுமாதிரி இதிலும் அவர்கள் தேர்தலில் நின்று ஜெயித்து, சட்டசபைக்குப் போகும்வரை காட்டுகிறார்கள். விரயம். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியெல்லாம் ஜாலியாக அரசியலைத் திருத்திவிட முடியாது என்று மணிரத்னத்துக்குத் தெரியாமலா இருக்கப்போகிறது? ஆனாலும், வேறெதையும் காட்டமுடியாத நிதர்சனம் அவரை இதெல்லாம் செய்ய வைத்திருக்கிறது. ஆய்த எழுத்து எழுப்பும் கேள்விகள், சொல்லும் கருத்துக்கள் முக்கியமானவை. "எத்தினியோ படத்துல இதெல்லாம் வந்துருக்கு! டேய்! எத்தினி வருஷமா இதே கேள்வியக் கேட்டுகிட்டு இருப்பீங்க?!" என்று சொல்லும் தமிழ்கூறும் நல்லுலகை நான் ஒரே ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன் "இந்தக் கேள்விகளை இத்தனை தடவை கேட்குமளவிற்கு நாம் ஏன் இன்னும் சொரணையற்று இருக்கிறோம்?".&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108645984996870383?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108645984996870383/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108645984996870383' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108645984996870383'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108645984996870383'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/06/blog-post_05.html' title='ஆய்த எழுத்து - சற்றே பெரிய விமர்சனம்'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108628910824897335</id><published>2004-06-03T11:57:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.148-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>என் கணிப்பொறிக்குள் ஒரு பெண் குயின்</title><content type='html'>விண்டோஸ் '98 வைத்துக்கொண்டு ஒழுங்குபுள்ளையாகக் காலத்தை ஓட்டிக்கொண்டு, அவ்வப்போது ப்ளாஸ்டர் புழு வளர்க்கும் என் விண்டோஸ் 2000-ஐத் திறந்து பார்த்துக் கொண்டு ஜீவித்துக் கொண்டிருந்த நான், நேற்று ·பெடொரா என்ற ஒரு குட்டிப் பிசாசை என் கணிப்பொறியின்மேல் ஏவி விட்டிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;சாத்தானுக்கு பிறந்த இந்தப் பைசாசம் பிறக்கும்போதே அம்மாக்காரி விண்டோஸ் 2000-ஐக் கொன்று முழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டே பிறந்தது. 'disk druid' வைத்து ஒழுங்காக 'manual partitioning' பண்ணாமல் நீயே பாத்துக்கோடா ராசா என்று விட்டதன் பயனாக கிடைத்ததையெல்லாம் வளைத்துப் போட்டுக்கொண்டு ஜனித்தது ·பெடோரா. விண்டோஸ் 98 பிழைத்தது அது போன நூற்றாண்டில் செய்த புண்ணியம்.&lt;br /&gt;&lt;br /&gt;அழகாக வடிவமைக்கப்பட்ட நிறுவுமுறைகள் மிகவும் எளிமைப்படுத்தப் பட்டுள்ளன. தமிழல்லாம் இருப்பதாக உதார் விட்டதெல்லாம் எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியவில்லை. பார்க்க நன்றாக இருக்கிறது. சிவப்புத்தொப்பி 6.2 பயன்படுத்திய பொற்காலமெல்லாம் நினைவில் வந்து அச்சுறுத்திக் கொண்டிருந்தாலும், இந்த முறை லைனக்ஸைப் பிளந்து எடுத்துவிடுவது என்ற திடமான முடிவிலிருக்கிறேன். அதற்குமுன் என்னுடைய கணிப்பொறி உள்ளமைந்த மொடொரோலா மோடம் என்னைப் பிளந்துவிடாமலிருந்தால் சரிதான். நண்பர் கிருபா மாண்ட்ரேக் நிறுவிக்கொள்ளுமாறு சொல்லிக் கொண்டிருக்கிறார். அதிலே தமிழெல்லாம் கனஜோராய் வருமாமே!&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை பயனர் நிலையிலிருந்து சற்றே மேலேறிக் கொஞ்சம் நோண்டிப் பார்க்கலாமென்றிருக்கிறேன். புது வீடு கட்டி ரகளை பண்ணிக்கொண்டிருக்கும் நம்ம தோஸ்து கிருபா வேறு ஏத்திவிட, இனி லைனக்ஸ் பாடு கொஞ்சம் திண்டாட்டம்தான்.  கிருபாவும், நானும் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும் என்பதை நினைத்துப் பார்த்தால் எனக்கே கொஞ்சம் உதறலாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய! விதி வலியது!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108628910824897335?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108628910824897335/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108628910824897335' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108628910824897335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108628910824897335'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/06/blog-post.html' title='என் கணிப்பொறிக்குள் ஒரு பெண் குயின்'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108602938416933405</id><published>2004-05-31T11:49:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.149-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>சிலந்தியின் மறுபிரவேசம்?</title><content type='html'>நம்ம வலைப்பூக்கள்ல கொஞ்ச காலம் முன்னாடி ரவுண்டு கட்டிகிட்டு இருந்த &lt;a href="http://silandhivalai.blogspot.com"&gt;சிலந்தியார்&lt;/a&gt; தன்னோட ஆழ் உறக்கத்துல இருந்து ரிப் வான் விங்கிள் மாதிரி திடீர்னு எந்திரிச்சி, வீட்டுல இருக்கற ஒட்டடையெல்லாம் சுத்தப் படுத்தி (சிலந்திக்கு ஒட்டடைதானே வீடு?), புதுசா வெள்ளையடிச்சு, கெரகப்பெரவேசம் பண்ணியிருக்காரு. மூணு புள்ளி வெச்சுக் கோலம்கூட போட்டுருக்காரு. புது வூட்டுல பசு மாடு பூர்றாமாதிரி மங்களகரமா நானு உள்ளாற போயிட்டேன். அப்பிடியே, நீங்க எல்லாரும் புதுசா பெயிண்டு அடிச்ச வூட்டுல போயி பெரசாதம் சாப்டுட்டு வாத்து சொல்லிட்டு வாங்கோ! "அண்ணாத்தே! தொடர்ந்து எழுதுங்கோவ்!. என்ன மாதிரி சின்னப் பசங்களுக்கு வழிகாட்டியா இருந்த உங்க எழுத்துக்களத் துருப்புடிக்க வுடாதீங்கோவ்!".&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108602938416933405?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108602938416933405/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108602938416933405' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108602938416933405'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108602938416933405'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/05/blog-post_108602938416933405.html' title='சிலந்தியின் மறுபிரவேசம்?'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108602921373710026</id><published>2004-05-31T11:45:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.150-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>தமாசா ஒரு புது வலைப்பதிவு</title><content type='html'>நம்ம தோஸ்து ஒருத்தன் கீறாம்பா! வசந்துன்னு பேரு. மேட்டூரு ஊரு. மேட்டரான ஆளு. ரொம்ப நாளா வலைப்பதியணும்னு என்னக் கேட்டுகிட்டே இருந்தான். திடீர்னு மெயிலு போட்டான் இன்னிக்கி. "மாமேய்! &lt;a href="http://tamasu.blogspot.com"&gt;தமாசு&lt;/a&gt;ன்னு புதுசா ஆரம்பிச்சி க்குறேன். பாருடா"ன்னு. புது கொயிந்த. போயி முட்டாயி குடுத்துட்டு வாங்க :-) சோக்கா எயிது ராசா! உன்னும் ரெண்டு மூணு பேரு எயிதக் காத்துன்க்குறாங்கோ! இய்த்துனு வந்துர்றேன்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108602921373710026?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108602921373710026/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108602921373710026' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108602921373710026'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108602921373710026'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/05/blog-post_108602921373710026.html' title='தமாசா ஒரு புது வலைப்பதிவு'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108602895164544944</id><published>2004-05-31T11:37:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:02.150-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>கொஞ்ச நாள் கழித்து...</title><content type='html'>வழக்கம்போல அலுவலகத்தில் ஆப்பு வைக்கப்பட்ட நான் கொஞ்ச நாளாக எழுதாமல் விட்டுவிட்டேன். எழுத நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஒன்றொன்றாகத் தொடங்க வேண்டும். முதலில் நான் சொல்ல வேண்டும் என்று சிலநாளாகவே நினைத்திருந்த செய்திகள் இங்கே:&lt;br /&gt;&lt;br /&gt;1. அண்ணா பல்கலைக்கழகத்தில் அம்மா செய்ய நினைத்திருந்த திருப்பணிக்குத் தற்காலிகமாக முற்றும் போடப்பட்டிருக்கிறது. வேறு வழியில்லை. மத்தியில் நடந்த ஆட்சி மாற்றத்தாலும், நாற்பதும் நாறிப்போனதாலும் டெஸ்மா, ஹெச் முத்திரை, மதமாற்றத் தடைச் சட்டம், இலவச மின்சாரம், அரசு ஊழியர்கள் என்று அம்மாவின் அடித்தளமே ஆட்டம் கண்டிருக்கும்போது இதெல்லாம் எந்த மூலைக்கு? எங்கள் பல்கலைக்கழகம் பிழைத்துக் கொண்டது. எனக்கும் என்னொத்த பல்லாயிரக்கணக்கான  மாணவர்களுக்கும் மிகவும் சந்தோஷமளித்த செய்தி இது.&lt;br /&gt;&lt;br /&gt;2. வலைப்பூக்களில் சமீபத்தில் நிகழ்ந்த மிகவும் சுவாரசியமான விஷயம் சுந்தரவடிவேலின் பக்கத்தில் நடந்த கவியரங்கம்தான்! 168 பின்னூட்டங்கள் சாதாரண விஷயமல்ல. மிகவும் சுறுசுறுப்பாக நடந்த கவிப் பரிமாற்றத்தில் இரமணிதரன், சுந்தரவடிவேல், மெய்யப்பன், கார்த்திக்ராமாஸ், பாலாஜி-பாரி, செல்வராஜ், பரி என்று கருத்துப்பெட்டி களைகட்டியது. &lt;br /&gt;&lt;br /&gt;3. எனது குவாண்டம் வலைப்பதிவில் கொஞ்சம் ஒழுங்கு கொண்டுவர உத்தேசித்திருக்கிறேன். தமிழ்வழிப் புத்தகங்கள் கிடைத்தமையாலும், மேலும் சில சுவாரசியமான புத்தகங்கள் வாங்க முடிந்தமையாலும் அதைத் தொடர்ந்து எழுதுவதற்கு மேலும் உத்வேகம் கூடியிருக்கிறது. அதனால் வாரம் இரண்டு பதிவுகள் குறிப்பிட்ட கிழமைகளில் ஒழுங்காகக் கொடுக்கமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்திய நேரப்படி ஞாயிறு இரவு 12:00 மணிக்கும் புதன் இரவு 12:00 மணிக்கும் புதிய பதிவு காணக்கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. ஞாயிற்றுக்கிழமைகளில் எண் சோதிடம் குறித்து வரும் நிகழ்ச்சியைத் தவறாமல் பாருங்கள் (விஜய் டிவி என்று நினைக்கிறேன்). அந்த நேரத்தில் இதர தொலைக்காட்சிகளில் வரும் நகைச்சுவை நேரம் போன்ற பகுதிகள் இதற்கு முன் கால்தூசு. மனம்விட்டு அரைமணி நேரம் சிரித்துவிட்டு நிம்மதியாகத் தூங்கப் போகலாம். சமீபத்தில் அதில் மாட்டிய ஒரு அற்புதம் "கணிப்பொறிக்குக் கூட எண்சோதிட முறையில் பலன்கள் சொல்ல முடியும். கணிப்பொறி சரஸ்வதிதேவியின் அனுராதா மண்டலத்திலிருந்து இயக்கப் படுகிறது. கணிப்பொறியில் வைரஸ் போன்ற பிரச்னைகள் வராமலிருக்க வேண்டுமென்றால் தினமும் கணிப்பொறியை இயக்குவதற்கு முன்னால் 'ஸ்ரீ அனுராதா க்ரமண சரஸ்வதீ துணை' என்று பத்து தடவை சொன்னால், கணிப்பொறி வைரஸ் எதுவும் இல்லாமல் இயங்கும். நமக்கும் கண், முதுகு சம்பந்தப்பட்ட வியாதிகள் அண்டாது".&lt;br /&gt;&lt;br /&gt;5. ரூபா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய 'Ideas and Opinions' என்ற புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விஷயங்களைப் பற்றி ஐன்ஸ்டைன் எழுதிய கட்டுரைகள், கடிதங்கள் இதில் இருக்கின்றன. சுவாரசியமான பகுதிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108602895164544944?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108602895164544944/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108602895164544944' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108602895164544944'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108602895164544944'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/05/blog-post_31.html' title='கொஞ்ச நாள் கழித்து...'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108533743430118611</id><published>2004-05-23T11:36:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:47.416-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>ஜிமெயில் அம்பேலா?</title><content type='html'>வலைப்பதிவாளர்களாகிய நாம் கூகிளின் புதிய ஜிமெயில் சேவையைப் பரிசோதித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில், ஜிமெயில் வெளிவந்துவிட்டால் எங்கே தன் வாடிக்கையாளர் வட்டம் சுருங்கிவிடுமோ என்ற பயத்தில் கூகிளைத் தொடர்ந்து யாஹ¥ 100 MB மின்னஞ்சல் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் தருணத்தில், ஜிமெயிலை ஒரு பிரச்னை சூழ்ந்திருக்கிறது. லிஸ் ·பிகுரோ என்ற கலிபோர்னிய மாகாண செனேட்டர் கூகிளின் ஜமெயில் சேவை குறித்து ஒரு கேள்வியெழுப்பி ஒரு தீர்மானம் கொண்டுவந்திருக்கிறார். அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டமியற்றப்பட்டால் ஜிமெயில் 1000 MB கனவெல்லாம் கனவோடு நின்றுபோய்விட வாய்ப்புள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;லிஸ்ஸின் வாதம் இதுதான். ஜிமெயில் தனது பயனர்களின் மின்னஞ்சல்களை ஆய்ந்து அவற்றில் காணப்படும் முக்கிய வார்த்தைகளைப் பொறுத்து அவற்றிற்கேற்றவாறு அந்தப் பக்கத்தில் விளம்பரங்கள் இடுகிற முயற்சியில் ஈடுபடுகிறது. அதேபோல, நாம் எந்த ஒரு மின்னஞ்சலையும் அழிக்கவே தேவையில்லை என்று சொல்வதுடன், அழித்தாலும் அந்த அஞ்சல் பிரதியைத் தேக்கிவைத்துக்கொள்கிறது. இது பயனர்களின் தனிப்பட்ட விஷயங்களில் குறுக்கிடுவதற்கு இணையாகும் என்கிறார் லிஸ். நமது வீட்டின் நடுமுற்றத்தில் ஒரு பெரிய விளம்பரப் பலகை வைப்பது போனது இது என்று அவர் கூறுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;கூகிளிற்கு ஆதரவு இல்லாமலில்லை. ஜிமெயில் சேவைகளை ஒப்புக்கொள்ளும்போதே அதன் அனைத்து விதிமுறைகளையும் ஒப்புக்கொண்டுதான் பயன்படுத்தப்போகிறோம். இணையத்தில் போகும் எந்த ஒரு விஷயமும் அனைவருக்கும் பொதுவில்தான் இருக்கிறது. ஜிமெயிலை நிறுத்துவதன்மூலம் யாஹ¥, MSN போன்ற மின்னஞ்சல் சேவையளிப்போருக்கு ஒரு நல்ல மாற்று உருவாவதைத் தடுக்கிறார்கள் என்று ஜிமெயில் ஆதரவாளர்கள் குமுறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்திய dataquest-ல் இந்தச் செய்தியைப் படித்தேன். லிஸ் சொல்வது சரியா? ஜிமெயில் அனாவசியமாக மூக்கை நுழைக்கிறதா? இல்லை, நல்லதொரு சேவையைத் தேவையில்லாமல் பிரச்னை செய்து இழக்கப் போகிறோமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? (இந்த விஷயத்தின் தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108533743430118611?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108533743430118611/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108533743430118611' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108533743430118611'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108533743430118611'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/05/blog-post_23.html' title='ஜிமெயில் அம்பேலா?'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108507974721997615</id><published>2004-05-20T12:00:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:47.417-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>அய்யாசாமியும் மெக்ஸிகன் சமோசாவும்</title><content type='html'>மாங்குமாங்கென்று முட்டிமோதும் வேலை இருந்தாலும் அடிக்கடி ஏதாவது ஒரு சாக்கிட்டு ஏதாவது ஒரு நல்ல உணவகம் போய் வெட்டுவது எங்கள் திட்டப்பணிக்குழுவிற்கு வாடிக்கை. யாராவது ஒருவர் வெளிநாடு செல்வார்; வெளிநாட்டிலிருந்து யாராவது வருவார்; யாருக்காவது வேலை நிரந்தரமாகும்; யாருக்காவது பதவி உயர்வு கிடைக்கும்; எதுவுமில்லையென்றால் சென்ற மாதத் திட்டப்பணி வெளியீடு (release) நன்றாக அமைந்தது என்று புளகாங்கிதமடைந்து எங்கள் onsite மக்கள் முருகன் டாலரோ பிள்ளையார் டாலரோ அனுப்புவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதுபோன்ற ஒரு காரணத்தால் எங்கள் திட்டப்பணிக்குழுவுடன் நேற்று "டான் பெபெ (Don Pepe)" என்ற மெக்ஸிகன் உணவகம் போயிருந்தோம். வெகு சுவாரசியமான மாலையாக அமைந்தது. எப்பொழுது பார்த்தாலும் எதாவது ஒரு buffet போய் ஒரே மாதிரி சாப்பிடுவது என்றில்லாமல் புதிதாய்ச் செய்யவேண்டும் என்று எங்கள் மேலாளரின் ஆசைக்கிணங்கி மெக்ஸிகன் முழுங்கப் போனோம். எதோ ஒரு பழைய வீட்டையோ அலுவலகத்தையோ சீர்படுத்தி அமைத்திருந்த உணவகம். முன்பதிவு செய்திருந்ததால் எங்கள் 18 பேருக்கும் ஒரு மூலை ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. காச்சுமூச்சென்று கத்திக்கொண்டு ரகளை பண்ணிக்கொண்டு அமர்ந்த எங்கள்முன் வைக்கப் பட்டிருந்த உணவுப்பட்டியல் பார்த்தவுடன் கப்சிப். ஒரு இழவும் புரியவில்லை. குண்டக்க மண்டக்க மொழியில் எழுதியிருந்த ஒரு பெயரும் விளங்காமல் ஒவ்வொன்றுக்கும் இடஞ்சுட்டிப் பொருள்விளக்கம் பார்த்துக்கொண்டிருந்தோம். முதலில் சோபா. அதாவது சூப். 'sopa de tortilla' என்றிருந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன், அந்தப் பெயர் அழகாயிருந்த காரணத்தினால். நம்ம ஊர் 'hot and sour soup' மாதிரிதான். வேறொன்றுமில்லை. அடுத்து, வெங்காய சமோசா மாதிரி ஒன்று தருவிக்கப்பட்டது. தொட்டுக்கொள்ள ஜல்சா (சே! சல்சா!) என்று ஒன்று. தக்காளியை நறுக்கிப்போட்டு வதக்கினால் ஜல்சா. அப்புறம் sour cream. இவை இரண்டும் ஆஸ்தான வஸ்துக்களாம். &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை சுவையாகவே இருந்ததால் மெயின் மேட்டரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். பட்டியலில் சிமி சங்கா, புரிட்டோ, எஸ்கலாடா, காக்கினாடா என்று ஏகத்துக்கு இருந்தது. நான் ஒரு சிமி சங்கா சொன்னேன். நண்பன் புரிட்டோ சொன்னான். அரைமணியில் எல்லாம் வந்து சேர்ந்தது. நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம். அத்தனையும் ஒரே மாதிரி. பார்க்கவும் சரி, ருசிக்கவும் (?!) சரி. எல்லாவற்றிலும் டார்டில்லா என்று ஒரு மேற்தோல். உள்ளே காரம் உப்பெல்லாம் ஓரளவுக்கு மேல் காட்டப்படாத காய்கறிகள். ஒரு மெகா சைஸ் சமோசா மாதிரி. அதன்மேல் சட்னி ஊற்றுவதுபோல் எக்கசக்கச்சக்கமாய் உருக்கின பாலாடை. படுபாவிகள். ஓரளவுக்குமேல் வயிற்றுக்குள் போன வஸ்துக்களெல்லாம் புவீஈர்ப்பு விசை வென்று மேலேற, அத்துடன் அந்த அலைவரிசையில் ஒலிபரப்பை நிறுத்தினேன். சுற்றிப் பார்த்தால் எல்லாரும் இஞ்சி தின்று இனிதமர்ந்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் ஐஸ்க்ரீம். என் நண்பனுக்குத் தேன் பிடிக்குமாம். அதனால் ஏதோ ஆப்பிள், தேன் என்று இருந்த ஒன்றைத் தருவிக்க, அது நம்ம ஊர் மந்திரித்துவிட்ட தேன் மாதிரி புளிக்கவே அவன் இஷ்டாப் சொல்லிவிட்டான். நான் விழுங்கிவைத்தேன். இன்னும் மூன்று பேர் ரம்மோடு சேர்ந்த அன்னாசிப்பழம் சொன்னார்கள். அதற்கு ஒரு தீபாவளியே நடத்தப்பட்டது. முதலில் அன்னாசிப்பழத்துண்டை ஒரு குச்சியில் சொருகி எடுத்துவந்து வைத்தார்கள். அப்புறம் இரண்டு கரண்டிகளில் நெருப்பு! எடுத்துவந்து அன்னாசியின்மேல் ஊற்றினார்கள். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. அப்புறம் பார்த்தால் அது ரம்மாம். ஏதேதோ ஜிகினா காட்டி ஒருவழியாக முடித்து வைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே டெக்ஸாஸில் 4 வருடம் இருந்த எங்கள் மேலாளர் ருசித்து ருசித்து எல்லாவற்றையும் உள்ளே தள்ளிக்கொண்டிருக்க நாங்கள் பனிரெண்டாம் நூற்றாண்டில் கொண்டுபோய் விடப்பட்ட மாதிரி விழித்துக்கொண்டிருந்தோம். சோமபானம் உண்டு என்று நான் தெரியாத்தனமாய்ச் சொல்லிவைக்க நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு வந்த ஒரு தடிப்பயல் "மவ்னே! தனியா மாட்னே, நீ சட்னி தாண்டீ!" என்று கறுவிக்கொண்டு அலைந்துகொண்டிருப்பதெல்லாம் துணைப்பாடத்தில் வருகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108507974721997615?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108507974721997615/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108507974721997615' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108507974721997615'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108507974721997615'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/05/blog-post_20.html' title='அய்யாசாமியும் மெக்ஸிகன் சமோசாவும்'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108447540677329139</id><published>2004-05-13T12:09:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:47.418-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>தேரு தள்ளு!</title><content type='html'>வழக்கம்போல வண்டி ஓடம் ஏறியிருக்கிறது. ஆளுங்கட்சிக்கு எதிராய் வாக்களிப்பது ஒரு தெளிவான போக்காக உருவெடுத்து நிற்கிறது. பாரதீய ஜனதா கட்சியின் தோல்விக்கு எனக்குத் தோன்றிய காரணங்கள் இவைதான்:&lt;br /&gt;&lt;br /&gt;1. வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்கிக் கொண்ட கதை. "இந்தியா ஒளிர்கிறது" "feel good factor" என்ற இரண்டு சொல்லாடல்களின் அர்த்தமற்ற, அதிகப்படியான பிரயோகம். வெறும் வாயை மென்றுகொண்டிருந்த காங்கிரசுக்கு அவல் கொடுத்த அறிவீனம். இந்தப் பிரசாரம் ஏற்படுத்திய நன்மையைவிட கெட்ட பெயரே அதிகம். அன்றாடம் சோற்றுக்கலையும் வீதி ஜீவனுக்கு என்ன ஒளிரப்போகிறது என்ற விஷயத்தை அவர்கள் பெரிதுபடுத்தாதது அவர்களுடைய தவறு. &lt;br /&gt;2. நிஜமாகவே பல நல்ல ஆக்கபூர்வமான செயல்கள் ஐந்தாண்டுகளில் செய்யப்பட்டிருந்தாலும் மெஜாரிட்டி மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாது செயல்பட்டது. ஆந்திராவில் ஒரு நாயுடு வாங்கிய சூடும், கடந்த சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு கலைஞர் வாங்கிய சூடும், எந்த ஒரு ஆட்சியும் கடையேழை ஜனங்களை முன்னிறுத்தியே செயல்படவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது. இன்னும் இந்தியாவில் எம்ஜியார் ஆட்சியும், என்டியார் ஆட்சியும் லாலு ஆட்சியும்தான் நிலைக்க முடியும் என்பதே நிதர்சனம்.&lt;br /&gt;3. தவறான கூட்டணி வியூகம். இது தமிழகத்துக்கு மட்டும். அதிமுக மக்கள் விரோத ஆட்சி நடத்துகிறது என்று பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்திருந்த நிலையில், அரசு ஊழியர் அதிருப்தி, தான்தோன்றித்தனமான அரசியல் என்று இருந்த நிலையில் வலுவான திமுக, மதிமுக, பாமக கூட்டணி பிரிய அனுமதித்தது.&lt;br /&gt;4. ராஹ¤ல், பிரியங்கா - நேரு குடும்பத்தின் இந்திய அரசியல் மீதான ஆளுமை இப்பொதைக்குக் குறைய வாய்ப்பே இல்லை. இப்போதுதான் ராஹ¤ல் அடியெடுத்து வைத்திருக்கிறார். ராஜீவ் பார்ப்பது போலவே இருக்கிறது. அவர் ஒரு ரவுண்டு வருவார். முப்பது வருஷத்துக்கு அஸ்திவாரம் போட்டாயிற்று. யாரும் சாகடித்துவிடாமல் இருந்தால்.&lt;br /&gt;5. சோனியா காந்தி - நேரு குடும்பத்து மருமகள். நம்ம வீட்டுப் பெண். ராஜீவின் விதவை. இரண்டு குழந்தைகளை மணிமணியாக வளர்த்திருக்கிறார். எங்கிருந்தோ வந்து நம் நாட்டில் கஷ்டப்பட்டு இன்னும் நம் மக்கள்மீது பிரியம் வைத்து உழைக்கிறார். இதெல்லாம் நானே என் காதுபடக் கேட்டது. &lt;br /&gt;6. சோனியா மீது செய்யப்பட்ட எதிர்மறைப் பிரசாரம்.&lt;br /&gt;7. அயோத்தி - இந்துத்வாக்கு வெளிப்படையான ஆதரவு.&lt;br /&gt;8. வாக்குறுதிகளில் காணப்பட்ட தெளிவின்மை. வாஜ்பாயையும் பெரிதுபடுத்தப்பட்ட சாதனைகளையும் மட்டுமே முன்னிறுத்திப் பிரசாரம் செய்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தொங்கு பாராளுமன்றம் வரும் என்று எதிர்பார்த்த எனக்கு ஆச்சரியம். காங்கிரஸ் தெளிவான பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. பாஜக இப்போதே எதிர்க்கட்சி என்று பகிரங்கமாக அறிவித்து குதிரை வியாபாரத்துக்கு ஓரளவு முற்றுப்புள்ளி வைத்தது. இனி என் ஒரே வேண்டுதல் எல்லாம் முலாயம் சிங் யாதவ், லாலு ஆகியோரின் தேவை இல்லாமல் ஓரளவு தார்மீக பலம் உடைய இடதுசாரிகளின் ஆதரவுடன் மட்டும் காங்கிரஸ் ஆட்சி அமையவேண்டும். அமைச்சரவையில் திமுக சேர வேண்டும். அப்போதுதான் அடுத்த ஐந்தாண்டுகளில் நிலையான ஆட்சி நமக்குக் கிட்டும். பாஜகவின் நிழல் நாடாளுமன்றம் பலமாகவே இருக்கும், முக்கியத் தலைகள் தோல்வியைத் தழுவினால்கூட. ஒரு எதிர்க்கட்சியாக அவர்கள் மனசாட்சியோடு செயல்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;Vande - Mata - RAM -----------&gt; Vande - MATA-ROME!&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108447540677329139?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108447540677329139/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108447540677329139' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108447540677329139'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108447540677329139'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/05/blog-post_13.html' title='தேரு தள்ளு!'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108421359868430591</id><published>2004-05-10T11:23:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:47.418-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>போடுங்கம்மா ஓட்டு!</title><content type='html'>இன்றைக்கு வாழ்க்கையில் முதல் முறையாக ஓட்டுப் போட்டேன். வெளியில் சொல்லிக்கொள்ள வெட்கமாக இருக்கிறது. ஆனால் உண்மை அது தானே! அரசியல்வாதிகள் பத்தி நக்கலடிக்கும்போதெல்லாம் ஒரு ஓரமாய் "ஓட்டு போட்டியாடா நாயே!" என்று நம் back end (மனசாட்சி) runtime error கொடுத்துக்கொண்டே இருக்கும். இனிமேல் அதற்கு ஒரு exception போட்டு மண்டையில் தட்டி உட்கார வைத்துவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில்தான் பதிவு செய்துகொண்டதால் என் பெயர் பட்டியலில் இருக்காதென்று நினைத்தேன். எதற்கும் ஒரு முறை உறுதிப்படுத்திவிடலாம் என்று தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்தில் என் பேர் தேட, அதிர்ஷ்டவசமாய் இருந்தது. உடனே துள்ளிக்கொண்டு போய் புனித ரபேல் பள்ளியில் நின்றேன். என் தெரு அந்த சாவடியின்கீழ் வராது என்று சொல்லி ரோஸரி மெட்ரிக் பள்ளிக்கு ஆற்றுப்படுத்தினார்கள். அங்கே போய்ப் பார்த்தால் வானொலி நிலையம் பக்கத்தில் ஒரு மாநகராட்சிப்பள்ளி இருக்கிறதென்றார்கள். இதேதெடா வம்பு என்று மீண்டும் பழையபடி ரபேல் பள்ளிக்கே வந்து ஒழுங்காக வாக்காளர் பட்டியலில் தேடினால் பிற்சேர்க்கையில் என் பெயர் இருந்தது! யுரேகா!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சின்ன புள்ளி விவரம். எங்கள் வாக்குச் சாவடியில் மொத்தம் 922 பேர் வாக்காளர் பட்டியலில் உள்ளனர். நான் போய் ஓட்டுப்போடும்போது சரியாக மதியம் மணி பன்னிரண்டு. அப்போது எனது வரிசை எண் 234 என்பதை கவனித்தேன். என்னைத் தவிர ஓட்டுப்போட அங்கு யாரும் இல்லை என்பதையும் கவனித்தேன். சாயங்காலம் வரை ஓட்டுப் போட்டிருந்தாலும்கூட என் கணக்குப்படி 400 தாண்டாது. அப்படியென்றால் 43% தான் ஓட்டுப்பதிவு. ஹ¤ம்!&lt;br /&gt;&lt;br /&gt;சாயங்காலம் நம் தோஸ்து கிருபாவிடம் தொலைபேசும்போது அவரும் முதல்முறை ஓட்டுப்போடுவதாகச் சொன்னது ஆறுதல். என்னைவிட இரண்டு வயது மூத்த கிழவரே இப்படியென்றால்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108421359868430591?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108421359868430591/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108421359868430591' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108421359868430591'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108421359868430591'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/05/blog-post.html' title='போடுங்கம்மா ஓட்டு!'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108344062101698758</id><published>2004-05-01T12:43:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:47.419-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>பலநாள் கனவு</title><content type='html'>நண்பர்களே! இன்று நான் மிக மகிழ்ச்சியாய் இருக்கிறேன். எனது பலநாள் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. என்னறையில் மிடுக்குடன் பொலிகிறது ஒரு அழகான புத்தக அலமாரி. &lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் பரம்பரையில் படிக்கிற வழக்கம் நிறைய இருந்திருக்கிறது. நாங்கள் கூட்டுக்குடும்பமாய்க் குடியிருந்த வீட்டில் முன்னறை அலமாரி உச்சியில் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் என்று கல்கி சமாசாரங்கள் குவிந்திருக்கும். அவையெல்லாம் கல்கியில் தொடராக வரும்போது எங்கள் பாட்டி சேமித்து வைத்தது (மணியம் முகப்புப்படம் போட்டு வினு அற்புதமாக வந்தியத்தேவனையும், பழுவேட்டரையரையும், நந்தினியையும், நாகநந்தியையும், பரஞ்சோதியையும் உயிர்ப்பித்த காலத்தியது). நாவல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத காலத்தில் நான் ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனிக் கதை என்று நினைத்துக்கொண்டு பொ.செ. இரண்டாம் பாகத்தில் வரும் "உடைந்த படகு" அத்தியாயத்தைத் திரும்பத் திரும்பப் படித்து மனனம் செய்தது எல்லாம் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;இதுவன்றி, எங்கள் அத்தை பள்ளியாசிரியையாதலால் அடிக்கடி ஜெயகாந்தன், சிவசங்கரி, லஷ்மி என்று வீட்டிற்குள் வந்துபோகும் நாவல்களையும் மோப்பம் பிடித்திருந்தேன். நான், எனது அண்ணன் (சிலந்திதான் என் அண்ணன் என்று பலருக்கும் தெரியும்தானே!), என் அத்தை பையன் (இப்போது உயிருடன் இல்லை :-() மூவரும் தனியொரு உலகில் சஞ்சரித்து வந்தோம். சரியாகச் சொல்லப்போனால் சம வயதினரான என் அண்ணனும், அத்தை பையனும் சஞ்சரித்து வந்தார்கள். நான் அவர்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் அந்தச் சிறுவயதில் செய்த சுவாரசியமான விஷயங்களெல்லாம் அந்த வயதிற்கு மகத்தானவை என்றே எண்ணுகிறேன். கையெழுத்துப் பத்திரிகை எழுதுவதாகட்டும், கவிதைகள் எழுதுவதாகட்டும், நகைச்சுவை நாடகங்கள் புனைவதாகட்டும், காவியங்கள் செதுக்குவதாகட்டும், அட! நிஜமாகவே என் அண்ணன் ரமணியும் அத்தை பையன் ஆனந்தும் தலா ஒரு சரித்திரக் கதை எழுதினார்கள் ஐயா! நாலு பாகங்கள் வைத்து என் அண்ணன் எழுதிய காவியத்தில் அரிமர்த்தன பாண்டியன், அழகரசன், திருத்தொண்டன் என்று பல சுவாரசியமான பாத்திரங்கள். ஆனந்த் எழுதின கதை முற்றுப் பெறவில்லை என்பது மட்டும் நினைவில் இருக்கிறது. நான் கூட "ஜந்தாம் அத்தியாயம்" என்றெல்லாம் தப்புத் தப்பாக எழுதி நாவல் ஒப்பேற்றியிருக்கிறேன். இந்தக் காவியங்களெல்லாம் காலத்தினால் அழிந்துபோய்விட்டன :-) கையெழுத்துப் பத்திரிகைதான் இன்னும் மிச்சம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் படித்த பள்ளியின் நல்லாசிரியர்களுக்குப் புத்தகங்களின் மகிமை தெரிந்திருந்தது. அதனால் அவர்கள் ஆண்டுதோறும் முதன்மை பெறும் மாணவர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் பரிசு வெல்லும் மாணவர்களுக்கும் புத்தகங்களை அள்ளி அள்ளிப் பரிசளித்து வந்தார்கள். படிப்புப் புலிகளான என் அண்ணனும் அத்தை பையனும் ஒவ்வொரு ஆண்டுவிழாவின்போதும் ரிக்ஷா வைத்து எடுத்துவரும் அளவுக்குப் புத்தகங்கள் பரிசாய் வெல்வதுண்டு. அந்த ஜோதியில் நானும் கூடிய சீக்கிரமே ஐக்கியமாகிவிட்ட காரணத்தினால் எங்கள் வீட்டில் கலைமகள் தாண்டவமாடிக் கொண்டிருந்தாள். வகை வகையாய்ப் புத்தகங்கள் வைத்துக்கொண்டு அவற்றை வீட்டில் எங்கு வைப்பது என்று தெரியாமல் தடவுவோம். சின்ன வீட்டின் குறுகிய அலமாரிகளில் அடங்காத புத்தகங்கள் டிரங்குப் பெட்டிகளிலும், தோல்பைகளிலும், பரண்களிலும் தஞ்சம் புகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் எங்கள் கனவு உருவானது. எங்களிடமிருந்த இந்தப் புத்தகங்களையெல்லாம் சேர்த்து ஒரு நூலகம்போல் அமைக்கவேண்டும். தூசு படியாதிருக்க ஒரு அலமாரி. மரத்தாலானது. கண்ணாடிக் கதவுகள் வைத்தது. அத்தனை புத்தகங்களையும் பட்டியலிட்டெல்லாம் வைத்திருந்தேன். ஆனால் எங்கள் நூலகக் கனவு சிறுபிள்ளைகளின் எத்தனையோ வண்ணக்கனவுகளைப் போலவே உயரே வெகு உயரே எட்டாதிருந்தது. அவ்வப்போது மானசீகமாய்த் தொட்டுப் பார்த்துக்கொள்வேன். &lt;br /&gt;&lt;br /&gt;கனவு கனவாகவே இருக்க, வாழ்வின் நிதர்சனத்தில் வீடு தாளாத புத்தகக்குவியல் என்றாவது ஒரு நாள் ஒழிக்கப்பட்டுவிடும் என்பது மெல்லப் புலனானது. ஒரு சபிக்கப் பட்ட நாளில் எங்கள் பொக்கிஷங்கள் பருமனைக் கொண்டு மதிப்பிடப் பட்டு, பழைய புத்தகக்கடைக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன. பொன்னியின் செல்வனும் சிவகாமியும் அத்தையின் பள்ளி நூலகத்திற்கு வழியனுப்பி வைக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று எங்கள் கனவை நனவாக்கியிருக்கிறேன். தூசு படியாதிருக்க ஒரு அலமாரி. மரத்தாலானது. கண்ணாடிக் கதவுகள் வைத்தது. எங்கள் கனவு நூலகம். என் கண்முன் எழுந்து நிற்கிறது. அதனை எவ்வளவோ அருமையான புத்தகங்கள் அலங்கரிக்கின்றன. இன்று நான் மிக மகிழ்ச்சியாய் இருக்கிறேன். பொன்னியின் செல்வன் புத்தகத்தின் வாசமும் சித்திரங்களும் இலேசாய் என் மனதில் நிழலாடிக் கொண்டிருக்க...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108344062101698758?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108344062101698758/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108344062101698758' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108344062101698758'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108344062101698758'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/05/blog-post_01.html' title='பலநாள் கனவு'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108289206573395469</id><published>2004-04-25T04:19:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:47.420-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>ஜெயமோகன் ஒரு நாவலாசிரியரே இல்லை!</title><content type='html'>பா.ராகவனுக்கு இலக்கிய பீடத்தின் சார்பாக நடத்தப்பட்ட நாவல் போட்டியில் முதற்பரிசு கிடைத்தது தெரிந்திருக்கும். அந்தப் பரிசு வழங்கும் விழா இன்று காலை சென்னை நாரத கான சபா சிற்றரங்கில் நடைபெற்றது. கண்டிப்பாக பத்ரி இதைப்பற்றி புகைப்படங்களோடு எழுதுவாரென்று நினைக்கிறேன். அதனால், என் மனதிற்பட்ட சில விஷயங்கள் மட்டும் இங்கே. (ஆயிரத்தெட்டு disclaimerகள் போட்டுக்கொள்வது எனக்கு ஏற்புடையதல்ல. கீழ்க்கண்டது என் கருத்து).&lt;br /&gt;ராகவன் அண்ணாச்சிக்கு மற்றொரு முறை வாழ்த்துக்கள். விழாவுக்குத் தலை தாங்கிப் பேசியவர் சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குனர் நடராசன். இலக்கிய பீடத்தை நடத்திவரும் முதிய எழுத்தாளர் விக்கிரமன் பேசினார். மேலும் விழாவில் "கலைமகள்" கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், மாலா உத்தண்டராமன், எழுத்தாளர் அனுராதா ரமணன் ஆகியோர் பேசினர். ராகவனின் ஏற்புரையுடன் நிகழ்ச்சி முடிந்தது. பத்ரி, வெங்கடேஷ், பிரகாஷ், நாகூர் ரூமி, நம்ம தோஸ்து கிருபாஷங்கர் எல்லாரும் வந்திருந்தனர். &lt;br /&gt;ராகவனின் எளிமையான ஏற்புரை தவிர எனக்கு வேறு எந்தப் பேச்சும் சுவாரசியப்படவில்லை. விக்கிரமன் மிகவும் முதிய வயதினர். அதனால் சொன்ன விஷயங்கள் மறந்துபோயும், சொல்லாத விஷயங்கள் சொன்னதாக நினைத்தும் ஓரிரு முறை குழம்(ப்)பினார். மற்றபடி வெளிப்படையாகப் பேசுகிறார். நடராசன் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். விக்கிரமனும் சரி, நடராசனும் சரி, பலமுறை எங்கெங்கோ போய்விட்டு, பேசவந்த விஷயத்துக்கு எப்படித் திரும்ப வருவது என்று தத்தளித்துக்கொண்டிருந்தனர். உத்தண்டராமன் இதில் மறுகோடி. பேசவந்த விஷயத்தை எழுதிக்கொண்டுவந்து படித்துவிட்டார். கனமான விஷயங்கள் பேசப்புகும்போது இது தேவைப்படலாம். ஆனால் அவர் கூறிய செய்திகளுக்கு ஏன் எழுதியெல்லாம் கொண்டுவரவேண்டும் என்று தெரியவில்லை. மேடைப்பேச்சில் பரிச்சயம் இல்லாமல் இருந்திருக்கலாம். நீண்டகாலத்திற்குப் பிறகு "இந்த அவர்களே, அந்த அவர்களே, நொந்த அவர்களே" மாதிரியான பேச்சும் இவரிடம்தான் கேட்டேன். வழக்கம்போல் துறுதுறுவென்று இருந்த நமது கிருபாஷங்கர் உத்தண்டராமன் பேச்சின்போது என்ன செய்துகொண்டிருந்தார் என்று நான் சொல்லமாட்டேன். &lt;br /&gt;இப்போது நிகழ்ச்சியின் முக்கியமான கட்டத்திற்கு வருகிறோம். அனுராதா ரமணன் பேசிக்கேட்பது எனக்கு இதுவே முதல் தடவை (நான் என்னவோ தாத்தா மாதிரியும், ஆயிரம் மேடை பாத்தாமாதிரியும்). ஜனரஞ்சகமான எழுத்தாளர்; அதனால் சுவாரசியமாகப் பேசுவார் என்று எண்ணியிருந்தேன். அவர் பேசவந்த தலைப்பு "விதவிதமான நாவல்கள்". தமிழில் நாவல் இலக்கியம் பற்றி ஒரு அலசல் மாதிரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை அவர் மிகுந்த சிரத்தை எடுத்துச் செய்திருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்தவரை சன் தொலைக்காட்சியில் மெட்டி ஒலி பார்த்துக்கொண்டே எழுதியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இவ்வளவு ஆழமான (!) ஆராய்ச்சிக்கட்டுரை எழுதியிருக்க வாய்ப்பே இல்லை. &lt;br /&gt;நானொன்றும் இலக்கியவாதி கிடையாது. அவ்வளவாகப் படைப்பிலக்கியப் பரிச்சயமும் கிடையாது. தமிழ் நாவல் இலக்கியத்தைக் கொஞ்சம் வேடிக்கை பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். அந்த நிலையில் வைத்துப் பார்த்தாலும் அவரது பேச்சு மிகவும் சுமாராயும், ஆழமற்றதாயும் இருந்தது. வந்தவுடனே, நம் தமிழில் இருக்கிற சிறந்த நாவலாசிரியர்களைப் பற்றிய ஒரு அறிமுகம் செய்வது போல ஒரு கையேட்டைத் தயாரித்து இனிவரும் தலைமுறைக்கு வழிகாட்டி போல அளிக்க வேண்டும் என்று சொன்னார். எனக்கு அந்தக் கருத்து ரொம்பப் பிடித்திருந்தது. அப்படி ஒரு கையேடு இருந்தால் என்னைப் போன்றோருக்கு நல்லதோர் அறிமுகம் கிடைக்கும். அடடா! பரவாயில்லையே என்று அவர் பேசுவதை ஊன்றிக் கவனிக்கத் தொடங்கினேன். &lt;br /&gt;அவர் தமிழ் நாவல் இலக்கியச் சந்ததியை ஏழு தலைமுறைகளாகப் பிரித்திருப்பதாகச் சொன்னார். ஏதோ புதிதாய் இருக்கிறதே என்று நிமிர்ந்தேன். ஒவ்வொரு தலைமுறை எழுத்தாளர்களையும் பட்டியல் போட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. யாராரோ எங்கெங்கோ வருகிறார்கள். பட்டியலில் கல்கியும், நா.பாவும், அகிலனும் ஒரே தலைமுறையில் வருகிறார்கள். இது காலக்கிரமாக இருக்குமென்று தோன்றவில்லை. சாரு நிவேதிதாவும், தேவிபாலாவும், பா. ராகவனும், அருண் சரண்யாவும், ஆர்னிகா நாசரும் ஒரே தலைமுறையில் வருகிறார்கள். அதனால் இது எழுதும் பாணி சார்ந்த பாகுபாடாகவும் தெரியவில்லை. தமிழ்வாணன், ராஜேந்திரகுமார், ராஜேஷ்குமார், தேவிபாலா இவர்களெல்லாரும் இந்த முக்கியமான பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு நாவல் உலகில் என்ன செய்திருக்கிறார்களென்று யாராவது சொல்லுங்களேன் (பாக்கெட் நாவல், மெகா சீரியல், ஒரு பக்கக் கட்டுரை, XXX YYY ZZZ செய்வது எப்படி, 'ஙே' இதெல்லாம் பங்களிப்புகள் என்று ஏற்றுக்கொண்டால் தவிர). &lt;br /&gt;அசோகமித்திரன் என்ன பாவம் செய்தார் அய்யா (அம்மா!)? மேற்கண்ட பெயர்களெல்லாம் தகுதிபெறும்போது அசோகமித்திரன் எழுத்துக்கள் அந்த அளவுக்குக் கூடவா வக்கில்லாமல் போய்விட்டன? பிரபஞ்சன், வல்லிக்கண்ணன், பொன்னீலன், அட அதெல்லாம் மறந்துடுங்க! சுந்தர ராமசாமி??!! ஜெயமோகன்??!! அட, உங்களுக்குப் புரியாத இலக்கியமெல்லாம் சொல்லமாட்டீர்களா, சரி! சிவசங்கரி??!! இதில் புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள், திராவிட எழுத்தாளர்கள் பற்றியெல்லாம் மூச்! கி.ரா. கூட விடுபட்டுவிட்டார் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;கூட்டத்திலேயே சிலர் கேள்வியெழுப்ப, அதற்கு அனுராதா ரமணனும் விக்கிரமனும் அளித்த பதில், "ஆயிரம் பேரு இருக்காங்க! எல்லார் பேரும் சொல்லமுடியுமா?!". அய்யா! ஆயிரம் பேர் சொல்லச் சொல்லவில்லை. ஆயிரத்தில் சிறந்த அறுபது பேர், வேண்டாம், இருபத்தைந்து பேர் சொல்லுங்கள்! சொல்வது நியாயமாகச் சொல்லுங்கள். அட்டெண்டென்ஸ் வரிசையில் சொல்வதற்கு ஆறாம் கிளாஸ் படித்திருந்தால் போதும். ஆராய்ச்சிக்கட்டுரையெல்லாம் வேண்டாம். இந்த மாதிரியானதொரு கையேட்டைத் தான் அனுராதா ரமணன் குறிப்பிட்டார் என்றால் அப்படியொரு கையேட்டைத் தயாரிக்கவே தேவையில்லை. நாங்களே படித்துத் தெரிந்துகொள்ளுவோம். போய்வாருங்கள். (இந்தப் பதிவின் தலைப்பு வேண்டுமென்றே கூட்டம் ஈர்ப்பதற்கு என்ற ஒரு கேவலமான உள்நோக்கத்துடன் கொடுக்கப்பட்டது).&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108289206573395469?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108289206573395469/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108289206573395469' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108289206573395469'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108289206573395469'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/04/blog-post.html' title='ஜெயமோகன் ஒரு நாவலாசிரியரே இல்லை!'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108284009768505653</id><published>2004-04-24T13:54:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:47.421-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>சில்லறைப்பயல்கள்</title><content type='html'>தேர்தல் திருவிளையாடலில் சமீபத்திய செய்தி:&lt;br /&gt;சுயேச்சை வேட்பாளர் தேவதாஸ் என்பவர் தனது வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, அதற்குரிய கட்டணமான 10000 ரூபாயையும் ஒரு ரூபாய் நாணயங்களாக மூட்டைகளில் கட்டி எடுத்து வந்திருக்கிறார். இந்த வெட்டி வேலையை மெனக்கெட்டு செய்துவிட்டு, மனு தாக்கல் செய்ய ஒரு நாள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் இந்த மூட்டைகளைத் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்திருக்கிறார். பாவம் மனுஷன்! ஆடிப்போய், இப்போது இதை எண்ணுவதற்கு நேரமில்லை. இவற்றை மாற்றி ரூபாய் நோட்டுகளாகக் கொண்டுவாருங்கள் என்று சொல்லியிருக்கிறார். நம்ம தேவதாஸ், மறுத்திருக்கிறார். தேர்தல் அதிகாரி கண்டிப்பாகச் சொல்லிவிடவே, எங்காவது வட்டிக்கு எடுத்துவந்து கட்டுகிறேன் என்று சொல்லி, வெளிவந்திருக்கிறார். அவர் செய்த கூத்துக்கு அவர் சொல்லும் காரணம் "நம் நாட்டு அரசாங்கம் அச்சிட்டு, புழக்கத்திலிருக்கும் ஒரு ரூபாய் நாணயத்திற்கு நமது அரசாங்க அலுவலகத்தில் எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்று தெரிந்துகொள்ளத்தான்!". இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒரு ரூபாய் நாணயத்திற்கு மதிப்பே இல்லை என்று தெளிவாகிறதாம். அவர் இறுதிவரை வேறு பணம் கொண்டுவராததால் தேர்தல் அதிகாரி அவரது மனுவை ஏற்றுக்கொண்டு, சில்லறையை எண்ணிப்பார்த்தபின் ஒரு ரூபாய் குறைந்தாலும் அவரது மனு நிராகரிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். &lt;br /&gt;என்னைப் பொறுத்தவரை அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே இல்லை. இவரைப் போன்ற மேல்மாடி காலியான கேசுகள் ஏற்கனவே எக்கச்சக்கமாக அரசியலில் உலா வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் புதிய இம்சைகள் எதற்கு? கிறுக்குத்தனமான விதண்டாவாதங்கள் மட்டுமே குடியரசுக்கொள்கைகள் என்று மீண்டும் மீண்டும் அறுதியிட்டு உரைக்கின்றனர் நமது தாய்த்திருநாட்டின் அரசியல்வா(ந்)திகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108284009768505653?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108284009768505653/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108284009768505653' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108284009768505653'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108284009768505653'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/04/blog-post_24.html' title='சில்லறைப்பயல்கள்'/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108196780921683439</id><published>2004-04-14T11:36:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:47.421-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'></title><content type='html'>அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.&lt;br /&gt;********&lt;br /&gt;இன்றைக்கு அலுவலகம் செல்லவேண்டியிருந்ததால் நல்ல வேளையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்க்கவேண்டிய கொடுமை நேரவில்லை. ஆனாலும் சாப்பிடும்போது சன் தொலைக்காட்சியில் பட்டிமன்றம் பார்த்துத் தொலைத்தேன். தலையெழுத்து. பேராசிரியர்கள், அறிஞர்கள் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் அடிக்கும் கூத்து இருக்கிறதே! தலைப்புக்கும் பேச்சுக்கும் கிஞ்சித்தும் சம்மந்தம் இல்லாமல் எப்படி இவர்களால் மனசாட்சியில்லாமல் உளறமுடிகிறது? ராஜா என்று ஒருவர் இருக்கிறார். தவறாது சன் தொலைக்காட்சியின் பட்டிமன்றங்களில் ஆஜராகிவிடுவார். ஒரு வார்த்தைகூட தலைப்புக்குப் பொருத்தமாகப் பேசமாட்டார். ஒரே குறிக்கோள் கைதட்டல் பெறுவது. அதனால் நன்கு சிரிக்கவைக்குமாறு பேசுவார். எரிச்சலூட்டும் இன்னொருவர் நடுவர் சாலமன் பாப்பையா. சுவாரசியம், நகைச்சுவை ஆகியன தெறிக்கும் இவரது பேச்சில். ஆனால் அணியினர் பேசிய கருத்துக்களைப் புறந்தள்ளிவிட்டுத் தன் சொந்தக் கருத்தைச் சொல்லி பட்டிமன்றத்தை முடித்துவைக்கும் போக்கு உண்டு. இத்தகைய பட்டிமன்றங்கள் வெறும் நகைச்சுவைக்குத் தான். வேறெதற்கும் பிரயோஜனமில்லை. இதற்கும் காமெடி டைம், சகலை ரகளை, பொய்யல்ல போட்டுக்கொடு, டேக்கிட் ஈஸி ஊர்வசி போன்ற நிகழ்ச்சிகளுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.&lt;br /&gt;********&lt;br /&gt;ஆய்த எழுத்து பாடல்கள் கேட்டீர்களா? எனக்கு ரஹ்மான் மீது ஒரு பெரிய கோபம் உண்டு. இந்தப் படத்தில் 'சண்டைக்கோழி' என்று ஒரு பாட்டு வருகிறது. இசை கேட்க நன்றாயிருக்கிறது. பாடியிருப்பவர் மதுஸ்ரீ என்ற ஒரு பெண்மணி. நிஜமாகவே மதுவில் தோய்த்த மாதிரி ஒரு குரல். ஆனால் இங்கே மிதிபட்டு சாவது தமிழ் என்ற ஒரு பாவப்பட்ட ஜீவன். மொழி ஒரு இழவும் புரியாமல் அந்தப் பாடகி என்ன உணர்ச்சியோடு பாட முடியும்? இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் சொல்லித்தந்த உணர்ச்சியை வாந்தியெடுப்பது அவசியம் தானா? கடமுடாவென்று அவர் தமிழ் வார்த்தைகளைத் தாளிக்கும்போது கேட்கக் கஷ்டமாயிருக்கிறது. நல்ல குரல்வளம் உள்ள தமிழ்ப்பாடகிகளுக்கு அப்படியொரு பஞ்சம் ஏதும் ஏற்பட்டுவிட்டதாக எனக்குத் தெரியவில்லை. அதே படத்தில் சுஜாதா ஒரு பாட்டு பாடியிருக்கிறார். கேட்டுப்பாருங்கள் (அதில் அத்னான் சாமி ஆண் குரல் என்பது பரிதாபத்துக்கு உரிய இன்னொரு விஷயம்). எதற்கு இப்படியெல்லாம் ஸ்டண்ட் அடிக்க வேண்டும் நம் இசையமைப்பாளர்கள்? ஏற்கனவே ஆஷா போன்ஸ்லே, சாதனா சர்கம், உதித் நாரயண் என்று பல பேரை வளர்த்துவிட்டாயிற்று. இன்னும் என் காதுகளில் 'தேபாவளிப் பண்டிகை'யும், 'பெரியம்மாவின் பென்னை ரசிக்கலா'மும்  'காத்திலிக்கும் பென்னின் கய்கள் தொட்டிநீட்டினா'லும் எரிந்துகொண்டிருக்கிறது. இதில் நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் புதுக்கொலைகள் வேறு. எஸ்.பி.பி தெலுங்குக்காரர், டி.எம்.எஸ் சௌராஷ்ட்ராக்காரர். ஆனால் இவர்கள் தமிழ் பாடும்போது மொழி புரிந்துதான் பாடினார்கள். அதனாலேயே இன்றும் அந்தப் பாடல்கள் நிற்கின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5808889-108196780921683439?l=suvadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suvadu.blogspot.com/feeds/108196780921683439/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5808889&amp;postID=108196780921683439' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108196780921683439'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5808889/posts/default/108196780921683439'/><link rel='alternate' type='text/html' href='http://suvadu.blogspot.com/2004/04/blog-post_14.html' title=''/><author><name>Shankar</name><uri>http://www.blogger.com/profile/14294804329820746469</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://thumb19.webshots.net/t/16/17/7/11/35/2745711350083572459KLqUAO_th.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5808889.post-108154267594277719</id><published>2004-04-09T13:26:00.000-07:00</published><updated>2007-03-31T07:05:47.422-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>ஒண்ணு இந்தா இருக்கு</title><content type='html'>வெங்கட் போஸ்ட்நியூக் வெச்சு புது வீடு கட்டி நல்ல விஷயம் பண்ணப்போறாருன்னு செய்தி உலவிகிட்டு இருக்கு. அதுல கார்த்திக்ராமாஸ¤ம் ஷங்கரும் கூட்டாளியாவறேன்னு சொல்லியிருக்காங்க. இந்த நெலமையில வருங்காலத்துல வெங்கட்டண்ணன் படப்போற அவஸ்தை பத்தி ஒரு சின்ன முன்னோட்டம். சொந்த சரக்கு கெடயாது. வலையில சுட்டது. பழைய மொந்தையில புது கள்ளு. வாழப்பழ சோக்கு நெனவுல வெச்சிக்கிங்க. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கட்டண்ணன் தான் கவுண்டமணி&lt;br /&gt;ஷங்கரு தான் செந்திலு&lt;br /&gt;கார்த்திக்ராமாஸ் தான் ஜூனியர் பாலையா&lt;br /&gt;மதி அக்கா தான் கோவை சரளா&lt;br /&gt;பரியண்ணன் தான் கணிப்பொறி&lt;br /&gt;உஷா அக்காவும் இருக்காங்க &lt;br /&gt;&lt;br /&gt;வெங்கட்டண்ணன
